முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடஒதுக்கீடு இடைக்காலத் தடை: நம் கடமை

உயர்கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இட ஒதுக்கீடு அளிக்கும் மத்திய அரசின் சட்டத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதி மன்றம் சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதித்து(stay) தீர்ப்பு அளித்துள்ளது. இந்த அரசியல் சட்டத்திற்கு விரோதமான தீர்ப்பு ஒடுக்கப்பட்டோரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
"1931-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்த இடஒதுக்கீடு வழங்கப்படுவதால் இதை ஏற்க முடியாது. அதன்பின் சூழல்கள் மாறியுள்ளது. இப்போது சமூகத்திலும், பொருளாதாரத்திலும் பின்தங்கியவர்கள் யார் என்பதை மத்திய அரசு தெளிவாகக் கூற வேண்டும். இது வாக்குவங்கியைக் கணக்கில் கொண்டு இயற்றப்பட்ட சட்டம்" என்றெல்லாம் தன் போக்கில் உளறியிருக்கிறார்கள் உச்சிக்குடுமி உச்சநீதிமன்ற நீதிபதிகள்.
"வாக்குவங்கியைக் குறிவைத்துத் தான் இடஒதுக்கீடு" என்பது அப்பட்டமான இடஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்களின் வெற்றுக்கூச்சலாகும். அதையே நீதிபதிகள் பயன்படுத்தியிருப்பது அவர்கள் யார் என்பதை அடையாளம் காட்டுகிறது.சரி, "1931-ன் படி பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை இல்லை; எனவே இப்போது ஜாதி வாரியாக கணக்கெடுப்பு எடுக்கப்படவேண்டும்" என்கிறது தீர்ப்பு! அதாவது பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை குறைந்துள்ளது என்ற கருத்தில்தான் இந்த வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அவர்கள் சொற்படியே வருவோம். வாக்குவங்கியைக் குறிவைத்துத் தான் இடஒதுக்கீடு என்றால் இடஒதுக்கீட்டால் பலன் பெறுவோர் அதிகம் என்றுதானே பொருள். அப்படி இருக்க, பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை குறைந்திருப்பது போன்ற தோற்றத்தை அடுத்தடுத்த வரிகளிலேயே போட்டு, தங்கள் அவசர ஆத்திரப் புத்தியைக் காட்டிக்கொண்டுள்ளனர் இரண்டு பார்ப்பனரல்லாதாத உயர் ஜாதி நீதிபதிகள்.
ஜாதி வாரியாக எடுக்கப்பட்ட பழைய கணக்கெடுப்புகளைக் காட்டக்கூடாது; சமூக அளவில் பிந்தங்கியவர்களை அடையாளம் காட்டவேண்டும் என்று சொல்லும் நீதிமன்றம்தான் - இடஒதுக்கீட்டின் மூலம் நாட்டைத் துண்டாடப் பார்ப்பதாகத் தாவிக் குதிக்கிறது. எத்தனை முரண்பாடுகள்.
சரி, சந்தடி சாக்கில் சிந்து பாடுவதைப் போல "சமுதாயத்தில் பிந்தங்கியவர் களோடு,'பொருளாதாரத்தில்' பிந்தங்கியவர்கள்" என்றும் ஒட்டுப் போடுகிறது உயர்ஜாதி ஊசி!
உச்சநீதி மன்ற நீதிபதிகளுக்கும் இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையின் முக்கியத்துவம் இப்போது இன்னும் நன்றாகத் தெரிகிறது.இதற்கு நமது எதிர்ப்பையும், தமிழர்களின் உணர்வையும் காட்டும் விதத்தில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் 31.3.2007 அன்று தமிழகம் தழுவிய அளவில் முழு வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளன. இதில் அனைத்துத் தரப்பாரும் கலந்து கொண்டு நம் உணர்வைக் காட்ட வேண்டியது அவசர, அவசியமாகும்.
மாணவர்களின் பங்கெடுப்பும் இதில் மிகவும் அதிகமானதாக இருக்கவேண்டியது அவசியமாகும். மாணவர் போராட்டத்தத் தவிர்க்கத் தான் தேர்வு அதற்கான தயாரிப்புகள் என்று மாணவர்கள் நெருக்கடியில் இருக்கும் இந்த நேரத்தில் தீர்ப்பு வருகிறது. ஆனாலும் நாங்கள் விழிப்போடிருக்கிறோம் என்பதை சமூகத்திற்குக் காட்டவேண்டிய தருணத்திலிருக்கிறோம்.

