முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நவம்பர், 2009 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வி.பி. சிங் வீரவணக்க நாள் கூட்டம்

வி.பி. சிங் வீரவணக்க நாள் கூட்டம் நாள்: 27.11.2009 இரவு 7 மணி. இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை வரவேற்புரை: கா.எழிலரசன் தலைமை: கு.வெ.கி. ஆசான் , நெறியாளர், பெரியார் களம், முன்னிலை: இறைவி, தலைவர், பெரியார் களம்; ஆடிட்டர் ஜெயராமன் , செயலாளர், பெரியார் களம், வீரவணக்க உரை: கவிஞர் கலி. பூங்குன்றன், பொதுச்செயலாளர், திராவிடர் கழகம் வழக்கறிஞர் அ. அருள்மொழி, பிரச்சார செயலாளர், திராவிடர் கழகம் கோ. கருணாநிதி, பொதுச்செயலாளர், AIOBC நன்றியுரை: பாரி

தலைவர் பிரபாகரனுக்கு தலைவர் கலைஞர் வாழ்த்து!

தலைவர் பிரபாகரன் பிறந்தநாளுக்கும் மாவீரர் நாளுக்கும் சேர்த்து தலைவர் கலைஞர் விடுத்துள்ள நம்பிக்கை வாழ்த்து! தலைவர் கலைஞர் இன்று முரசொலியில் எழுதியுள்ள கடிதத்திலிருந்து: "இரண்டாவது முறையாக முரசொலியில் வெளிவந்து கொண்டிருந்த "பாயும் புலி பண்டாரக வன்னியன்'' வரலாற்று ஓவியம்; முடிவுற்றுவிட்டது. எத்தனை முறை அந்த வீரனின் வரலாறு வெளிவரினும்; அந்த வீரகாவியம் வாழ்ந்து கொண்டே இருக்கும். 1991-ம் ஆண்டு வாக்கில் வெளியிடப் பட்டதும், நான் எழுதிய வரலாற்றுப் புதினமுமான "பாயும் புலி பண்டாரக வன்னியன்'' எனும் எழுச்சி மிக்க காவியத்தில், நான் படைத்துள்ள கதாபாத்திரங்கள் பண்டாரக வன்னியனும், அவன் உள்ளங்கவர்ந்த காதலி, குருவிச்சி நாச்சியாரும், அவன் அருமைத் தங்கையர், நல்ல நாச்சியும், ஊமைச்சி நாச்சியும் இலங்கை மண்ணில் தமிழர்களின் உரிமை காக்கப் போராடியவர்கள் என்று நான் சித்தரித்துள்ளேன். துரோகிகளை சந்திக்க நேர்ந்த தூயவன்... துரோகிகளைச் சந்திக்க நேர்ந்த அந்த தூயவனுக்கு நல்ல நண்பர்களும் இல்லாமலில்லை. கி.பி. 1815-ம் ஆண்டு வரையில் கண்டியை ஆட்சி செய்து ஆங்கிலேயர்களால் சிறைபிடிக்கப்பட்டு தமிழ