முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Copy cat-ஆ பெரியார்?

சமீபத்திய இடுகைகள்

நினைவூட்டல் குறிப்புகள்

பணியில் இருக்கும்போது படித்துக் கொண்டிருக்கும்போது போனில் யாருடனும் பேசிக் கொண்டிருக்கும்போது பயணத்தில் இருக்கும்போது அடுத்தடுத்து செய்ய வேண்டியவற்றை நினைவில் வைக்கக் குறித்துக் கொள்வதுண்டு. துண்டுச் சீட்டோ டிக்கெட் பின்புறமோ சரியான குறிப்பேடோ சட்டை உள்மடிப்போ செல்பேசியோ உள்ளங்கையோ பத்துரூபாய் நோட்டோ குறிப்பெடுக்கப் பயன்படும். தேர்வு நேரங்களில் அமைதியான சூழலில் கேள்விக்கான பதிலை விட அடுத்தடுத்து செய்ய வேண்டிய பணிகளோ, நெடுங்காலத் திட்டங்களுக்கான நினைவூட்டல்களோ கேள்வித் தாளில் பிட் என்று கருத முடியாத அளவிற்கு குறித்துவைத்துக் கொள்வதுண்டு. எதுவும் இல்லையென்றால் பக்கத்தில் இருப்பவர் தான் என் குறிப்பேடு. எனக்கு மறந்துவிட்டாலும் ஏன் நினைவூட்டவில்லையென்று அவர் மேல் பொறுப்பைப் போடலாம். யாருடைய வேண்டுகோளானாலும் ’நீங்களே மீண்டும் மீண்டும் நினைவூட்டி என்னிடமிருந்து வேலையை முடித்துக் கொள்ளுங்கள். நான் தவறாக நினைக்க மாட்டேன்’ என்று சரண்டர் ஆகிவிடுவதுண்டு. நினைவூட்டுவதற்கு இவை, இவர்கள் இல்லாமல் என்ன செய்வது என்று யோசித்ததுமுண்டு. கையில் தாளோ, எழுதுகோலோ பக்கத்தில் ஆளோ செல்பேசியோ கணினியோ இருக்க முடியா

டே... உங்களுக்கெல்லாம் வெட்கமே கிடையாதா? - இந்து முன்னணி புரட்டுகளுக்கு பதில் -

ரம்ஜான் நோன்புக் கஞ்சிக்கு ஏழை எளிய இஸ்லாமியருக்கு அரசு அரிசி வழங்கக்கூடாது என்ற இந்துமுன்னணியின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது பற்றி அனைவரும் செய்திகளில் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், இந்த வெட்கங்கெட்ட இந்து முன்னணி கும்பல், உயர்நீதிமன்றத் தீர்ப்பு நகலை இணைத்து, வாட்ஸ் அப்பில் என்ன பரப்பி வருகிறது பாருங்கள். //ரம்ஜான் அரிசி இந்துமுன்னணி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதாக சில ஊடகங்கள் தவறான தகவல் இந்துமுன்னணி அமைப்பு வழக்காக ஏற்காமல் அதன் மாநில செயலாளர் குற்றாலநாதன் தொடுத்த தனிநபர் பொது நல வழக்காக ஏற்று தமிழக அரசு விளக்கமளிக்க உத்திரவிட்டு மே 7 ம் தேதி மீண்டும் விசாரணை இதோ உயர்நீதிமன்றம் உத்திரவு நகல். நீங்களே படித்து கொள்ளுங்கள். உத்திரவை நீதித்துறை மீது திணிக்கிறதா சில ஊடகங்கள் ? தமிழகத்தில் சில ஊடகங்களே நீதிபதியாவது வேடிக்கை// நமது பதில்: ஆம், இந்து முன்னணியின் கெட்ட நோக்கம் கொண்ட கோரிக்கையை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. கேடுகெட்ட மனப்பான்மையுடனும், கொடுங் குணத்துடனும் இந்து முன்னணி மதவெறி கும்பல் தொடுத்த வழக்கில் மாண்புமிகு உயர்நீதிமன்றம் மிகச் சிறப்பாகத் தீ

