திரைப்படக் கல்லூரியின் பயிற்சித் தேர்வுக்காக பாடல் ஒன்றைப் படமாக்க வேண்டியிருந்தது. ஏற்கனவே இருக்கும் திரைப்படப் பாடலை வேறுவடிவத்தில் படமாக்கலாம் என்ற வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டேன். என்னை வெகுவாக பாடலாக பாதித்த, காட்சியாக கவரத் தவறிய "விடைகொடு எங்கள் நாடே" பாடலைத் தேர்ந்தெடுத்தேன்.
நான் வாய்விட்டு உரக்கப்பாடி மகிழ்ந்தது போல் நீங்களும் கேட்டு, பாடி மகிழ வேண்டாமா? இதோ புரட்சிக் கவிஞர் ஓங்கி ஒலித்த "சங்கே முழங்கு" பாடல் கலங்கரை விளக்கம் திரைப்படத்திலிருந்து.... KalangaraiVilakkam... சங்க நாதம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றூதூது சங்கே! பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்! வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்! எங்கள் வாழ்வும்...... -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
கருத்துகள்
நெஞ்சில் அதிகம் சுமைகள் சுமந்து செல்கின்றோம்!//
காசி ஆனந்தனின் வரிகளில் கரைகிறது மனம்!
நிழலாக...
வாழ்த்துக்கள்.
நம்பிக்கைகள் சிறிதேனும் மிச்சமிருந்த பொழுதில் நாம் கொண்டிருந்தவை முற்றிலும் சிதையுண்டுபோயிருக்கும் காலகட்டத்திலும் வலிக்க வைக்கிறது உங்கள் படைப்பு . நெட்டை பனை மரங்களாய் நிற்கும் வாழ்க்கை, வரலாற்றின் புனைவாகிவிடக் கூடாதா என குழந்தை கனா காண்கிறது மனம். சம கால வரலாற்றின் கொடூரத்தை சமரசமற்று பதிவு செய்த படைப்பாளியின் குரல் விடை பெறாதுஒலித்துக் கொண்டிருக்கிறது மானுடத்தின் செவிப்பறைகளில்.
எனது பேரன்புகள் தோழருக்கு!