முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மூடநம்பிக்கை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இயேசு சிலையில் ரத்தம் வடிகிறதாம்! ஓ பாசிட்டிவா? நெகட்டிவா?

சென்னை சேத்துப்பட்டு புனித அன்னாள் மேல் நிலைப்பள்ளியில் சிலுவையில் அறைந்த நிலையில் இயேசு சிலை உள்ளது. இந்த சிலையின் கால், கை மற்றும் கழுத்து பகுதியில் இருந்து புதன்கிழமை மாலை 3 மணியளவில் ரத்தம் வடிந்ததாக கூறப்படுகிறது. அதை பார்த்த கன்னியாஸ்திரிகள் ஆச்சரியமடைந்தனர். பின்னர் இந்த தகவல் காட்டுதீ போல பரவியது. உடனே பொதுமக்கள் கூட்டம் கூடத் தொடங்கியதை அடுத்து ஆயிரக்கணக்காண பொதுமக்கள் திரண்டனர். அப்போது (5 காயங்கள்) மற்றும் சிலை பகுதியில் ரத்தம் வடிந்து காய்ந்த நிலையில் இருந்ததாக தெரிகிறது. இதனையடுத்து அங்கு கூடிய பொதுமக்கள் பரவசமடைந்தனர். அங்கு சிறப்பு பிரார்த்தனை செய்து சென்றனர். சிலையில் ரத்தம் வடிந்த தகவல் வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் பரவியுள்ளது. வெளியூர்களில் இருந்து கிறிஸ்தவர்கள் வேன், பஸ் மூலமாக சேத்துப்பட்டுக்கு வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் ரத்தம் வடிந்ததாக கூறப்படும் ஏசு சிலை முன்பு கூட்டம் கூட்டமாக நின்று சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டு செல்கின்றனர். செல்போன்கள், வீடியோ காமிராக்களிலும் ஏசு சிலையை படம் எடுத்து சென்றனர். இதனால் சேத்துபட்டு சிறிஸ்தவ ஆ...

வீணை - சாதனை - ரசனை

தகுதி, திறமை என்றால் அவாள் தான் என்பது பார்ப்பனர்களின் வசதிக்காக, பார்ப்பனர்களாலேயே கட்டமைக்கப்பட்ட ஒரு கட்டுக்கதை. அதிலும், இசை என்றால் அவாள் தான் என்ற மாயையை அவ்வப்போது பலர் உடைத்து வருகிறார்கள். தமிழ்த் திரை என்று மட்டும் இல்லாமல், தமிழிசை, கர்நாடக இசை என்று சாஸ்திரீய சங்கீதத்திலும் கொடி கட்டிப் பறந்தது என்னவோ நம்மவர்கள் தான். கே.பி.சுந்தராம்பாளாக இருந்தாலும், வீணை தனம்மாளாக இருந்தாலும், பாகவதராக இருந்தாலும், கற்க வாய்ப்புக் கிடைத்த தமிழர்கள் தங்கள் திறனால் உலகு புகழ வளர்ந்தார்கள். ”எங்களாவாவை கட்டிண்டதாலதான் எம்.எஸ். இப்படி தேனா பாடுறா!” என்ற இங்கிதம் இல்லாத இவர்களின் சங்கீத பீலாக்களை வரலாறு பதிந்துதான் வைத்திருக்கிறது.  இந்த வரலாற்றின் தொடர்ச்சியாக இதோ நேற்று (17.7.2011) ஓர் இளம் பிஞ்சு, இசைப் பாரம்பரியம் என்றெல்லாம் இல்லாத ஒரு 13 வயது மாணவி 16 மணி நேரம் வீணை வாசித்துச்  சாதித்திருக்கிறார். கரூரைச் சேர்ந்த அந்த மாணவியின் பெயர் ஸ்ரீநிதி கார்த்திகேயன். கருவூர் தமிழிசைச் சங்கமும், கருவூர் திருக்குறள் பேரவையும் இணைந்து கரூர், நாரத கானசபாவில் நடத்திய இந்நிகழ்வில் ச...

தினமலரின் நிர்வாணக் குதியாட்டம்!

