(அழகப்பா அரசு கலைக் கல்லூரி - இளம் வணிகவியல் 1999-2002 (B.Com 99-02) மாணவ நாட்களின் நினைவாக...) ஆயிற்று பத்தாண்டுகள் அருமைத் தோழர்களே! நம்ப முடிகிறதா நம்மால்? 2002 ஏப்ரல் 25! கடைசி நாள் மாணவர்களாய் கண்கலங்க விடைபெற்று ஆயிற்று பத்தாண்டுகள்! கல்லூரி கலங்க ஆடி மகிழ்ந்த நாட்கள் அடங்கி ஆயிற்று பத்தாண்டுகள்! அடிதடி... கும்மாளம்... ஆர்ப்பாட்டம்... அந்யோந்நியம்... அத்தனையும் முடிந்ததாய் மனம் நொறுங்கி ஆயிற்று பத்தாண்டுகள்! பவநகர் ஸ்டேடியம்... அழகப்பர் நினைவிடம்... அஞ்சல் நிலையம்... வாசல் பெட்டிக் கடை... தைல மரங்கள்... சைக்கிள் ஸ்டாண்ட்... ஸ்டோர் நோட்புக்கு... நூலகத்தின் பின்னோடும் ரயில்வே சிக்குபுக்கு... கேண்டீன் கணக்கு... ஆங்காங்கே மரத்தடியில் ’கடலை’ ஆமணக்கு! மர பெஞ்ச் ஓவியம்... கரும்பலகைக் கவிதை... அன்பு, நட்பு, காதலென்று அவரவர் நினைப்புக்கேற்ப அழியாத ஒரு விதை! டுர்டுர் வண்டியில ரெண்டு வருசம் டூரு! மலை மலையாய் ஏறி, கடல் கடலா குளிச்சு, அருவி அருவியா நனைஞ்சு, விடிய விடிய முழிச்சு சீட் இல்லாட்டி சூட்கேஸு... அதுவும் இல்லைன்னா தரையி...
சிரமப்படாதீங்க... பதம் பிரிச்சு சொல்றேன். "பிரின்சு என் ஆர் சமா". இப்படித்தான் படிக்கணும்.