முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர், 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கர்நாடகக் கலவரம்: மத்திய உளவுத் துறையின் கைங்கர்யம்

மிக நுணுக்கமாக, ஆழமாக மத்திய அரசின் உளவுத்துறை கர்நாடகத்தில் செயல்பட்டிருக்கிறது. காங்கிரஸ் சித்தராமய்யாவின் ஆட்சியை குலைக்கவும், அடுத்து வரும் தேர்தலைக் கருத்தில் கொண்டு மட்டுமல்ல... நீண்ட கால நோக்கில், தமிழக கர்நாடக மக்களின் பகை நெருப்பை ஊதி தக்க வைக்கவும், பல்வேறு மொழிவழி தேசிய இனங்களின் பகைமையை கூர்மைப்படுத்துவதன் மூலம் இந்திய தேசியத்திற்கெதிரான குரலை ஒடுக்கவும், மத்திய அரசின் இந்துத்துவ நடவடிக்கைகளுக்கு எதிராக களமிறங்கும் தமிழகத்திற்கு நெருக்கடி கொடுக்கவும் இத்தகைய பணிகளில் மத்திய உளவுத்துறை ஈடுபட்டு, அதில் வெற்றியும் பெற்றிருக்கிறது. நோய் நாடி நோய் முதல் நாட வேண்டும்;  பொய் மோடி கும்பலின் முகத்திரை கிழித்துப் போட வேண்டும்.