(இந்த இடுகையை முழுதாகப் படிக்கவும், இணைக்கப்பட்டுள்ள காணொளியைக் காணவும் மேலே உள்ள தலைப்பை ஒரு முறை சொடுக்கவும்.) "மூடநம்பிக்கைகளை நாங்கள் எதிர்க்கிறோம்." "மத நம்பிக்கைகள் என்பது வேறு; மூட நம்பிக்கைகள் என்பது வேறு" கடவுள், மத மறுப்பை, மூடநம்பிக்கைகளை தோலுரிக்கும் போது இப்படியெல்லாம் பலர் உதார் விடுவதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால், மூடநம்பிக்கைகளும் மத நம்பிக்கைகளும் வேறுவேறானவை அல்ல.. மூடநம்பிக்கைகள் தான் மதத்திற்கான வருவாய், கூட்டம் சேர்க்கும் காரணிகள் என்பது நாம் அறிந்ததே! அதற்கான இன்னொரு சாட்சி - தினமலரின் இந்த வீடியோ செய்திக் காட்சி! சென்னை கோட்டுர்புரத்தில் உள்ள அரசு நிறுவனமான "பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையம்" * குழந்தைகளுக்கான மூன்று நாள் அறிவியல் முகாம் ஒன்றை நடத்தியிருகிறது. இதில் பல்வேறு வகுப்புகளின் ஊடாக 'இந்திய பகுத்தறிவாளர் இயக்கங்களின் கூட்டமைப்பான FIRA' -வின் செயலாளரும், நாடறிந்த மூடநம்பிக்கை எதிர்ப்பாளரும், 'மந்திரமா? தந்திரமா?' செயல் விளக்க வித்தகரும், பெங்களூருவைச் சேர்ந்த பேராசிரியருமான நரேந்திர நாயக் அவர்களின் அறி...

கிரகண நேரத்தில் கேசரி!

எங்கே என்ன நடந்தாலும் அதில் தங்களுக்கென துண்டைப் போட்டு சீட்டைப் ப்டிப்பதில் மூட நம்பிக்கை வியாபாரிகளுக்கு நிகர் யாரும் கிடையாது. உலகக்கோப்பை கிரிக்கெட் ஆனாலும் சரி, உலகே வியந்து பார்க்கும் கிரகணம் ஆனாலும் சரி... தங்களது கடையை விரித்து மக்களின் பயத்தை மூலதனமாக்கி, தங்களின் மூடநம்பிக்கைச் சரக்கை விற்று கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர். உடனடி லாபம் என்றெல்லாம் கூட இல்லை... இதன் மூலம் விதைத்துவிட்டால் வேறெங்காவது கூட அறுவடை செய்து கொள்ளலாம். இது தான் சாக்கென்று கிரகணத்தையொட்டி சுனாமி வரும். பினாமி வரும் என்று பீதியை வேறு கிளப்பி விடுகிறார்கள். சுனாமி வருவதற்கு என்ன காரணம் என்று கூட இந்தப் பன்னாடைகளுக்குத் தெரிவதில்லை. சரியாக இந்த நேரத்தில் டெக்டானிக் பிளேட் நகருமாம். அடங்கொய்யால...! சரி, அத்தோடு விட்டார்களா... ஒரே நேரத்தில் ஆற்றில் இறங்கி புண்ணியம் தேடப்போய் இரண்டு பேரைப் பிணமாக்கியதுதான் மிச்சம். கிரகண நேரத்தில் சாப்பிடக் கூடாது என்றொரு மூடநம்பிக்கை வேறு! அடக் கொடுமையே.... சாப்பிடறதுக்கும் கிரகணத்துக்கும் என்னப்பா தொடர்பு! ராகு சூரியனைச் சாப்பிடுதுன்னு கதை கட்டியிருக்கான்னா... நான் ரவா கேச...

சாமிக்கு மாலை போடும் உரிமை....!

என்னை விட்டுவிட்டு சாமிக்கு மாலை போடுகிற உரிமை உனக்கு உண்டென்றால் உன்னை விட்டுவிட்டு வேறொருவனுக்கு மாலை போடுகிற உரிமை எனக்கும் உண்டுதானே! -அறிவுமதி (நன்றி: செம்பருத்தி -டிசம்பர் 2007)

கிடைத்தது ராமனின் Birth Certificate!

ஸ்ரீ ராமர் மனித உருவில் மண்ணில் அவதரித்த நாளை அறிவியலின் துணைகொண்டு ஆய்ந்தறிந்து அறிஞர்கள் வெளியிட்டுள்ளனர். ராமர் பிறந்த இடத்தில் கோயிலைக் கட்ட வேண்டும் கட்ட வேண்டும் என நீண்ட காலமாகக் கோரி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. (பிறந்த இடத்தில கோயில் கட்டுறதா? தாங்காதுய்யா) இந்நிலையில் தசரதன் காலத்தில் பதிவு செய்யப்பட்ட ராமரின் birth certificate கிடைத்துள்ளது. சமஸ்கிருத மொழியில் உள்ள இந்த சான்றிதழில் பிறந்தநாள் கி.மு.5114 ஜனவரி 10 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 17.50 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ராமர் பிறந்தார் என்று நமது புராணத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில் கி.பி 2007க்கும் கி.மு.5114-க்கும் இடையில் 7121 ஆண்டுகள் மட்டுமே கணக்கில் வருகிறது. மீதம் 17,42,879 ஆண்டுகள் கி.மு.வுக்கும், கி.பி.க்கும் இடையில் விடுபட்டுப் போயிருப்பதாகவும், இடைப்பட்ட அந்தக் காலத்தை ராம சூன்யம் என்றழைக்கலாம் என்றும் அவ்வாராய்ச்சியாளர்கள் கருத்துத் தெரிவித்தனர். மேலும் கிடைத்திருக்கும் சான்றிதழில், தாயார் என்ற இடத்தில் கோசலையின் பெயர் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தந்தையார் என்ற இடத்தில் ஏ...

