Monday, April 27, 2009

ஈழத் தமிழர்களுக்காக கலைஞர் உண்ணாவிரதம்!

ஈழ்த்தமிழர்களுக்காக கலைஞர் உண்ணாவிரதம் தொடங்கினார். இன்று காலை அண்ணா நினைவிடத்தில் தனது உண்ணாவிரதத்தை தொடங்கினார். தமிழர்தலைவர் கி.வீரமணி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அண்ணா நினைவிடத்துக்கு விரைந்தனர்.

இதையொட்டி தி.மு.க.வினர் தமிழகம் முழுக்க உண்ணாவிரதம் தொடங்கியுள்ளனர்.
நாளை சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தத இழுத்து மூடும் போராட்டத்தை திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அமைப்புகள் நாளை நடத்தும் எனெ கி.வீரமணி அறிவித்துள்ளார்.

Wednesday, April 01, 2009

வள்ளல் அழகப்பருக்கு நூற்றாண்டு விழா


"கோடி கொடுத்த கொடைஞன்
குடியிருந்த வீடும் கொடுத்த விழுத்தெய்வம்
தேடியும் அள்ளிக் கொடுத்த அழகன்
அறிவூட்டும் வெள்ளி விளக்கே விளக்கு!"
என்று பாடப் பெற்ற வள்ளல் அழகப்பரின் நூற்றாண்டு விழா இவ்வாண்டு!
காரைக்குடி இன்று பெற்றிருக்கும் அத்துணை வளர்ச்சிக்கும் வள்ளல் அழகப்பர் தான் காரணம் என்றால் அது மிகையில்லை. காரைக்குடியை கல்விக் குடியாக மாற்றியதோடு, மத்திய மின் வேதியியல் ஆய்வகம் உருவாகவும் காரணமாக இருந்தவர் அழகப்பர்.
அடிப்படைக் கல்வி முதல், ஆராய்ச்சிக் கல்வி வரை படித்து முடிக்கும் பெருவாய்ப்பு காரைக்குடி மண்ணில் உருவாகிட முழு முதற் காரணமான வள்ளல் அழகப்பரின் நூற்றாண்டு விழா நன்றியுடையோர் எல்லோராலும் நினைவோடு காரைக்குடியில் கொண்டாடப்படுகிறது.
அதன் தொடர்ச்சியாக, சென்னையில் வசிக்கும் அழகப்பா கல்வி நிறுவன முன்னாள், இந்நாள் மாணவர்கள் மற்றும் காரைக்குடியின் வளர்ச்சியினால் பயனடைந்தோர் சார்பில், அண்ணா பல்கலைக் கழகத்தில் அமைந்துள்ள வள்ளல் அழகப்பர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய ஏற்பாடாகியுள்ளது.
வரும் 05.04.09 ஞாயிறு காலை 10 மணிக்கு வள்ளல் அழகப்பரின் சிலைக்கு மாலை அணிவிக்கப்படவுள்ளது. அந்நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம். தங்கள் வருகையோடு, உங்கள் நண்பர்கள், குடும்பத்தார் அனைவரையும் அழைத்து வந்து பங்கேற்க வேண்டுகிறோம்.
மேலும் தொடர்புகளுக்கு:
தி.பெரியார் சாக்ரடீசு - 94446 09442
அமைப்பாளர்

Thursday, March 05, 2009

கடுமையான செரிமானக் கோளாறு காரணமாக ஜெயலலிதா உண்ணாவிரதம்!

கடந்த சில காலமாகவே கடுமையான செரிமானக் கோளாறு காரணமாக உடல்நலப் பாதிப்புக்கு ஆளாகியிருந்தார் செல்வி ஜெயலலிதா. இந்நிலையில் மருத்துவர்களின் ஆலோசனைப்படி சில நாட்கள் பத்தியம் இருக்கக் கோரப்பட்டதாகத் தெரிகிறது.
மேலும், நாடாளுமன்றத் தேர்தல் ஜுரம் வேறு தாக்கியிருப்பதால், திடீரென உண்ணாவிரத அறிவிப்பு வெளியாகியிருப்பதாகக் கூறப்படுகிறது. வரும் 10-ஆம் தேதி இந்த சிகிச்சை நடைபெறும் என்றும், அதன் பிறகு உடல் நிலையில் முன்னேற்றம் ஏதாகினும் காணப்படுமா என்று எதிர்பார்ப்பு நிலவுவதாகவும் தெரிகிறது. இதற்கான ஆலோசனையை வழங்கிய ஜோதிடர்கள், மாசி மகத்தின் அடுத்தநாளாகவும், செவ்வாய்க்கிழமையாகவும் இருப்பதால் உண்ணாவிரதத்துக்கு ஏற்ற நாளாகவும் இருக்கும் என்று தெரிவித்தனராம்..
இதற்கான ஏற்பாடுகளை, மருத்துவர்கள் குழுவில் இடம்பெற்றுள்ள திரு.கோபால்சாமி, பாண்டியன் ஆகியோர் செய்து வருவதாக ராயப்பேட்டை அ.தி.மு.க மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடைசிக் குறிப்பு: எதையொட்டி என்ற அறிவிப்பு வெளிவிடுவது பற்றி யோசிக்கப்பட்டபோது, கரண்ட் பிரச்சினையான ஈழத் தமிழர் பிரச்சினையையொட்டி என்று சொல்லிக் கொள்ளலாம் என்றும் முடிவெடுக்கப்பட்டதாம்.