முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

காதல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆயிற்று பத்தாண்டுகள் அருமைத் தோழர்களே!

(அழகப்பா அரசு கலைக் கல்லூரி - இளம் வணிகவியல் 1999-2002 (B.Com 99-02) மாணவ நாட்களின் நினைவாக...) ஆயிற்று பத்தாண்டுகள் அருமைத் தோழர்களே! நம்ப முடிகிறதா நம்மால்? 2002 ஏப்ரல் 25! கடைசி நாள் மாணவர்களாய் கண்கலங்க விடைபெற்று ஆயிற்று பத்தாண்டுகள்! கல்லூரி கலங்க ஆடி மகிழ்ந்த நாட்கள் அடங்கி ஆயிற்று பத்தாண்டுகள்! அடிதடி... கும்மாளம்... ஆர்ப்பாட்டம்... அந்யோந்நியம்... அத்தனையும் முடிந்ததாய் மனம் நொறுங்கி ஆயிற்று பத்தாண்டுகள்! பவநகர் ஸ்டேடியம்... அழகப்பர் நினைவிடம்... அஞ்சல் நிலையம்... வாசல் பெட்டிக் கடை... தைல மரங்கள்... சைக்கிள் ஸ்டாண்ட்... ஸ்டோர் நோட்புக்கு... நூலகத்தின் பின்னோடும் ரயில்வே சிக்குபுக்கு... கேண்டீன் கணக்கு... ஆங்காங்கே மரத்தடியில் ’கடலை’ ஆமணக்கு! மர பெஞ்ச் ஓவியம்... கரும்பலகைக் கவிதை... அன்பு, நட்பு, காதலென்று அவரவர் நினைப்புக்கேற்ப அழியாத ஒரு விதை! டுர்டுர் வண்டியில ரெண்டு வருசம் டூரு! மலை மலையாய் ஏறி, கடல் கடலா குளிச்சு, அருவி அருவியா நனைஞ்சு, விடிய விடிய முழிச்சு சீட் இல்லாட்டி சூட்கேஸு... அதுவும் இல்லைன்னா தரையி...

காதல் சுவடு

கவிஞர் ஏ.ராஜசேகரின் கவிதைகளுக்கு காட்சி வடிவம் ... இந்த கவிதைப்படம் உருவான, உருவாக்கிய தடங்கள் பின்னர் ஒரு பதிவில்.... அதுவரை காதல் சுவடு பதியட்டும் உங்கள் நெஞ்சில்...

'பெண் ஏன் அடிமையானாள்?' - தந்தை பெரியார்

தந்தை பெரியாரின் மிகவும் இன்றியமையாத படைப்புகளில் பெண்ணுரிமைக்கான விளக்கமாக அமையக்கூடிய சிறப்புடையது "பெண் ஏன் அடிமையானாள்?" என்னும் நூலாகும். அச்சில் பல பதிப்புகள் வெளிவந்து பல லட்சம் மக்களை சென்றடைந்திருக்கும் இந்த பெண்ணுரிமை ஆவணம் மின்னூலாக வெளிவந்தால் நன்று என்று பல தரப்பு நண்பர்களும் தோழியர்களும் வேண்டுகோள் விடுத்திருந்தனர். நூலின் அச்சுக்கோர்ப்பு மின் வடிவம் கிடைக்காததால் அதனை மின்னூலாக்கும் பணி தடைப்பட்டுவந்தது. தந்தை பெரியாரின் எழுத்துக்களை மின்னூலாக்கி இணையத்தில் வெளியிடுவதற்கான ஒப்புதல் தமிழர் தலைவர் அய்யா கி.வீரமணி அவர்களால் வழங்கப்பட்டதோடு, பெரும் ஊக்கமும் அளித்து அந்தப் பணி நடைபெற பெரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். பெரியார் இணையங்கள் சார்பில் அப்பணி நடைபெற்று வருகிறது. அதன் முதல் கட்டமாக 'விடுதலை' நாளிதழின் 72-ஆம் ஆண்டை முன்னிட்டு கடந்த 1-ஆம் தேதி periyar.org தளத்தில் 'பெண் ஏன் அடிமையானாள்?' என்ற இந்நூல் மின்னூலாக தரவேற்றப்பட்டுள்ளது. இதன் உடனடித் தேவை கருதி முழு நூலையும் (80 பக்கங்கள்) ஸ்கேன் செய்து தந்த திரு.பிரபாகரன் நம் நன்றிக்குரியவர். ப...

காதல் பற்றிப் பேசுகிறார் தந்தை பெரியார்...

இன்றைய தினம் காதலைப் பற்றிப் பேசுகிறவர்கள், அன்பு, நேசம், ஆசை, காமம், மோகம் என்பவை வேறு; காதல் வேறு என்றும், அது ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் தங்களுக்குள் நேரே விவரித்துச் சொல்ல முடியாத ஒரு தனிக் காரியத்துக்காக ஏற்படுவதாகும் என்றும், அதுவும் இருவருக்கும் இயற்கையாக உண்டாகக் கூடியதாகும் என்றும், அக்காதலுக்கு இணையானது உலகத்தில் வேறு ஒன்றுமில்லை என்றும், அதுவும் ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணிடமும், ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணிடமும் மாத்திரந்தான் இருக்க முடியும் என்றும், அந்தப்படி ஒருவரிடம் ஒருவருக்குமாக இருவருக்கும் ஒரு காலத்தில் காதல் ஏற்பட்டுவிட்டால், பிறகு எந்தக் காரணங்கொண்டும் எந்தக் காலத்திலும் அந்தக் காதல் மாறவே மாறாது என்றும், பிறகு வேறொருவரிடம் காதல் ஏற்பட்டுவிட்டால், அது காதலாயிருக்க முடியாது; அதை விபசாரமென்றுதான் சொல்ல வேண்டுமே ஒழிய, அது ஒருக்காலும் காதலாகாது என்றும், ஒரு இடத்தில் உண்மைக்காதல் ஏற்பட்டுவிட்டால், பிறகு யாரிடமும் காமமோ விரகமோ மோகமோ ஏற்படாது என்றும் சொல்லப்படுகின்றன. அழகைக்கொண்டோ, பருவத்தைக்கொண்டோ, அறிவைக் கொண்டோ, ஆஸ்தியைக்கொண்டோ, கல்வியைக்கொண்டோ, சங்கீதத்தைக் கொண்டோ, சாயலைக்கொண்டோ...