முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

திராவிடத்தை விட்டுவிலகுகிறாரா தளபதி ஸ்டாலின்?

சு ம்மா ஆரியம், திராவிடம் என்று ஓட்ட முடியாது என்பதால் தளபதி தனது பிறந்தநாளை வேறு (கார்ப்பொரேட்) பாணியில் அய்.நா. மன்றம் அறிவித்துள்ள தேதிகளின்படி ஒரு நாளைக் குறிப்பிட்டு கொண்டாடியுள்ளாராம். சொல்லி சந்தோசப்படுகிறது குமுதம் ரிப்போர்ட்டர்! அதாவது திராவிட இயக்கக் கொள்கைகளைக் கைவிட்டுவிட்டார்கள் என்பது தான் குமுதம் சொல்ல வருவது! அட, புத்தியற்ற பார்ப்பனியமே! தளபதி ஸ்டாலின் தன் பிறந்தநாளையொட்டி கொண்டாடியது என்ன தெரியுமா? ”பாகுபாடு ஒழிப்பு நாள் - Zero Discrimination Day” . திராவிட இயக்கத்தின் அடிப்படைத் தத்துவமும், அது தோன்றக் காரணமுமே அது தானே! பாகுபாடுகளை ஒழிக்க வேண்டுமென்பதை உறுதியேற்பாகவே நிகழ்த்திக் காட்டியிருப்பது அதன் செயல்பாட்டின் இன்னொரு பரிமாணம் (Dimension) அல்லவா? தன்னுடைய உரையிலும் தளபதி ஸ்டாலின் குறிப்பிட்டிருப்பது என்ன? ”சாதி, மதம், இனம், மொழி இவைகளைப் பொறுத்தவரையிலே யாருக்கும் பாகுபாடு இருக்கக்கூடாது. நம்முடைய தலைவர் கலைஞரின் தொலை நோக்கு தான் நம்மை போன்ற இளைஞர்களை இன்றைக்கு ஓரளவுக்கு பக்குவப்படுத்தி, தொடர்ந்து நாம் ஆற்றக்கூடிய பணிகளுக்கு உரமூட்டக்கூடிய வகையில் அமைந்திருக