முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பதிவாளர் சந்திப்பு :-( தேற்றுவார் யாருமில்லை

பதிவர் சந்திப்பைத் தவறவிட்டதற்கு காரணம் சொல்வதன்று இந்தப் பதிவின் நோக்கம்! மாறாக என்னை நானே தேற்றிக்கொள்ளவே!
இதற்கு முன்பு நடந்த சந்திப்பு (மயிலாப்பூர், நாகேஸ்வரராவ் பூங்கா)ஒன்றுக்கு, ப்ளாக்கராக இல்லாத போதே, விஜய் டிவி-யின் நீயா? நானா? நிகழ்ச்சியில் பங்கேற்க விடுத்த அழைப்பையும் மறுத்து வந்து கலந்து கொண்டேன். அப்போதுதான் வரவணையான், பாலா ஆகியோர் அறிமுகம் எனக்கு!
ஏப்ரல் 22 - பதிவாளர் சந்திப்பு என்று அறிவிப்பு வந்த நாளிலிருந்து, என் தேர்வு நாளுக்கு பங்கம் வராமல் இருப்பதை எண்ணி மகிழ்ந்து கொண்டிருந்தேன். அதனை பாலாண்ணனிடமும் சொல்லி உறுதிப் படுத்தியிருந்தேன்.

இதற்கென தனித் தயாரிப்புகளோடு வருவதெனத் தீர்மானித்திருந்தேன்.
ஏப்ரல்-20 அன்று தேர்வுகள் முடிந்து விட்டதென மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்த நேரத்தில், செயல்முறைத் தேர்வுகளையும், முடிக்க வேண்டிய குறும்படப் பணிகளையும் பட்டியலிட்டு, 23,24 உனக்கு கால்ஷீட் என்று கட்டிப்போட்டுவிட்டார். அதையும் தாண்டி இன்று வந்து தீர வேண்டுமென மதியம் கூட பாலாண்ணனிடம் பேசி தயார்செய்து கொண்டேன்.

காலையில் தொடங்கிய பணி ஈ......ழு.......ஈ......ழு..... என்று இழுத்து, நடந்து கொண்டிருக்க, மனதும் பணியில் இல்லாமல், முடிக்காமல் வரவும் முடியாமல்....


எனது நேரத்தை பிறிதொருவர் முடிவு செய்வதை என்னால் பொறுத்துக்கொள்ளவே முடியாது.

பதிவாளர் சந்திப்புக்காக சேகுவேரா பனியன் ஒன்று புதிதாய் எடுத்திருந்ததோடு, என் கல்லூரி செய்முறைத் தேர்வுக்கு படைக்க, தமிழ் வலைப்பூக்கள் பற்றிய அறிமுகம் தரும் வகையில் ஆவணப்படம் எடுப்பதற்காக நான் எழுதியிருந்த பிரதியையும் அனைவரிடமும் காட்டி மகிழவேண்டும் என்ற ஆசையெல்லாம் மீண்டும் மீண்டும் நினைவு வந்து என்னை வேறு சிந்தனையை நோக்கித் திரும்பாதவண்ணம் வைத்துக் கொண்டிருக்கின்றன. வழக்கமாக இப்படி ஏதாவது ஒரு மனச் சோர்வு என்றால் என்னைத் தேற்றும் என் தங்கையும் இப்போது பக்கத்தில் இல்லை. பாலாண்ணனுக்கு 6 மணிக்கு போன் போட்டு, 'இப்ப வரலாமா?' என்று கேட்டேன். எப்படியாவது இன்னுமொரு 1 மணிநேரம் நடக்கும் என்ற நப்பாசையில்!


ஆனால், 'நன்றி' என்ற முதல் வார்த்தையில் நான் நொறுங்கிப்போனேன்.

"முடிக்கப் போறோம். 3:30க்கு சரியா ஆரம்ப்பிச்சோம்; எவ்வளவு நேரந்தான் மொக்கை போடுறது. கிளம்பப்போறோம்" என்றார்.

கேமரா எடுத்து வருவதாக உறுதி அளித்திருந்தேன். நேரத்திற்கு இந்த முறை வந்துவிடு தம்பி என்று சொன்னபோதும் உறுதி சொல்லி இருந்தேன். ஆனால் "இந்த உறுதிகளைக் காக்க முடியவில்லையேடா உன்னால், உன்னை நம்பி ஏமாந்தேனே தம்பி?" என்று என்னை பார்த்து பாலாண்ணன் சொல்வது போலிருந்தது.

இதைவிட ஏமாற்றங்களையெல்லாம் எளிதில் தாங்கியிருக்கிறேன். ஆனால், சில சமயங்களில் குழந்தையாகிப் போகும்போது, சின்ன ஏமாற்றங்களையும், சொற்களையும் கூட தாங்கிக்கொள்ள முடிவதில்லை. கடற்கரை சாகச நிகழ்ச்சியைக் கூட அலுவலகத் தொலைக்காட்சியில் காணப் பிடிக்காமல் அமர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். அடுத்த முறைக்கான வாக்குறுதிகளெல்லாம் இப்போது இல்லை!
நான் எழுதிய ஆவணப்பட பிரதியின் சில பக்கங்கள்தான் நீங்கள் பார்ப்பது!

இப்போது நான் எப்படி இருக்கிறேன்? வேறென்ன இயலாமையின் வெளிப்பாடு கோபத்தோடுதான்!

கருத்துகள்

மா சிவகுமார் இவ்வாறு கூறியுள்ளார்…
ஏழு மணிக்கு வந்திருந்தால் கூட எல்லோரையும் பார்த்திருக்கலாமே. நான் ஏழு மணிக்குக் கிளம்பும் போது வெளியே டீக்கடை அருகில் எல்லோரும் பேசிக் கொண்டுதான் இருந்தோம்.

