முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Copy cat-ஆ பெரியார்?

”பெட்ரண்ட் ரசலின் Marriages and Morals நூலைத் தான், தமிழில் ”பெண் ஏன் அடிமையானாள்?” என்று காப்பியடித்தாரா பெரியார்? ”பெட்ரண்ட் ரசலின் Marriages and Morals நூலைத் தான், தமிழில் ”பெண் ஏன் அடிமையானாள்?” என்ற பெயரில் காப்பியடித்தார் பெரியார் என்று ஓர் அரைவேக்காடு எழுதியிருக்கிறது. அதை எப்படியும் நாளை காலைக்குள் ஆயிரக்கணக்கான முட்டாள்கள் பகிரப் போகிறார்கள். சங் பரிவாரின் காலைநக்கும் கும்பல் அதை மீம்சாக்கி பரப்பப் போகிறார்கள். போர்டு தாஸ் மாதிரியான கூலிகள் வீடியோவும் போடுவார்கள். நாம் சொல்ல வேண்டிய உண்மையைச் சொல்லி வைப்போம். “பெண் ஏன் அடிமையானாள்?” என்ற நூலில் உள்ள கருத்துகள் பெரியாருக்குத் திடீரென்று ஒரே நாளில் தோன்றி எழுதப்பட்ட சிந்தனைகள் அல்ல. தந்தை பெரியார் தன் குடும்பத்தில் அதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே மறுமணம் செய்துகாட்டியதில் தொடங்கி, பெண்ணுரிமை பற்றிய சிந்தனைகள் ஒவ்வொரு கட்டத்திலும் அவருக்கு எப்படி பரிணமித்து வந்திருக்கின்றன என்பதைப் பெரியாரைப் படிப்பவர்கள், படித்தவர்கள் உணர முடியும். அதெல்லாம் தெரியாமல், வன்மத்தை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு திரியும் இந்த ஸோம்பிகள், 'தான் த