முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

NRS Creations-ன் புகை (குறும்படம்)

குறும்படங்களின் வருகை தமிழில் அதிகரித்திருக்கிறது. பலருக்கு அது திரைப்படத்துறையில் நுழைவதற்கான அடையாள அட்டை. காட்சி தொடர்பியல் மாணவர்களுக்கு அது மதிப்பெண். ஆனால் அவ்வடிவம் தமிழில் கவனம் பெற்றிருக்கிறது என்பது உண்மை. அதற்கு வணிக ரீதியான வரவேற்பு வரும் நாளும் எதிர்காலத்தில் வரக்கூடும்.

சரி, இப்போது நம் செய்திக்கு வருவோம். முதன்முதலில் கதை எழுதுவோருக்கு என்று பொதுவாக சில கருக்கள் இருக்கும். ஏழைத் தாய், அநாதைச் சிறுவன்... இப்படி..
அதேபோல், நாடகம், குறுநாடகம், பள்ளி, கல்லூரி கலைநிகழ்ச்சிகளில் செய்வதற்கென்று தயாராக எய்ட்ஸ், தேசீய ஒருமைப்பாடு ... இப்படி சிலதுகள் இருக்கும்.

அதேபோல குறும்படம் எடுக்க நினைப்போருக்கும் சில பொதுவானவை உண்டு...
ரொம்ப சீரியஸான சிலரின் முதல் ஸ்கிரிப்ட் கண்டிப்பாக பாலியல் தொழிலாளிகள் பற்றியதாக இருக்கும். அவை போக இன்னும் புகைப்பிடித்தல், எய்ட்ஸ், சாலைவிதிகள் இப்படி சில....

அந்த வகையில் திரைப்படக்கல்லூரியில் சேர்ந்த பிறகுநான் எடுத்த முதல் குறும்படமும் சம்பிரதாயத்தை மீறாமல்(இதில் மட்டும்) புகை பற்றியதே. ஏதோ கொஞ்சம் நக்கல் தொணியில் சிந்தித்தேன்.

மற்றபடி, என்னுடைய முதல் குறும்படம் அதற்கு முன்பாகவே செய்யப்பட்டுவிட்டது. அதனைப் பின்னொரு வேளையில் பதிவிட்டு பழிவாங்குவேன். அது பெண்ணியம் தொடர்பான பாடல்

இப்போதைக்கு 'புகை' உங்களுக்குப் பிடிக்கிறதா என்று பார்ப்போம்.



துவக்க கட்ட முயற்சியாதலால் வழக்கம்போல் இசை மட்டுமே! வசனம் கிடையாது! தவறுகள் இருக்கும். பொறுத்துக்கொள்க.

இந்தக் குறும்படம் முடித்து நண்பர் அழகுராஜவுக்கு போட்டுக் காட்டியபோது அவர் இன்னொரு கோணத்தில் முடிவைச் சொன்னார். உங்களில் பலருக்கும் அது தோன்றலாம். முயற்சியுங்கள்... இல்லாவிட்டால் பின்னூட்டத்தில் சொல்கிறேன்.

(குறிப்பு:
1. போட்டி ஒன்று வைப்பதாக முன்னுரையில் அறிவித்திருந்தேன். வேறு வழியில்லை..இதையே போட்டியாக ஆகிவிடுகிறேன். பரிசெல்லாம் கேட்கக் கூடாது ஆமா...
2. இந்தப் பதிவுக்கு பின்னூட்டத்தை அதிகரிக்கவும் வேறு வழியில்லை...ஹி ஹி ஹி)

தலைப்புக்குக் குறிப்பு: நிறைய பேர் புகை என்று தலைப்பு வைத்து எடுத்திருக்கக்கூடும் என்பதால் கம்பேனி பெயரிலேயே பதிந்துவிடுவோம் அதுதான்... "NRS Creations-ன் புகை".
"புகை 2005" என்று தலைப்பு வைக்கலாம் என்றும் யோசித்தேன். 2005-லேயே ஏகப்பட்ட புகை வந்திருக்கக்கூடும் என்பதால் இந்த முன் ஜாக்கிரதை. இதுக்கும் ஹி.ஹி.ஹி.

கருத்துகள்

இராம்/Raam இவ்வாறு கூறியுள்ளார்…
//1. போட்டி ஒன்று வைப்பதாக முன்னுரையில் அறிவித்திருந்தேன். வேறு வழியில்லை..இதையே போட்டியாக ஆகிவிடுகிறேன். பரிசெல்லாம் கேட்கக் கூடாது ஆமா...
2. இந்தப் பதிவுக்கு பின்னூட்டத்தை அதிகரிக்கவும் வேறு வழியில்லை...ஹி ஹி ஹி)//

:))
சீமாச்சு.. இவ்வாறு கூறியுள்ளார்…
பிரின்சு, உங்கள் குறும்படம் நல்லாயிருந்தது...

கடைசியில் அந்த புத்தகம் படிக்கும் அன்பர் தன் கர்ச்சீப்பால் தன் முகத்தில் கட்டிக் கொள்வது மாதிரியிருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ...

அன்புடன்,
சீமாச்சு...
முரளிகண்ணன் இவ்வாறு கூறியுள்ளார்…
nice

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்....

நான் வாய்விட்டு உரக்கப்பாடி மகிழ்ந்தது போல் நீங்களும் கேட்டு, பாடி மகிழ வேண்டாமா? இதோ புரட்சிக் கவிஞர் ஓங்கி ஒலித்த "சங்கே முழங்கு" பாடல் கலங்கரை விளக்கம் திரைப்படத்திலிருந்து.... KalangaraiVilakkam... சங்க நாதம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றூதூது சங்கே! பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்! வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்! எங்கள் வாழ்வும்...... -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owner - Dinam