அன்புடன்,

மா சிவகுமார்
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
பாலாண்ணே!!! நற...நற.....
வகுப்புவாரி உரிமையை ஏற்காத காங்கிரசை ஒழிப்பதே என் முதல்வேலை என்றார் பெரியார்! பாலாண்ணே... தவறான தகவல் தந்த உங்களுக்காகவேனும், பா.க.ச.வை வளர்ப்பதே இனி என் முதல் வேலை!!!!!

தேற்றுதலுக்கு நன்றி.. சிவகுமார்!
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
விடுங்க தலைவா...இதெல்லாம் ஒரு மேட்டரா...? ஒரு கட்டிங்கைப் போட்டுட்டு கவுந்தடிச்சுப் படுத்து, எதிர்காலத்துல நீங்க எடுக்கப்போற படத்துல ஹீரோயின் டான்ஸ் ஆடப்போற குத்துப்பாட்டைக் கற்பனைப்பண்ணிப் பாருங்க.. எல்லாம் சரியாகிடும்.::))

ஆனாலும் அந்த சேகுவேரா டி.சர்டெல்லாம் கொஞ்சம் ஓவர்.
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
என்ன பண்றது தலைவா! போன வாரம் வாங்குன டி-ஷர்ட் கடைசி நாள் தேர்வுக்குக் கூடப் போடாம, பதிவர் கூட்டத்துக்குன்னு வச்சிருந்தேன்! சோகம் இருக்காதோ பின்னே!
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
தமிழ் வாழ்க, மன்னிக்கவும்,

தமில் வால்க அப்படின்னு சொல்லிட்டு, 4 லார்ஜ் ஓல்ட் மாங்க் அடித்துவிட்டு, பெரியார் சிலை உடைப்பிற்காக பார்பனனைத்திட்டிக் கொண்டு ரோட்டில் உருளுவீங்களா....அதவிட்டு இந்த பொலம்பல் பொலம்புரீங்க.....
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
தல..கூல் டவுன்..ரெண்டு பேரும் சேர்ந்து அடுத்த தபா பாத்துக்கலாம் :)

//ஆனாலும் அந்த சேகுவேரா டி.சர்டெல்லாம் கொஞ்சம் ஓவர். //

கொஞ்சமா? :)))
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
//தமில் வால்க அப்படின்னு சொல்லிட்டு, 4 லார்ஜ் ஓல்ட் மாங்க் அடித்துவிட்டு, பெரியார் சிலை உடைப்பிற்காக பார்பனனைத்திட்டிக் கொண்டு ரோட்டில் உருளுவீங்களா....அதவிட்டு இந்த பொலம்பல் பொலம்புரீங்க//
அப்படிச் செய்யிற ஆளுக இல்லைங்றதுனால்தான் எழுதுறோம். அப்புறம் அனானி... 'பார்பனனைத்திட்டிக் கொண்டு' மட்டும் இருக்குற ஆளுகளும் நாம இல்லை!
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
//'பார்பனனைத்திட்டிக் கொண்டு' மட்டும் இருக்குற ஆளுகளும் நாம இல்லை! //

சரி, ஒரு நாலு பேரோட பூணூலை அறுத்து எறிஞ்சா போகுது...அவ்வளவுதானே....
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
அடடா! அதுக்குத்தான் வேற பதிவு போடிருக்கோம்ல... அதில வந்து ஆரம்பிங்கப்பா! ஏதோ பதிவர் வட்டத்தில நல்ல பிள்ளையா இருப்போம்னா விடமாட்டுறீங்களே!
- யெஸ்.பாலபாரதி இவ்வாறு கூறியுள்ளார்…
வர்ரேன்னு சொல்லீட்டு கடைசியில கை குலுக்குறதுக்கா.. நீ.. !

விடியோவை வலை ஏத்த எண்ணி இருந்தேன். கவுத்துட்டு.. இப்படி பிலிங்பிலிங்கா எழுதுறியா..!

//பா.க.ச.வை வளர்ப்பதே இனி என் முதல் வேலை!!!!!//

:(

இனி என்ன வளர்க்க வேண்டி இருக்கு. அது தான் வள்:அர்ந்து நிக்குதே!
சென்ஷி இவ்வாறு கூறியுள்ளார்…
//பா.க.ச.வை வளர்ப்பதே இனி என் முதல் வேலை!!!!!//

அது பாகசன்னு எழுதியிருந்தீங்களா.. அதான் சும்மா எட்டிப்பாத்தேன்.. :))

சென்ஷி
லக்கிலுக் இவ்வாறு கூறியுள்ளார்…
உங்களை சந்திக்க முடியாமல் போனது வருத்தமாக இருக்கிறது :(
மிதக்கும்வெளி இவ்வாறு கூறியுள்ளார்…
ஒருவழியாத் தப்பிச்சீங்க பிரின்ஸ்.
பாலசந்தர் கணேசன். இவ்வாறு கூறியுள்ளார்…
காரைக்குடியா?. நான் உங்களை நேரில் வந்து பார்க்கிறேன். தொடர்பு கொள்ள தொலைபேசி எண் கொடுங்கள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்....

நான் வாய்விட்டு உரக்கப்பாடி மகிழ்ந்தது போல் நீங்களும் கேட்டு, பாடி மகிழ வேண்டாமா? இதோ புரட்சிக் கவிஞர் ஓங்கி ஒலித்த "சங்கே முழங்கு" பாடல் கலங்கரை விளக்கம் திரைப்படத்திலிருந்து.... KalangaraiVilakkam... சங்க நாதம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றூதூது சங்கே! பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்! வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்! எங்கள் வாழ்வும்...... -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owner - Dinam