முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எழுக, என் தாய்நாடே! -- பவா சமத்துவன்

(துபாயில் புதிய நகரம் அமைக்கும் பணியில் மாண்ட
எம் தமிழ்ச் சொந்தங்களுக்கு....)

உலக உருண்டையின்
ஒவ்வொரு மூலையும்
தமிழனின்
உழைப்பால் செழித்தது!

அட்சரேகை
தீர்க்கரேகை
மத்தியரேகை
எதுவும் அவன் கால்களைக்
கட்டிப் போடவில்லை..!

யாதும்
அவன் ஊராய் இருந்தது.
ஆனால்
உலகம் அவனை
உறவாய் கொண்டதா..?

இரத்தம் முழுதும்
உறிஞ்சப்பட்டு
ஓடுகள் மட்டும்
வெளியே
துப்பப்படுகிறது.

பர்மாவிலிருந்து
விரட்டப்பட்ட தமிழன்
காடு மலை எங்கும்
கால்நடையாகவே நடந்து
வீடு வந்து சேர்ந்தான்.

இலங்கையின்
முதல்குடியாய் இருந்த
தமிழன்
நாடற்றவனாக்கப்பட்டு
அகிலமெங்கும்
அகதியாய் திரிகிறான்...

இருண்ட கண்டத்தை
வெளிச்சமாக்கிய
தென் ஆப்பிரிக்க தமிழன்
கறுப்பர்களுக்கே ஆப்பிரிக்கா
என எழுகிற கோஷத்தால்
தெருவில் நிற்கிறான்...

ரப்பர் தோட்டங்களில்
தோல் உரிய உழைத்த
மலேசியத் தமிழன்
விசாவெல்லாம்
பிடுங்கப்பட்டு
திரும்புவதற்கும்
வழியில்லாமல்
தவிக்கிறான்...

அரபு நாட்டுத் தமிழனோ -
எண்ணெய் வயல்களெங்கும்
எலும்பு உருக
கருகித் தீய்கிறான்.

சவுதியின் நீண்ட நெடிய
பாலைவனக்களில்
இரண்டு கால் ஒட்டகமாய்
'ஷேக்குகளை'
முதுகில் சுமது
மூச்சடங்கிப் போவதும்
தமிழனே...

கல்தோன்றி
மண்தோன்றாக்
காலத்துக்கும்
முந்தோன்றிய
மூத்தக்குடி,

இந்திய மாநிலத்திற்குள்ளும்
கால்பந்தாய்
உதைபடுகிறான்...

கேரளாவிலிருந்து
துரத்தப்பட்டான்
கர்நாடகாவிலிருந்து
விரட்டப்பட்டான்.
மராட்டியத்திலிருந்து
திருப்பப்பட்டான்.!

சொந்த மண்ணாவது
சொல்லிக் கொள்ளும்படி
இருக்கிறதா...?"

தெருவுக்குத் தெரு
மலையாளி.
கடை கடையாய்
மார்வாடி.
பகுதிக்குப் பகுதி
பார்ஸிகள்.
தொழில்களெல்லாம்
குஜராத்தி.

தமிழகமே
வந்தேறிகளின்
வேட்டைக் காடாய் இருக்க
வந்தவனையெல்லாம்
வாழ வைத்துவிட்டு
வையமெங்கும் ஓடி
சோற்றுக் கலைகிறான்
தமிழன்..!

ஆட்சியதிகாரத்தில்
அயலவர்.
அலுவலகங்களில்
ஆங்கிலம்.
ஆலயங்களில்
சமஸ்கிருதம்.
அவைகளில் இசையாய்
பொழிவதும் தெலுங்கு.
எட்டுத் திக்கும்
எதிரொலிக்கிறது
இந்தி.

என்ன செய்யப்
போகிறோம் தமிழர்களே?

உனது முன்னோர்
கங்கை வென்றான்
கடாரம் கொண்டான்
என
படிப்பது இருக்கட்டும்.

நிகழ்காலமே
வருங்காலமுமனால்
தமிழன் என்றொருவன்
வாழ்ந்ததற்கு
எச்சங்கள் கூட
மிச்சமிருக்காது.

இன்னொரு சிந்துவெளி
என எடுத்துக்காட்டவும்
ஆளிருக்காது.

எழுக,
என் தாய்நாடே!
இப்போதாவது
எழுந்து நில்
என் தலைமுறையே!"
-பவா சமத்துவன்

நன்றி: 'விடுதலை' ஞாயிறுமலர்
பிப்ரவரி-1996

கருத்துகள்

முனைவர் மு.இளங்கோவன் இவ்வாறு கூறியுள்ளார்…
வணக்கம்.
உணர்வோட்டமான பா வரிகளைப் பதிவு செய்தமைக்கும்,எழுதிய
பாவலருக்கும் பாராட்டு.
மு.இளங்கோவன்
புதுச்சேரி
https://periyariam.blogspot.com இவ்வாறு கூறியுள்ளார்…
pinni edukkira prince. solrathu vilvam, kandippa nama velvom.
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
கவிதை எழுதிய கவிஞர் பவா.சமத்துவன் அவர்களுக்கு உங்கள் பாராட்டுகள் உரித்தாகின்றன.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்....

நான் வாய்விட்டு உரக்கப்பாடி மகிழ்ந்தது போல் நீங்களும் கேட்டு, பாடி மகிழ வேண்டாமா? இதோ புரட்சிக் கவிஞர் ஓங்கி ஒலித்த "சங்கே முழங்கு" பாடல் கலங்கரை விளக்கம் திரைப்படத்திலிருந்து.... KalangaraiVilakkam... சங்க நாதம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றூதூது சங்கே! பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்! வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்! எங்கள் வாழ்வும்...... -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owner - Dinam