கருத்துகள்

சிவபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் கருத்தில் முழுமையாக உடன் படுகிறேன்.

வேலை நிறுத்ததால் இழக்கப் போவைதைவிட இந்த தடை உத்தரவால் நாம் இழந்த்தது ஏராளம். இரு கோடுகள் தத்துவம் தான்..

தமிழக அரசின் கரங்களை வழுப்படுத்துவோம். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. இல்லை நம் அனைவருக்கும் இழப்பே!!
லக்கிலுக் இவ்வாறு கூறியுள்ளார்…
அருமையான அலசல்.

//வேலை நிறுத்ததால் இழக்கப் போவைதைவிட இந்த தடை உத்தரவால் நாம் இழந்த்தது ஏராளம்.//

வழிமொழிகிறேன்.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
பந்தில் சன் டிவியும் கலந்து கொள்ளுமா? இல்லை மசாலா படம் போட்டு, அதிக டிஆர்பி பெற்று காசு பார்ப்பார்களா?
கூலிவேலை செய்யும் அன்றாடங்காய்ச்சிகள் மட்டும் ஒரு நாள்பட்டினி கிடக்க வேண்டும்
சன் டிவி நிர்வாகம் மட்டும் கூடுதல் விளம்பரம் பெற்று அதிக லாபம் சம்பாதிக்கும் ,
சூப்பர் சமுக நீதி
BadNewsIndia இவ்வாறு கூறியுள்ளார்…
Prince,

உங்க‌ள் கோப‌ம் புரிந்தாலும், இந்த‌ இட‌ ஓதுக்கீட்டை ஒரு விளையாட்டாக‌ விளையாடும் அர‌சிய‌ல் தொட‌ருவ‌தில் என‌க்கு சிரிதும் உட‌ன்பாடில்லை.

உச்ச‌ நீதிம‌ன்ற‌ம் கேட்க்கும் புள்ளிவிவ‌ர‌ங்க‌ளை ச‌ம‌ர்ப்பித்துவிட்டு அடுத்த‌ கட்ட‌ம் என்ன‌வென்று பார்ப்ப‌தே ச‌ரி.

உங்கள் பார்வைக்கு
சோத்துக்கட்சி இவ்வாறு கூறியுள்ளார்…
SC/ST-க்கு வழங்கப்படும் சலுகைகளில் எந்த வித மாற்றமும் இல்லையே.

OBC மக்கள் மனசாட்சியைத் தொட்டுச் சொல்லட்டும், ஓபிசி பிரிவுகளில் உள்ள சாதி மக்கள் இன்னமும் நசுக்கப் படுகிறார்களென்று.

எம்.ஜி.ஆர் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு என்று சொன்னபோது கிளம்பிய எதிர்ப்பு அறியாததா? குறிப்பாக ஓபிசி சாதியினர் இன்னமும் பிற்படுத்தப்பட்டவன் என்று சொல்லிக்கொண்டிருப்பது ஏமாற்றுத்தனம்

இந்த பந்த், வோட்டு வங்கிக்காக கருணாநிதி ஆடும் நாடகம்.

இப்போது விதித்திருப்பது, வெறும் இடைக்காலத் தடை மட்டுமே, காசுகள் பரிமாறப்படலாம், நீதிபதிகள் விலை பேசப் படலாம், அல்லது மிரட்டப்படலாம், ம்ம்...நம் இந்தியநாடு..

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்....

நான் வாய்விட்டு உரக்கப்பாடி மகிழ்ந்தது போல் நீங்களும் கேட்டு, பாடி மகிழ வேண்டாமா? இதோ புரட்சிக் கவிஞர் ஓங்கி ஒலித்த "சங்கே முழங்கு" பாடல் கலங்கரை விளக்கம் திரைப்படத்திலிருந்து.... KalangaraiVilakkam... சங்க நாதம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றூதூது சங்கே! பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்! வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்! எங்கள் வாழ்வும்...... -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owner - Dinam