#restartகதைகள்

எப்போது என் கணினியை மறு தொடக்கம் (Restart) செய்வது என்பதை நான் முடிவு செய்வதில்லை. Shut down / Turn off எல்லாம் ஆண்டுக்கு ஓரிரு முறை நிகழ்ந்தாலே ஆச்சரியம் தான். பயணங்களுக்குத் தயாராகும்போதும், ‍ Hybernate / Sleep mode / Stand by இல் தான் மடிக்கணினிப் பைக்குள் புதையும். நான் உறங்கும்போது அதுவும் சற்று அயருமே தவிர, எந்நேரமும் அரைத் தூக்கத்தில் விழிப்போடு இருக்கும் வீட்டுக் காவலரைப் போல் தான் கடமையாற்றும். மறு தொடக்கம் செய்வதற்கு எனக்கொரு அளவுகோல் உண்டு. 'கண்ணைக் கட்டுது...கொஞ்சம் கேப் கொடுடா..!' என்று என் கணினி என்னிடம் சொல்வதற்கு மைக்ரோசாப்டுக்குத் தெரியாத மொழி ஒன்று உண்டு. மைக்ரோசாப்டுக்குத் தெரிந்த மொழி என்பது, 'கடுப்பாகி', அதுவே தானே மறுதொடக்கம் செய்வது! நான் சொல்வது அதற்கும் முந்தைய நிலை. நான் பயன்படுத்தும் தமிழ் எழுதி ‍ யை இயக்குவதற்கு F3 பொத்தானை அமுக்கினால், எப்போது தமிழ் எழுத்து வராமல், டொய்ங் என்ற ஒலியோடு Find பட்டி திறக்கிறதோ, அது தான் என் மடிக்கணினி எனக்குத் தன் அயர்வைத் தெரிவிக்கும் முதல் தருணம். அப்போது நான் கவனித்துவிட வேண்டும். எனினும் இரக்கமற்றவனாய், உடனே

கொரோனா கற்றுக் கொடுக்கும் பாடங்கள்!

கொரோனா காலம் நமக்கு முக்கியமான பாடம் ஒன்றை எடுத்துக் கொண்டிருக்கிறது. குறுகிய காலம் - நெடுங்காலம் என்று இரண்டு போக்குகளில் அந்தப் பாடம் நமக்குப் பயன்படும். எது அடிப்படைத் தேவை? எது அன்றாடத் தேவை? எது எதெல்லாம் வாய்ப்பிருந்தால் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது? எவைவெல்லாம் அவசியமில்லாத செலவுகள்? எவை ஆடம்பரச் செலவுகள்? என்று நம் மனதிற்குள் இந்நேரம் ஒரு பெரிய பட்டியல் உருவாகியிருக்க வேண்டும். #குறுகிய_காலப்_பாடம் : வெள்ளம் சூழும் நேரத்தில் அவசரத்திற்கு, அவசியமான பொருட்களை எடுத்துக் கொண்டு பாதுகாப்பாக எப்படி வெளியேறுவோமோ, அப்படியான சூழல் தான் இப்போது! செம்பரம்பாக்கத்தம்மன் புண்ணியத்தில் அரிதாக, ஒன்றிரண்டு புயல், வெள்ளக் காலங்களைத் தவிர பேரிடர் கால அனுபவம் நமக்கு மிகவும் குறைவு. எப்போதும், இதமான, மிதமான கால நிலைகளையும் அனுபவித்து சொகுசு வாழ்க்கைக்குப் பழகியவர்கள் நாம். அதையெல்லாம் கொஞ்சம் ஒதுக்கிவைத்துவிட்டு, காய் இல்லை, கறி இல்லை, ஃபிரஷ்ஷா கிடைக்கவில்லை என்றெல்லாம் ரொம்ப அலட்டிக் கொள்ளாமல், கஞ்சியோ, கூழோ குடித்துக் கொண்டிருந்தாலும், அந்த அளவு தான் அரசு ஊற்றும் என்ற சூழல் வந்தாலும், அதில் தாக்

