முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உலகப் புரட்சி ஒருநாள் வெடிக்கும்!

படிப்பு(தேர்வு) விடுமுறைக்காக ஊருக்குப் போயிருந்ததால் ஒரு வாரமாக பதிவு போட முடியவில்லை. நான் ஊரிலிருந்த ஏப்ரல்9-ஆம் தேதி, ஈராக் அமெரிக்கா வசம் வந்ததன் 4-ஆம் ஆண்டுக் கொண்டாட்டம் பற்றியும், அதற்கு எதிரான போரட்டங்கள் குறித்தும் செய்தி வந்து கொண்டிருந்தது.
பார்த்ததும், அதே நாள் நான்கு வருடங்களுக்கு முன் நினைவு வந்தது. அமெரிக்க கூலிப்படைகள் ஈராக்கை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. சதாம் நாட்டை விட்டு வெளியேற கெடு விதிக்கிறது அமெரிக்கா! மார்ச்-20,2003-இல் தொடங்கியது அமெரிக்காவின் படையெடுப்பு. குடியிருப்புப் பகுதிகளின் மேல் தொடர் குண்டுவெடிப்புகளை நடத்தி எண்ணற்றோரைக் கொன்று குவிக்கிறது அமெரிக்கக் கூட்டுப்படைகள். போரைத் துணிவுடன் எதிர்கொள்வோம் என ஈராக் அறிவித்தது.
'மாவீரன் சதாம் வாழ்க' என்று எனது மிதிவண்டியின் முன்பகுதியில் சதாம் படத்தை ஒரு அட்டையில் ஒட்டி, கட்டிக்கொண்டு காரைக்குடியில் வலம் வந்தேன். எப்போதும் எங்கள் வீட்டின் தலைவாசலில் தந்தை பெரியாரின் படமும், மாவீரன் பிரபாகரன் படமும் இடம் பெற்றிருக்கும். அந்த நாட்களில் சதாம் படத்தையும் கணினி அச்சு எடுத்து அட்டையில் ஒட்டி வாசலில் வைத்திருந்தேன்.
உலக நாடுகளெல்லாம் வாய்மூடி மவுனம் காத்தன. வருங்கால வல்லரசு என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் இந்தியா, நிகழ்கால வல்லரசு முன் மூடிக்கொண்டிருந்தது. எவன் வந்தாலும் எதிர்த்து நிற்பேன் என்று உறுதியாய் நின்ற ஒரே காரணத்துக்காக எனக்கு சதாமை அவ்வளவு பிடித்துப் போயிற்று!
பி.எஸ்.என்.எல் செல்பேசியிலிருந்து செ.கு.செ.(SMS) அனுப்பிப் பழகாத நானே, "சதாம் பின்னாளில் பிடிக்கப்பட்டபோது, உலக பயங்கரவாதி அமெரிக்காவிற்கு ஒரு கொடூரவெற்றி - மாவீரன் சதாம் பிடிபட்டார்" என்று நிறையபேருக்கு அனுப்புமளவுக்கு கோபம் நிறைந்திருந்தது. நிலைகொள்ளாத கோபம் இருந்த நிலையில், அதற்கு ஒரு வடிகாலாய், நம்பிக்கையாய் வடித்த வரிகள் இவை! இப்போது ஆடுவோர் ஆடட்டும்.. "எங்கள் தேசத்தில் சூரியன் எங்களைக் கேட்டுத்தான் எழும்; எங்களைக் கேட்டுத்தான் விழும்" என்று இறுமாப்போடு சுற்றிக் கொண்டிருந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமே கைகட்டி வாய்பொத்தி இன்னொரு நாட்டாமையின் கீழ் ஏவல் நாயாக நிற்கிறது. அமெரிக்க ஆட்டமெல்லாம் எம்மாத்திரம்?
"ஆனானப்பட்டவனே தானான போடுறான்; அமெரிக்காவுக்கு என்ன கதியோ?" என்ற எண்ணம்தான் கொஞ்சம் நிம்மதி அடையவைத்தது. கொஞ்சம் நீண்ட வசன கவிதைதான் படியுங்கள்!


