முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வீரவணக்கம்! வீரவணக்கம்!!

மாநாட்டுத் தீர்மானங்களின் தொடக்கத்தில் களத்தில் நின்று போராடி மடிந்த கொள்கை மறவர்களுக்கு வீரவணக்கம் தெரிவிக்கும் இரங்கல் தீர்மானம் தெரிவிக்கும் வழக்கம் உண்டு.

முற்றிலும் எதிர்பார்க்காத வண்ணம், நம் அனைவரையும் துயரக் கடலில் ஆழ்த்தியதோடு நாம் இன்னும் முனைப்பாக செயலாற்றி, நம் உரிமையை வென்றெடுக்க நம்மைத் தூண்டியுள்ள வீரத் தளபதிகளின் மறைவுக்கு வீர வணக்கம் செலுத்த வேண்டிய நிலையில் நாம் உள்ளோம்.
வீரவணக்கம் செலுத்துவதோடு, தமிழீழத் தாயகத்தில் எழுச்சி ஏற்கும் நாளாக அமைந்துவிட்ட மாவீரர்களின் இறுதி நிகழ்ச்சியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம்.






(நன்றி: த.அருள்எழிலன்)

வீரவணக்கம்; வீரவணக்கம்!

வென்றெடுக்கப் போகும் எங்கள் நாட்டின்
வீரவித்துக்கள் நீவீரே!
மண்கொள்வதில்லை உங்கள் உடல்கள்...எங்கள்
மனங்கொண்டு சினம் வளர்த்து
ஈழம் படைக்க உரமாகின்றன!
வீரவணக்கம்; வீரவணக்கம்!

உம்மைக் கொன்றதும்
எங்கள் அமைதி முகத்தைச்
சிதைத்ததும் ஒன்றே!
பேச்சு தேவையில்லை
இனியென சிங்களம்
சொல்கிறது!
இனி அவர்கள்
பேசவேகூடாது என்கின்றன
உம்முடல்கள்...
செய்து முடிப்போம்!
பகையைக் கொய்து முடிப்போம்!
வீரவணக்கம்; வீரவணக்கம்!

கருத்துகள்

கானா பிரபா இவ்வாறு கூறியுள்ளார்…
மிக்க நன்றி, உம்போன்ற உறவுகளை எம் நெஞ்சினில் இருத்தி வைப்போம்.
Thamizhan இவ்வாறு கூறியுள்ளார்…
புன் சிரிப்பில் எதிரியையும்
வர வேற்றப் போர்மறவா!
உன் மறைவில் சிரிக்கின்றார்
வீணர் விரைவினிலே
விடிந்திடுமே தமிழீழம்!
தமிழீழ மலர் படைப்போம்
தமிழன் உன் புகழ் பாடி!
VSK இவ்வாறு கூறியுள்ளார்…
இலங்கை விமானப்படை தாக்குதலில், விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன், நேற்று பலியானார். அவரது மறைவை ஒட்டி முதல்வர் கருணாநிதி இன்று வெளியிட்ட இரங்கல் கவிதை:

எப்போதும் சிரித்திடும் முகம்-
எதிர்ப்புகளை எதிர்த்திடும் நெஞ்சம்!

இளமை; இளமை; இதயமோ;
இமயத்தின் வலிமை! வலிமை!

கிழச் சிங்கம் பாலசிங்கம் வழியில்
பழமாய்ப் பக்குவம் பெற்ற படைத் தளபதி!

உரமாய்த் தன்னையும் உரிமைப் போருக்கென உதவிய
உத்தம வாலிபன்- உயிரனையான்-
உடன்பிறப்பனையான்;
தமிழர் வாழும் நிலமெலாம் அவர்தம் உளமெலாம்
தன் புகழ் செதுக்கிய செல்வா; எங்கு சென்றாய்?

"இதற்கு என் பதில் கவிதை!"

எங்கு சென்றாய் எனக் கேட்கும் தலைவா
அங்கு நீயின்னும் செல்லாததாலன்றோ
பொங்குதமிழ்க் கவி புனைந்து
விஞ்சு புகழ் பாடுகின்றாய்!

நாற்பது எம்ப்பீக்கள் உன்கையில்
நாநிலம் நடப்பதுமோ உன் தயவில்
என்ன செய்தாய் இதுவரையில்
தமிழீழம் கிடைப்பதற்கு

போக்குவரத்துத்துறை கிடைக்க
போர்க்கொடி நீ பிடித்தாய்
தனியறையில் மறைந்துகொண்டு
தனித்துவம் நீ பெற்றாய்!

தமிழீழம் பற்றியொரு
தனிக்குரல் கொடுத்ததுண்டா
இதுவரையில் சொல்லப்பா
சொல்லின் செல்வனே!

தமிழ்ச்செல்வன் போனாலென்ன
செல்வங்கள் பலவற்றை
விதித்துத்தான் சென்றிட்டான்
அதுபற்றிக் கவலை வேண்டா!