நெட்டிலிங்க மரமும் பாவாடை அணிந்த சிறுமியும்

கணிதத்தின் அடிப்படையைப் புரிய வைக்க முயலாமல் கணக்கு போடுவதற்கு எளிய முறை என்று பல வழிமுறைகளை பயிற்றுவிப்பதைக் கவனித்திருக்கிறீர்களா? எங்கள் சிறு வயதில்... பள்ளிக்கு பல்வேறு துறைகளைச் சார்ந்தோர் வருவார்கள். அவரவர் முயற்சியில் பல புதிய விசயங்களை அறிமுகப்படுத்துவார்கள். உண்மையில் அப்படிப்பட்ட அறிமுகங்கள் ஆர்வத்தை விதைத்தன என்பதை மறுப்பதற்கில்லை. மேஜிக் செய்பவர், அறிவியல் விளக்கங்கள் சொல்பவர், எளியமுறை கணிதம் என்று கணித விளக்கம் சொல்பவர், தாளை நறுக்கி அதில் பல்வேறு வேலைப்பாடுகள் செய்பவர், ஓவியத்தில் பூ வேலைப்பாடுகள் கற்றுத் தருபவர், குட்டிக் குட்டித் தையல்கள், பந்து-கூடைகள் நெய்யக் கற்றுத் தருபவர், விதவிதமான பேனா பென்சிகள் விற்பவர், பெட்ரோலைச் சேமிக்கும் புதிய வகை கார்ப்பரேட்டர் விற்பவர் என்று ஏராளமாக வருவார்கள். அவர்களில் சிலர் தங்கள் திறமைக்கு டிக்கெட் பணம் போல இரண்டு ரூபாய், அய்ந்து ரூபாய் வாங்கிக் கொள்வார்கள். சிலர் 8 பக்கத்திலோ, 16 பக்கத்திலோ ஏறத்தாழ சாம்பலைத் தாண்டி கருப்புக்கு நெருக்கமான நிறத்திலான சாணித் தாளிலும், அதே தரத்தில் மிக மெல்லிய காகிதக் கொடி தடிமனிலான வண்ண மேல்தாளிலு

புதிய திரட்டி “தமிழ்ச்சரத்”திற்கு வாழ்த்துகள்!

புதிய திரட்டி தமிழ்ச் சரத்திற்கு வாழ்த்துகள்! நான் வலைப்பூவுலகத்திற்குள் எண்ணற்ற திரட்டிகள் இருந்தாலும், என் மனம் கவர்ந்தது தமிழ்மணம். இன்று எப்படி பித்துப் பிடித்ததுபோல முகநூலின் காலக்கோட்டை அடிக்கடி புதுப்பித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறேனோ, அப்படி ஒரு காலத்தில் தமிழ்மணம் திரட்டியை மீண்டும் மீண்டும் புதுப்பித்துப் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறேன். மைக்ரோ பிளாக்கிங்கும், சமூக ஊடகங்களும் பெருகிய பின், அருகிப்போன வலைப்பூ பரப்பில், அவ்வப்போது முக்கிய பதிவுகளை மட்டும் பதிவேற்றிவிட்டு, ஒரு காலத்தில் ஓடிவிளையாடிய பூங்காவில் காய்ந்த சருகுகளுக்கு மத்தியில் கால்பதித்துத் திரும்புதல் போலச் சென்று வருவேன். நீச்சல்காரனின் பதிவொன்று, எதிர்நீச்சல் பதிவாக முகநூலில் கண்ணில் பட்டது. பூங்காவைப் புதுப்பித்து, பூச்சரம் தொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளமை கண்டு மகிழ்ந்தே, நானும் ‘தமிழ்ச்சரம்’ வலைப்பூ திரட்டியில் பதிவு செய்துள்ளேன். நல்முயற்சி வெல்ல வாழ்த்துகள்!