முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நான் சின்னப் பப்பா!

சரியாக ஓராண்டாகிறது.

விஜய் தொலைக்காட்சியின் 'நீயா? நானா?' விவாதத்திற்கு வந்த அழைப்புக்காக தயாராகிக்கொண்டிருந்தேன். மாலை 6 மணிக்கு வந்துவிடுங்கள் என்ற அழைப்போடு, எங்கள் அணியில் பேசத் தோழர்களையும் அழைத்துவருமாறு சொல்லியிருந்தார்கள். உடன் தோன்றிய சிலரில் 'மிதக்கும் வெளி' சுகுணா திவாகரும் ஒருவர். (அப்போது எனக்கு மிதக்கும் வெளியாக அறிமுகம் ஆகியிருக்கவில்லை.) தகவலைச் சொல்லி அழைத்தேன். தன் நண்பர் செந்தில் வந்திருப்பதாகவும், இணையத்தில் ப்ளாக் எழுதுகிற திராவிடத் தமிழர்கள் இன்றைக்கு மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்காவில் சந்திக்கவிருப்பதால் தான் அங்கே செல்வதாகவும் தெரிவித்தார். உடன் செந்திலின் எண் வாங்கிக் கொண்டேன். அவரிடம் பேசியபோதுதான், "திராவிட ராஸ்கல்கள் முன்னணி" என்று தாங்கள் இயங்கப் போவாதாக தெரிவித்தார். இணைய ஊடகம் நம் கையை விட்டுப் போய்விடுமோ என்று எண்ணியிருந்தவனுக்கு இப்படி ஒரு சந்திப்பு என்றதும் ஆனந்தம். அதிலும் சென்னை மட்டுமல்லாமல், நெல்லை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தெல்லாம் வந்து சந்திக்கிறார்கள் என்றதும், பழைய பேனா நண்பர்கள் முறையின் நினைவு... முகம் தெரியாமல் பழகியவர்கள் நேரில் பார்க்கும்போது எப்படி இருக்கும்? என்ற கற்பனையே ஆனந்தத்தைத் தந்தது.

ஆர்வம் மேலிட விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேறு சிலரை அனுப்பிவிட்டு, அண்ணன் பெரியார் சாக்ரடீசுடன், நாகேஸ்வரராவ் பூங்கா நோக்கி கிளம்பினேன். நாங்கள் செல்வதற்குள் எல்லாம் ஒரு வழியாக செடிகளுக்கு மத்தியில் செட்டிலாகியிருந்தார்கள். இதுதான் வலைப்பதிவர் கூட்டம் என்பதறியாமல் கொஞ்சம் சுற்றினோம். (ஏனெனில் அங்கே அடிக்கடி பென்சனர் கூட்டம், நிதி நிறுவனத்தில் ஏமாந்தோர் கூட்டம் என ஏதாவது ஒன்று நடந்துகொண்டே இருக்கும்)

நேரடியாக அப்போது வலைப்பூகளில் எழுதாததால், நாங்கள் பார்வையாளராக அறிமுகப்படுத்திக் கொண்டு அமைதியாக உரையாடலை கேட்டுக் கொண்டிருந்தோம்(அந்த இருட்டில் கேட்கத் தான் முடிந்தது.). அடர்ந்த இருட்டுக்குள் 'னல் றக்கும் விவாத'மாக அப்போதுதான் போலி விவகாரம் சென்று கொண்டிருந்தது. (ஓராண்டு கழித்தும் அதே அ.ப.வி.- ஆனால் அப்போது அது ஏதோ புனைப்பெயர் விவகாரம் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். அதனுடைய தீவிரமே அண்மையில்தான் தெரிந்தது.)
சிலரின் குரல் வேறுமாதிரி இருந்தபிறகுதான் அது அனைத்து வலைப்பதிவர்கள் சந்திப்பாக மாறிவிட்டிருந்தது தெரிந்தது. எனக்குத் தெரிந்து அதில் பாலபாரதி, (வரவனையான் என்று எனக்குத் தெரியாத) செந்தில், ஜி.கவுதம், பொன்ஸ் அக்கா ஆகியோர் இருந்தனர். சில முகங்கள் இன்று பார்க்கும்போது அடையாளம் தெரிகின்றன('வினையூக்கி'யும் தெரிகிறாரே). இப்போது வலைப்பதிவாளராகவும், அப்போது பார்வையாளராகவும் வந்த வளர்மதியும் என்னைப் போலவே திராவிடப் பதிவர் சந்திப்பு என்று நினைத்துக்கொண்டு பேசியதும், அவரை 'உண்மை'யின் செய்தியாளர் என்று அண்ணன் பாலபாரதி எழுதியதும் அதற்கு நான் தந்த மறுப்பும் இங்கே.