முகஸ்துதியாய் வார்த்தைகளை
கொட்டுவதை விடுத்திட்டு
தனியீழம் பற்றியொரு
மசோதாவைக் கொண்டுவந்து

அதுதோற்கினும் உன்புகழை
தமிழனுக்குக் குரல் கொடுத்த
தனிப்பெரும் தலைவனெனும்
பெயரினை நீ பெற்றிட்டால்

அதுவே நீ வாழ்ந்த
எண்பதாண்டுக்குப் பெருமை
இதை நீ உணரமாட்டாய்
உன் கவலை இதுவல்ல

எம்தமிழர் ஒவ்வொன்றாய்
செத்தாலும் உனக்கிங்கு
கவலையில்லை ஏனென்றால்
உன்கையில்தான் தமிழிருக்கே

பாடிடு இன்னொரு இரங்கல் கவிதை
மூடிடு உன் இதயக் கதவை
தொடர்ந்திடும் எம்தமிழர் போராட்டம்
விடிந்திடும் ஓர்நாள் தமிழீழம்
லக்கிலுக் இவ்வாறு கூறியுள்ளார்…
//தமிழீழம் பற்றியொரு
தனிக்குரல் கொடுத்ததுண்டா//

வீ.எஸ்.கே. கேட்கிறேன் என்று தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். தமிழீழம் குறித்த பார்ப்பனர்களின் நிலை என்ன?
VSK இவ்வாறு கூறியுள்ளார்…
//வீ.எஸ்.கே. கேட்கிறேன் என்று தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். தமிழீழம் குறித்த பார்ப்பனர்களின் நிலை என்ன?//

இப்படி ஒரு கேள்வி என்னைப் பார்த்து கேட்பதற்கு நீங்கள் வெட்கித் தலை குனிய வேண்டும் திரு. லக்கி லுக்!

எனக்கு பார்ப்பனர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றிக் கவலை இல்லை. அவர்களுக்கென ஒரு ஒட்டு மொத்தக் குரல் இருக்கிறதா எனவும் நானறியேன்.

தமிழனுக்கு ஒரு கேடு என வரும் போது ஜாதி பார்க்கும் உங்களை நினைத்தால் எனக்கு பரிதாபமாக இருக்கிறது.

இதே மடலை உங்கள் பதிவிற்கும் அனுப்பியிருக்கிறேன்.

நான் ஒரு தமிழன் என்ற முறையில் என் கருத்தைப் பதிகிறேன்.

இதில் ஜாதி பார்த்து கேட்பது கேவலமாகப் படுகிறது.

கட்சி அபிமானம் எப்படியெல்லாம் கண்ணை மறைக்கிறது....உண்மையையும் ஒதுக்கி.... என நினைக்கையில் வேதனையாய் இருக்கிறது.

நடப்பது நம் தமிழர் கொடுமை.

அதைப் பற்றிப் பேசுங்களேன்!
நன்றி.
லக்கிலுக் இவ்வாறு கூறியுள்ளார்…
வீ.எஸ்.கே. அய்யா! வெட்கித் தலைகுனிய வேண்டியது நானல்ல. நீங்கள் தான். உங்கள் சாதிப்பற்று வெளிப்படையாக தெரிந்துகொள்ளக் கூடிய அளவுக்கு நடந்துகொள்கிறீர்கள்!

நம்ம விவாதம் இங்கே பின்னூட்டங்களில் நடக்குது அய்யா. இங்கே டிஸ்டர்ப் பண்ண வேணாமே?
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி கானாபிரபா, தமிழன், வி.எஸ்.கே மற்றும் லக்கிலுக்..
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
அ.உங்களின் வணக்கத்திற்கு நன்றி். உங்களைப்போன்ற இந்திய தமிழர்களின் ஆதரவு எமக்கு மிகத் தேவை. நன்றி
குசும்பன் இவ்வாறு கூறியுள்ளார்…
"வீணர் விரைவினிலே
விடிந்திடுமே தமிழீழம்!
தமிழீழ மலர் படைப்போம்
தமிழன் உன் புகழ் பாடி!"

நம்பிக்கை என்றுமே வீண்போவது இல்லை! சீக்கிரம் நடக்கவேண்டும் என்பதே ஆசை!
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி குசும்பன், & பாஷா!
ஒரு சின்ன திருத்தம்
"இந்தியத் தமிழன் அல்ல; தமிழ்நாட்டுத் தமிழன்"
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
//தமிழ்நாட்டுத் தமிழன்//

ஆ தமிழ் நாட்டுத் தமிழனா,
நம்பவே முடியலயே.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்....

நான் வாய்விட்டு உரக்கப்பாடி மகிழ்ந்தது போல் நீங்களும் கேட்டு, பாடி மகிழ வேண்டாமா? இதோ புரட்சிக் கவிஞர் ஓங்கி ஒலித்த "சங்கே முழங்கு" பாடல் கலங்கரை விளக்கம் திரைப்படத்திலிருந்து.... KalangaraiVilakkam... சங்க நாதம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றூதூது சங்கே! பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்! வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்! எங்கள் வாழ்வும்...... -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owner - Dinam