பெரியார் விழிப்புணர்வு இயக்கம் - வரலாற்றுத் தேவை

"இந்தியாவில இருந்து வரும்போது எல்லா மூடப் பழக்கத்தையும் வச்சுட்டு வந்திருப்பீங்கன்னு நினைச்சேன். எல்லாத்தையும் மூட்டை கட்டி கூடவே எடுத்துட்டு வந்திருக்கீங்களே!" மலேசியாவில் தமிழர்களை சந்தித்த தந்தை பெரியார் அங்கும் கோயில்களும் மூடப் பழக்க வழக்கங்களும் மிகுந்திருப்பதைப் பார்த்து மனம் நொந்து சொன்ன வார்த்தைகள் இவை. இந்த வார்த்தைகள் புலம் பெயர்ந்து வாழும் அத்தனைத் தமிழர்களுக்கும் பொதுவாகிறது இன்று! எனது அண்ணன் பெரியார் சாக்ரடீசின் மகளுக்கு தமிழீழம் என்று பெயர் வைத்தோம்.'தமிழீழம் மலர்ந்தது' என்று விடுதலைக்கு நன்கொடையும் கொடுத்தோம்.சொல்வதற்குக் கடினப்பட்டும், பல முறை பிழையாக உச்சரிக்கப்பட்டு, எழுதப்பட்டும் இருந்தாலும், சிறு வயதிலிருந்தே ஒவ்வொரு முறையும் பள்ளியில் தன் ஆசிரியைகளுக்கு விளக்கம் சொல்லி "எங்கள் பிரபாகரன் மாமா போராடி வெல்லப் போகும் தமிழர்களின் நாட்டுக்குப் பெயர் தமிழீழம். அது தான் என் பெயர்" என்று வியக்கவைப்பாள் தமிழீழம். இப்போது அவளுக்கு பத்து வயது ஆகிறது. ஒருமுறை ஈழத் தமிழ்ப் பெண் ஒருவர் இவளது பெயரைக் கேட்டு ஆனந்தத்தில் அழுதுவிட்டார். ஒவ்வொருமுறை சந்த...

காக்க காக்க கனகவேல் காக்க...

காக்க காக்க கனகவேல் காக்க... நோக்க நோக்க ரோப் காரை நோக்க... பார்க்க பார்க்க பழனி மலையிலே... பாதியில் விழுந்து பலியான பக்தர்களை... அங்கீகரிக்கப்பட்ட தமிழ்க் கடவுளான முருகனை தரிசிக்கச் சென்று, ரோப் காரில் பயணம் மேற்கொண்ட ஆவின் மேலாளர் சுப்பிரமணியம், அவரது மனைவி, மகள் உள்பட நால்வர் பலியாகி, ஒருவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டுள்ளார். நானும் காலையிலிருந்து பார்க்கிறேன் தமிழ்மணத்தில் முருகப்பெருமானுக்கு ஒரு கண்டனம் கூடப் பதிவாகவில்லை. ரோப் கார் மரணம்- ஏனிந்த மவுனம்? பழநி மலையில் பயங்கரம் ரோப் கார் அறுந்து 4 பேர் பலி 250 அடி உயரத்தில் இருந்து விழுந்து பரிதாபம் 72 பக்தர்கள் கயிறு மூலம் பத்திரமாக மீட்பு பழநி, ஆக.27: பழநி மலையில்250 அடி உயரத்தில் சென்று கொண்டிருந்த ரோப்கார் திடீரென அறுந்து விழுந்ததில் தமிழ்நாடு ஆவின் பொது மேலாளர், திண்டுக்கல் ஆவின் நிர்வாக இயக்குனர் உட்பட 4 பேர் பலியாயினர்.சென்னையை சேர்ந்த தமிழ்நாடு ஆவின் பொது மேலாளர் சுப்பிரமணியம் (50), நேற்று தனது குடும்பத்துடன் பழநி முருகன் கோயிலுக்கு வந்திருந்தார். மாலை 5 மணிக்கு மலைக்கோயிலுக்கு ரோப் காரில் அவர்கள் சென்றனர். ரோப் காரின் 3வது ப...