முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜீவா மரணம் - "ஓ! மனமே!"

தமிழ்த் திரையுலகில் தனக்கென ஒரு பாணியை வகுத்துக் கொண்டு, தனிக்கவனம் பெற்று வந்த ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ஜீவா அவர்கள், தனது 'தாம்தூம்' படப் பிடிப்பின் முடிவில் ருஷ்யாவில் மாரடைப்பால் இறந்தார் என்ற செய்தி வந்துள்ளது. திடீரென வந்த இச்செய்தியை, ஒலிபரப்பிய சூரியன் பண்பலை தொடர்ந்து அவரது படமான 'உள்ளம் கேட்குமே'வில் இருந்து "ஓ மனமே!" பாடலையும் ஒலிபரப்பியது. எனது செல்பேசியில் கடந்து வந்த காலங்களை, நண்பர்களூடன், குடும்பத்துடன் இருந்த தருணங்களைத் திரும்பப் பெற முடியாத நேரங்களில், கேட்பதற்காக வைத்திருக்கும் பாடல் 'ஓ! மனமே'.

எனக்குப் பிடித்த பாண்டஸி இயக்குநர்களில் முக்கியமானவர் ஜீவா. அவரது துல்லியமான ஒளிப்பதிவும், அவர் பயன்படுத்தும் வண்ணங்களும், காட்சிப்பட்த்துதலும் எனக்குப் பிடித்தவை. அவர் அறிமுகப்படுத்தும் கொழுக் மொழுக் நடிகர்கள் கூட!

அவரது 12பி, உள்ளம் கேட்குமே, உன்னாலே உன்னாலே உள்ளிட்ட அனைத்து படங்களையும் ஒரு ரசிகனாக்க இருந்து ரசித்தவன் நான். எந்தவித சமூகக் கேடுகளுமற்ற பொழுது போக்குப் படங்கள் என்று அவரது படங்களை வரிசைப்படுத்தலாம். இன்னும், அவரது 12பி-யின் "சரியா? தவறா?" பாடலில் வரும் வைரமுத்துவின் பாடல்கள் எனக்கு பிடித்த பெண்ணுரிமை வரிகள்.
நீண்ட காலம் திரு. பி.சி. அவர்களிடம் உதவியாளராக இருந்து பயிற்சி பெற்றவர் ஜீவா.

தமிழ்த்திரையுலகின் இழப்பில் ஒரு திரை மாணவன் என்கிற முறையிலும், ஜீவா படங்களை ரசித்தவன் என்ற முறையிலும் எனது ஆழ்ந்த இரங்கலைப் பதிவு செய்கிறேன்.

அவர் நினைவாக....


Get Your Own Music Player at Music Plugin

கருத்துகள்

- யெஸ்.பாலபாரதி இவ்வாறு கூறியுள்ளார்…
:(((((
G.Ragavan இவ்வாறு கூறியுள்ளார்…
மிகவும் வருத்தத்திற்குரிய செய்தி. அவரது ஆன்மா அமைதிபெற இறைவனை வேண்டுகிறேன். அவரை இழந்து வாடும் உற்றார் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.
சாலிசம்பர் இவ்வாறு கூறியுள்ளார்…
பாடல்களை காட்சிப்படுத்துவதில் மணிரத்னம்,சங்கர் போன்றோரையும் விஞ்சியவர் என்றே நான் கருதுகிறேன்.தமிழ்த் திரையுலகத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு.
லக்கிலுக் இவ்வாறு கூறியுள்ளார்…
அவர் இயக்கிய 12பி திரைப்படம் என்னை மிகவும் வியப்படையச் செய்த ஒன்று. அன்னாருக்கு என் அஞ்சலிகள்!
லக்கிலுக் இவ்வாறு கூறியுள்ளார்…
மனசே ஆரலை தோழரே!

அவர் பெயரில் மட்டுமாவது ஜீவன் நிரந்தரமாக இருக்கட்டும்!
முத்துகுமரன் இவ்வாறு கூறியுள்ளார்…
திரூ,ஜீஇவா அவர்களீன் க்குட்ம்பத்தாருக்கு ஆழ்ந்த இரன்ன்கலைத்ஹ் தெரிவித்து கொள்கிறேன். அன்னாரின் ஆன்மா அமைதியுறட்டும்
உங்கள் நண்பன்(சரா) இவ்வாறு கூறியுள்ளார்…
படித்ததும் அதிர்ந்தேன், எனக்கும் மிகவும் பிடித்த இயக்குனர்களில் ஒருவர், இளமையான இயக்குனர், நம்மை விட்டுப் போனது வருத்தமே!
அவரின் ஆன்மா அமைதிபெறவும்,குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்
மருதநாயகம் இவ்வாறு கூறியுள்ளார்…
ஜீவாவின் குடும்பத்துக்கும், அவரின் ரசிகர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்
கானா பிரபா இவ்வாறு கூறியுள்ளார்…
ஆழந்த அனுதாபங்கள், என் பங்கிற்கும் ஒரு பதிவு போட்டிருக்கின்றேன், வீடியோ இணைப்புடன்

http://radiospathy.blogspot.com/2007/06/blog-post_26.html
selventhiran இவ்வாறு கூறியுள்ளார்…
நாயகன், நாயகி, காட்சியமைப்பு, ஒளிப்பதிவு, இசை, வரிகள், ஆடைகள் என அனைத்திலும் இளமை ததும்பும் படங்களை கொடுத்தவர் ஜீவா. அவரது மரணம் தமிழ் சினிமா ரசிகனுக்கு பேரிழப்பே...
ஆதிபகவன் இவ்வாறு கூறியுள்ளார்…
எனக்குப் பிடித்த இளம் டைரக்டர்களில் ஒருவர். நல்ல திறமையான ஓளிப்பதிவாளரும்கூட. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
துயரத்தில் பங்கு கொண்ட பாலகிஷ்ட அய்யர்:), ஜி.ரா, ஜாலிஜம்பர், லக்கிலுக், முத்துக்குமரன், உங்கள் நண்பன் (சரா), மருதநாயகம், செல்வேந்திரன், ஆதிபகவன், தனிப் பதிவிட்ட கானாபிரபா அனைவருக்கும் நன்றிகள்.
எம்.கே.குமார் இவ்வாறு கூறியுள்ளார்…
மிகவும் அதிர்ச்சியுற்றேன். சாதிக்கும் துடிப்பும் திறமையும் கொண்ட ஒருவர்! வருந்துகிறேன்.

தமிழ்த் திரையுலகத்திற்கு மாபெரும் இழப்பு.

அஞ்சலி!

எம்.கே.குமார்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்....

நான் வாய்விட்டு உரக்கப்பாடி மகிழ்ந்தது போல் நீங்களும் கேட்டு, பாடி மகிழ வேண்டாமா? இதோ புரட்சிக் கவிஞர் ஓங்கி ஒலித்த "சங்கே முழங்கு" பாடல் கலங்கரை விளக்கம் திரைப்படத்திலிருந்து.... KalangaraiVilakkam... சங்க நாதம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றூதூது சங்கே! பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்! வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்! எங்கள் வாழ்வும்...... -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owner - Dinam