ஏ! ஏகாதிபத்திய சிந்தனையே!
அந்த வெறி பிடித்த மந்தைகளே!

உங்கள்
நாடு பிடிக்கும் ஆசையால்
நாடோடிகளான
இனங்கள் எத்தனை?

நீங்கள்
விதைத்துவிட்டுப்
போன குண்டுகளால்
புதைந்தவர்கள்
எத்தனை கோடி?

உங்கள்
ஈனப்பசிக்கு
இரையான பெண்கள்
எத்தனை லட்சம்?

மரப்பட்டை உரிக்கும்
ரப்பர் தோட்டங்களில்
உங்கள் இடுப்புப் பட்டை
உரித்த தோல்கள்
எத்தனை நீளம்?

வழிந்த குருதிநீர்
எவ்வளவு தேறும்?
தேயிலைத் தோட்டங்களில்
உரமாகிப்போன
உடல்கள் எத்தனை?

உங்கள் இறையாண்மைக்குத்
தங்கள் இறையாண்மையை
பலி கொடுத்த
நாடுகள் எத்தனை?

உங்கள் சிகரெட் நெருப்புக்கு
பற்றி எரிந்த
பூர்வீகக் குடிகளின்
குடில்கள் எத்தனை?

உங்கள் போர்ப் பயிற்சிக்கு
சுட்டுப் பழகியதில்
சுருண்டவர்கள் எத்தனை?

நீங்கள் சோதனை நடத்திய
நாகசாகி போல்
நாசமான நகரங்கள் எத்தனை?

நீ சுதந்திரம் தந்ததாய்
முரசறைவித்த பின்
மூட்டி விட்ட போர்கள் எத்தனை?

வளச்சிக்கு என்று
வாரி வழங்கி
வழித்துச் சுருட்டிய
வளங்கள் எத்தனை?

விடுதலை என்பதை (சு)வாசித்ததாலே
நீ மூச்சை நிறுத்திய
வீரர்கள் எத்தனை?

உலகைக் காக்கிறேன்
என்று உந்தன்
உலகப் படுகொலை
எத்தனை? எத்தனை?

உலகம் முழுதும்
நீ பஞ்சாயம் பண்ண
பட்டயம் பெற்ற
நாட்டாமைக்காரனா?

என் முடிவை
மாற்றச் சொல்ல
நீ யாரடா சதிகாரன்?

என் பிள்ளைக்குப்
பெயர் வைக்க
உனக்கு ஏதடா அதிகாரம்?

எனது நாடுவிட்டு
நான் வெளியேற
கெடுவை நீ விதிப்பதா?

எல்லை தாண்டி நீ
உள்ளே நுழைந்தபின்
இனியும் நாங்கள் பொறுப்பதா?

ஆட்டிப் படைக்கும்
உனது ஆட்டம்
அடங்கும் நாள்
இனி தொலைவில்லை!
அன்று...
ஆட்டம் முடிந்து
ஓட்டம் எடுத்தால்
உதவும் கரங்கள் உனக்கில்லை!

உன் காலடித் தடங்கள்
சுட்ட நிலங்கள்
எரிமலைக் குழம்பாகும்!
நீ எங்களுக்கிட்ட
விலங்குகள் சேர்ந்து
உனக்கே விலங்காகும்!

உலகப் புரட்சி
ஒருநாள் வெடிக்கும்!
உன் உலக ஆசைக்
கழுத்தை நெரிக்கும்!!

கருத்துகள்

selva இவ்வாறு கூறியுள்ளார்…
arumai.america naigaluku serupu adi
selva இவ்வாறு கூறியுள்ளார்…
arumai.america naigaluku serupu adi

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்....

நான் வாய்விட்டு உரக்கப்பாடி மகிழ்ந்தது போல் நீங்களும் கேட்டு, பாடி மகிழ வேண்டாமா? இதோ புரட்சிக் கவிஞர் ஓங்கி ஒலித்த "சங்கே முழங்கு" பாடல் கலங்கரை விளக்கம் திரைப்படத்திலிருந்து.... KalangaraiVilakkam... சங்க நாதம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றூதூது சங்கே! பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்! வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்! எங்கள் வாழ்வும்...... -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owner - Dinam