சந்திப்பு முடிந்து வெளியில் வந்தோர் 'டீ, போண்டா' சாப்பிடக் கிளம்பியதும், இன்னும் சிலர் அரசுக் கடைக்குச் செல்லக் கிளம்பியதும் நன்கு நினைவிருக்கிறது. வெளியே கிளம்பும்போது எனக்கு முகவரி அட்டை கொடுத்து, தான் வணிகம் குறித்து எழுதுவதாக அறிமுகப்படுத்திக்கொண்ட நண்பரும் நினைவிலிருக்கிறார். கையில் கொண்டுவந்திருந்த உண்மையின் சில பதிவுகளை வந்திருந்தவர்களுக்கு வழங்கிவிட்டு விடைபெற்றோம். அந்த இருட்டோடு பின்னர் வந்த பல இருட்டுகளை நான் இணையத்தின்முன் கழிக்க நேர்ந்ததும் நடந்தது...

இருட்டில் எடுத்த புகைப்படங்கள், முற்றிலும் சிறிய பிளாஷ் கொண்ட எனது கையடக்கக் கேமராவில் எடுக்கப்பட்டதால் ஓரளவு 'இவர்தான் இவர்' என்று அடையாளம் காணலாம். மற்றவை தெளிவில்லாததால் 'blur' செய்து வைத்திருக்கிறேன்.. அம்புட்டுதான்! ஓராண்டு கடந்து இந்தப் படங்களைப் பதிவிடுவதில் மகிழ்வடைகிறேன்.

("அடப்பாவி, அப்போ நீ எடுத்த வீடியோவெல்லாம் இந்தக் காலத்தில கிடைக்காதா?"ன்னு கேக்குற பாலபாரதி அண்ணனில் குரல் மீண்டும் ஒருமுறை ஒலிக்கிறது.)

இதிலிருந்து பெறப்படும் செய்தி: நானும் வலைப்பதிவர் குடும்பத்துக்குள் வந்து ஓராண்டு நிறைவடைகிறது. இப்ப சொல்லுங்க நான் சின்ன பப்பாதானே! அந்த மகிழ்ச்சிக்கு அங்கீகாரம் கிடைச்சிருக்கு.. என்னன்னு பட்டியலோட திங்கள்கிழமை சொல்றேன்.

கருத்துகள்

Yogi இவ்வாறு கூறியுள்ளார்…
தொடர்ந்து கலக்க வாழ்த்துக்கள் பிரின்ஸ் :)
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
பாப்பாவோட சந்தோசம் பாப்பாவுக்குத் தான் தெரியும். பொன்வண்டோட விளையாடத் தெரியாத பாப்பாக்கள் நிறஞ்ச இந்த ஊரில, பாப்பா படத்தோட வந்து வாழ்த்திட்டு போற உங்களுக்கு நன்றி பொன்வண்டு!
அட.... எத்தனை பா...பா... பின்னிட்டடா பிரின்சு!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்....

நான் வாய்விட்டு உரக்கப்பாடி மகிழ்ந்தது போல் நீங்களும் கேட்டு, பாடி மகிழ வேண்டாமா? இதோ புரட்சிக் கவிஞர் ஓங்கி ஒலித்த "சங்கே முழங்கு" பாடல் கலங்கரை விளக்கம் திரைப்படத்திலிருந்து.... KalangaraiVilakkam... சங்க நாதம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றூதூது சங்கே! பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்! வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்! எங்கள் வாழ்வும்...... -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owner - Dinam