முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன், 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

SVTC செல்வம் சார் நினைவாக...

எல்லைகளைக் கடக்கலாம் எங்கள் எழுத்து! ஆனால்... எங்களின் ஆனா... ஆவன்னாவில் நிறைந்திருக்கிறாய் நீ! எங்கள் வெற்றிப் படிகளைத் திரும்பிப் பார்க்கையில் ஒவ்வொரு புகைப்படத்திலும் உன் புன்னகை! என் அக்கா தொடங்கி அண்ணன் மகன் வரைக்கும் எங்களுக்கு ஆரம்பக் கல்வி தந்த ஆசான் நீ... முன்னாள் சென்னை காவல்துறை ஆணையர், அன்றைய சிவகங்கை மாவட்ட ASP ராஜேந்திரன் அவர்களுக்கு மாலை அணிவிக்கும் சாமி சமதர்மம், பின்னால் SVTC செல்வம்  ’எழுமின்! விழிமின்!’ என்ற மதத்தைத் தாண்டிய விவேகானந்தரின் வரிகளை நீ இளம் நெஞ்சங்களில் விதைத்தாய்! ஒட்டுமொத்த பள்ளியையும் உட்கார வைத்துக் கொண்டு சிரிக்கச் சிரிக்க நீ எடுக்கும் வகுப்பு மறக்காது எமக்கு! இந்தி கற்க மாட்டேன் என்று ஒரு பொடிப் பயல் சொல்கிறானே என்றில்லாமல் என் உறுதிக்காகவே பள்ளியிலிருந்து இந்தியை நீக்கி வைத்து எனக்கு முதல் கொள்கை வெற்றியைத் தந்தவன் நீ! 1980களில் SVTC-ன் ஆண்டு விழா நிறைவில் எடுக்கப்பட்ட குழுப்படம் எங்கள் வளர்ச்சி கண்டு பூரித்த பெருமகன்! மாறாத பாசத்துடன் எங்களை ஏற்றிவைத்துக் கொண்டாடிய எம் தந்தையின் தோழன்! 1

ஆயிற்று பத்தாண்டுகள் அருமைத் தோழர்களே!

(அழகப்பா அரசு கலைக் கல்லூரி - இளம் வணிகவியல் 1999-2002 (B.Com 99-02) மாணவ நாட்களின் நினைவாக...) ஆயிற்று பத்தாண்டுகள் அருமைத் தோழர்களே! நம்ப முடிகிறதா நம்மால்? 2002 ஏப்ரல் 25! கடைசி நாள் மாணவர்களாய் கண்கலங்க விடைபெற்று ஆயிற்று பத்தாண்டுகள்! கல்லூரி கலங்க ஆடி மகிழ்ந்த நாட்கள் அடங்கி ஆயிற்று பத்தாண்டுகள்! அடிதடி... கும்மாளம்... ஆர்ப்பாட்டம்... அந்யோந்நியம்... அத்தனையும் முடிந்ததாய் மனம் நொறுங்கி ஆயிற்று பத்தாண்டுகள்! பவநகர் ஸ்டேடியம்... அழகப்பர் நினைவிடம்... அஞ்சல் நிலையம்... வாசல் பெட்டிக் கடை... தைல மரங்கள்... சைக்கிள் ஸ்டாண்ட்... ஸ்டோர் நோட்புக்கு... நூலகத்தின் பின்னோடும் ரயில்வே சிக்குபுக்கு... கேண்டீன் கணக்கு... ஆங்காங்கே மரத்தடியில் ’கடலை’ ஆமணக்கு! மர பெஞ்ச் ஓவியம்... கரும்பலகைக் கவிதை... அன்பு, நட்பு, காதலென்று அவரவர் நினைப்புக்கேற்ப அழியாத ஒரு விதை! டுர்டுர் வண்டியில ரெண்டு வருசம் டூரு! மலை மலையாய் ஏறி, கடல் கடலா குளிச்சு, அருவி அருவியா நனைஞ்சு, விடிய விடிய முழிச்சு சீட் இல்லாட்டி சூட்கேஸு... அதுவும் இல்லைன்னா தரையி

ஆறு வித்தியாசம் கண்டுபிடியுங்கள்!

”இம்மண்ணில் திராவிடர்களாக இருக்கும் பிறமொழியாளர்களையும் கட்சி “உங்களை பிறமொழியாளர்கள் என்றுசொல்லி உங்களைப் பிறராக பார்க்க நாங்கள் விரும்பவில்லை. உங்களின் மூலத் தாய்மொழியாம் தமிழுக்கு திரும்பிட, உங்களுக்கு உள்ள முழு உரிமையை நாங்கள் ஏற்கிறோம். நீங்கள், நாங்களென ஏன் இனி இருக்க வேண்டும்? வாருங்கள் நாம் தமிழராய் ஒன்றாவோம்! உயர்வோம்!" (ப.எண் 50) என அழைக்கிறது”  - நாம் தமிழர் கட்சி ”இந்தியாவில் உள்ள முஸ்லிம் கிறிஸ்துவர் அனைவரும் இந்துக்களே! இவர்கள் அங்கிருந்தாலும் தங்கள் தாய்மதம் இந்துமதமே என ஒப்புக் கொள்ள வேண்டும். இராமன், கிருஷ்ணனை கடவுளாக ஏற்க வேண்டும். அவர்கள் தங்கள் தாய் மதத்திற்குத் திரும்புவதை நாங்கள் வரவேற்கிறோம். இந்துக்களாக ஒன்றிணைவோம்!” - இந்துத்துவவாதிகள்