முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே, 2007 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இப்போதல்ல-- எப்போதுமே தினமலர் அப்படித்தான்!

முதலாவதாக, 2005-இல் இளவஞ்சி எழுதிய பதிவுக்கு இன்று நான் எழுதியுள்ள பின்னூட்டம்: மீண்டும் தினமலர்! - ஒரு நெருடல் 'வாசகர் பகுதி' என்பது தினமலரைப் பொறுத்த அளவில் அதன் அரிப்புகளைத் தீர்த்துக் கொள்ளும் பகுதியாகும். ஆகையால் இதை எதோ வாசகர் கருத்து என்று எடுத்துக் கொள்ள வேண்டாம். 'தினமலத்தின்' கருத்து தான் அது.! இன்றைகு அடித்துக் கொண்டும், ஊத்திக் கொடுத்து ஆள் பிடித்துக் கொண்டும் இருக்கும் காலைக்கதிரிலும், தினமலரிலும், ஒரே கடிதங்கள் வெவ்வேறு பெயர்களில், வெவ்வேறு பதிப்புகளில் பயன்படுத்தப்பட்டிருப்பது வெளிப்பட்டதே நினைவிருக்கிறதா? சரி, அது கிடக்கட்டும்... அடப் பாவிகளா? இப்பத்தான் பார்க்கிறேன்... இது 2005-ல எழுதின பதிவா? சரி...சரி... விசயத்துக்கு வருவோம். //சலூன் கடை என்பதை சவரக்கடை என்று மாற்றினாலும், உள்ளே முடிவெட்டுதலும் முகமழித்தலும்தான் நடைபெறும்.// சரிங்க வெண்ணைகளா... சவரக்கடைங்கிறதை சலூன்-னு சொன்னாலும், அங்க முடிவெட்டுதலும், முகமழித்தலும் தானடா நடக்கப்போகிறது. விளங்காதவங்களா? எடுத்துக்காட்டுக்கு அவர்கள் காட்டிய தொழில், முடிதிருத்தும் தொழில் என்று நல்ல எண்ணத்தோடு எடுத்துக் க

"எனக்குப் பரிசு வேண்டும்" - கலைஞர் வேண்டுகோள்

நேற்று நான் விரும்பியபடி, கலைஞரின் சட்டமன்றப் பொன்விழா என்னும் எழில்வாய்ந்த விழாவுக்குப் போயிருந்தேன். தமிழ்நாட்டுக்கு இந்தியாவைக் கொண்டுவந்ததுபோல், வடபுலத்துத் தலைவர்களெல்லாம், தந்தை பெரியாரின், அறிஞர் அண்ணாவின் வழித்தோறலாக வந்திருக்கும் கலைஞரின் அரிய பணிகளையும் சாதனைகளையும் பாராட்டி மகிழ்ந்தார்கள். "நாங்கள் வழக்காமாக பாராட்டுபவர்கள, ஆதலால், எங்கள் தங்கத் தலைவரை இன்று மற்ற வடபுலத்துத் தலலவர்கள் பாராட்டுவதை பெரு மகிழ்வோடு கேட்கத்தான் இங்கே வந்திருக்கிறோம்" என்றார் தமிழர் தலைவர் அய்யா வீரமணி அவர்கள். விழாத் துளிகள்: * மேடையில் முதல் தலைவராக தாய் வீட்டிலிருந்து வந்திருந்தார் அய்யா வீரமணி அவர்கள். பின்னர் ஒவ்வொரு தலைவர்களாக வந்தார்கள். * சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கல் உடல் நலக் கோளாறு காரணமாக வர இயலாமல் வாழ்த்துக் கடிதம் அனுப்பி இருந்தார்கள். * ராம் விலாஸ் பாஸ்வான் கூறும்போது, "முதல் முறை திரு.வீரமணி அவர்களுடன் சென்றுதான் நான் கலைஞரைப் பார்த்தேன்" என்று பழைய நிகழ்வை நினனவு கூர்ந்தார். * மத்திய அமைச்சர் லாலு பிரசாத் எழுந்து பேச வரும்போது அரங்கம் அதிர கைதட்டல்,