முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்தத் புத்தாண்டினால் பயனுண்டா? - ஜோதிடப் பதிவு அல்ல

ஆண்டுக் கணக்கு என்பது காலத்தைக் கணக்கிடுவதற்கும், காலத்தைப் பதிவு செய்து கொள்வதற்கும்தான்.
இதில் தெளிவாக இருக்க வேண்டும். எந்த ஆண்டுக் கணக்காக இருந்தாலும், கி.பி, தி.பி, சாகா... இப்படி எதுவாக இருந்தாலும்! உலகெங்கும் பொதுவான கணக்காக கிரிகோரியின் நாள்காட்டியும்,. பின்னர் அதில் வந்த திருத்தங்களும் எற்றுக்கொள்ளப்பட்டு, ஆங்கில ஆண்டு என்று வழங்கப்படுகிறது.
அவரவர் பண்பாட்டின் அடையாளமாக மட்டுமே மற்ற ஆண்டுக் கணக்குகள் பின்பற்றப்படுகின்றன. அப்படித்தான் தமிழ்ப் புத்தாண்டும்! ஆனால் அப்படி கொடாடப்படும் புத்தாண்டில் பயன் இருக்க வேண்டாமா?
60 ஆண்டுகள் சுழற்சி முறையில் வருகிறது என்பது எப்படி பயன்பாடுடையதாக இருக்க முடியும்.
300 வருங்களுக்கு முன் வந்த ஏதோ ஒரு 'சர்வசித்து'வில் நடந்த நிகழ்வை சர்வசித்து ஆண்டு, சித்திரை 1-ல் நடந்தது என்று வரலாற்றில் பதிவு செய்தால், எந்த சர்வசித்து என்று யாராலாவது சொல்ல முடியுமா?(பிறிதொரு ஆண்டுக் கணக்கின் உதவியில்லாமல்) 2007-இல் வந்த சர்வசித்து என்றோ, 1947-ல் வந்த சர்வசித்து என்றொ சொல்லாமல், தற்சார்பாக இயங்கும் வல்லமை சுழற்சி முறை ஆண்டுகளுக்கு உண்டா?
எப்போதுமே தனித்து இயங்கும் ஆற்றல் தமிழனுக்குண்டு. தமிழ் மொழிக்குண்டு. அதனைக் கருத்தில் கொண்டே இந்த வரலாற்றுத் திணிப்பை, திரிப்பை மாற்றி தமிழறிஞர்கள் 1921-ல் ஒழுங்குபடுத்தியவாறு, திருவள்ளூவர் ஆண்டை தமிழர் புத்தாண்டாக ஏற்றுச் செயல்படுத்திவருகிறோம். அதன் படி, திருவள்ளுவர் பிறந்த ஆண்டு கிறிஸ்து பிறப்பு கணக்குப்படி கி.மு.31- என்று முடிவு செய்யப்பட்டது.
அப்படிக் கணக்கிடும்போது, இப்போது "2038 சித்திரை (மேழம்) -1" என்பது தமிழாண்டுக் கணக்கு. ஒவ்வொரு தமிழ்ப் புத்தாண்டும், தமிழர் திருநாளான, உழைப்பாளர், உழவர் திருநாளான தை முதல் நாள் தொடங்குகிறது.
நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை அல்ல உன் புத்தாண்டு!
அறிவியலுக்கு பொருந்தாத,
வரலாற்றுக்கு ஒவ்வாத
வடமொழி ஆண்டுகளைப்
புறக்கணிப்போம்!
தமிழர் புத்தாண்டை
தை 1-இல் ஏற்று
மகிழ்வோம்.

தொடுப்புகள்:
http://princenrsama.blogspot.com/2007/04/blog-post_13.html
http://princenrsama.blogspot.com/2007/04/blog-post_9338.html
ஆங்கில மாதங்கள் பெயர் வந்த கதை:
http://princenrsama.blogspot.com/2007/04/blog-post_14.html

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்....

நான் வாய்விட்டு உரக்கப்பாடி மகிழ்ந்தது போல் நீங்களும் கேட்டு, பாடி மகிழ வேண்டாமா? இதோ புரட்சிக் கவிஞர் ஓங்கி ஒலித்த "சங்கே முழங்கு" பாடல் கலங்கரை விளக்கம் திரைப்படத்திலிருந்து.... KalangaraiVilakkam... சங்க நாதம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றூதூது சங்கே! பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்! வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்! எங்கள் வாழ்வும்...... -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owner - Dinam