முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...”
”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...”
“பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள்.
அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா...
நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ...
அண்ணன் Saravanan Savadamuthu பதிவிலிருந்து...
//
இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது.
ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம்.
அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார்.
காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owner - Dinamalar Daily News Paper).
தன்னை தடுத்து நிறுத்திய கோபத்தில் அந்த இடத்திலேயே உதவி ஆய்வாளர் முன்னிலையே மது அருந்தியிருக்கிறார் அந்த Chief Editor ராமசுப்பு.
பிறகு "நான் யார் என தெரியாதா..?" என கூறி விட்டு தன்னுடைய Press Id Card கொடுத்துவிட்டு அடுத்த நொடிப் பொழுதில் மின்னல் வேகத்தில் கா்ரை எடுத்துக் கொண்டு பறந்தாராம்.
உடனேயே அந்த சப்-இன்ஸ்பெக்டர் வாக்கி டாக்கி மூலம் Control Room & அடுத்த Point க்கு தகவலைச் சொல்லி அந்த வாகனத்தை நிறுத்த சொல்கிறார்.
ஆனால் தினமலர் பத்திரிகையின் உரிமையாளரான போலீஸாரை கடந்து அவர் அலுவலகத்திற்கு சென்றுவிட்டார். பின்பு அங்கிருந்தே போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவலைச் சொல்லியிருக்கிறார்.
"என்னுடைய Id Card அந்த சப்-இன்ஸ்பெக்டரிடம் இருக்கிறது,,,, அந்த சப்-இன்ஸ்பெக்டரை என்னை வந்து பார்க்க சொல்லுங்கள்..." என்று சொல்லியிருக்கிறார்.
"குடிபோதையில் வாகனத்தை ஓட்டியது அவர்தான். நான் எந்த தவறும் செய்யவில்லை... நான் அவரை பார்க்க மாட்டேன். நடப்பதை நான் பார்த்துக் கொள்கிறேன்...." என கறாராக கூறியிருக்கிறார் சப்-இன்ஸ்பெக்டர்.
இரண்டு நாட்கள் கழித்து இன்றைய தினமலர் செய்தித் தாளில் "விலை உயர்ந்த வெளிநாட்டு கார்களை குறி வைத்து மடக்கி அந்த சப்-இன்ஸ்பெக்டர் மாமூல் வசூல் செய்கிறார்..." என செய்தி வந்துள்ளது.
இது எந்த விதத்தில் நியாயம்..? பத்திரிகை அதிபர் என்றால் எந்த தவறும் செய்யலாமா? அவர்களுக்கென்று தனி சட்டமா இருக்கிறது..?
கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சென்னையில் 8 வெளிநாட்டு கார்களினால் விபத்துகள் நடந்துள்ளன என்பது குறிப்பிடதக்கது,
வெளிநாட்டு கார்களினால் விபத்து நடந்தால் உடனே போலிசார் கண்டு கொள்வதில்லை என செய்தி மட்டும் போடுகிறார்கள். ஆனால் தாங்களே தவறு செய்தால் அதனை மறுக்கிறார்கள்.
அதிகாரம் மிக்க போலீஸ் உயரதிகாரிகளும் இவர்களைப் போன்றவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள்..?
குறிப்பு : அந்த பத்திரிகையின் உரிமையாளர் எந்த நேரமும் குடிபோதையில்தான் இருப்பார் என்பது கூடுதல் தகவல், (இது வாட்ஸ்அப்பில் வலம் வந்த செய்தி)
அவருடைய Id Card கீழே🏼 :

//
அந்துமணி குரூப் பற்றிய என் பழைய பதிவுகள் இங்கே! http://princenrsama.blogspot.com/search?q=அந்துமணி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்...

வீரவணக்கம்! வீரவணக்கம்!!

மாநாட்டுத் தீர்மானங்களின் தொடக்கத்தில் களத்தில் நின்று போராடி மடிந்த கொள்கை மறவர்களுக்கு வீரவணக்கம் தெரிவிக்கும் இரங்கல் தீர்மானம் தெரிவிக்கும் வழக்கம் உண்டு. முற்றிலும் எதிர்பார்க்காத வண்ணம், நம் அனைவரையும் துயரக் கடலில் ஆழ்த்தியதோடு நாம் இன்னும் முனைப்பாக செயலாற்றி, நம் உரிமையை வென்றெடுக்க நம்மைத் தூண்டியுள்ள வீரத் தளபதிகளின் மறைவுக்கு வீர வணக்கம் செலுத்த வேண்டிய நிலையில் நாம் உள்ளோம். வீரவணக்கம் செலுத்துவதோடு, தமிழீழத் தாயகத்தில் எழுச்சி ஏற்கும் நாளாக அமைந்துவிட்ட மாவீரர்களின் இறுதி நிகழ்ச்சியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம். (நன்றி: த.அருள்எழிலன்) வீரவணக்கம்; வீரவணக்கம்! வென்றெடுக்கப் போகும் எங்கள் நாட்டின் வீரவித்துக்கள் நீவீரே! மண்கொள்வதில்லை உங்கள் உடல்கள்...எங்கள் மனங்கொண்டு சினம் வளர்த்து ஈழம் படைக்க உரமாகின்றன! வீரவணக்கம்; வீரவணக்கம்! உம்மைக் கொன்றதும் எங்கள் அமைதி முகத்தைச் சிதைத்ததும் ஒன்றே! பேச்சு தேவையில்லை இனியென சிங்களம் சொல்கிறது! இனி அவர்கள் பேசவேகூடாது என்கின்றன உம்முடல்கள்... செய்து முடிப்போம்! பகையைக் கொய்து முடிப்போம்! வீரவணக்கம்; வீரவணக்கம்!