முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்தத் புத்தாண்டினால் பயனுண்டா? - ஜோதிடப் பதிவு அல்ல

ஆண்டுக் கணக்கு என்பது காலத்தைக் கணக்கிடுவதற்கும், காலத்தைப் பதிவு செய்து கொள்வதற்கும்தான்.
இதில் தெளிவாக இருக்க வேண்டும். எந்த ஆண்டுக் கணக்காக இருந்தாலும், கி.பி, தி.பி, சாகா... இப்படி எதுவாக இருந்தாலும்! உலகெங்கும் பொதுவான கணக்காக கிரிகோரியின் நாள்காட்டியும்,. பின்னர் அதில் வந்த திருத்தங்களும் எற்றுக்கொள்ளப்பட்டு, ஆங்கில ஆண்டு என்று வழங்கப்படுகிறது.
அவரவர் பண்பாட்டின் அடையாளமாக மட்டுமே மற்ற ஆண்டுக் கணக்குகள் பின்பற்றப்படுகின்றன. அப்படித்தான் தமிழ்ப் புத்தாண்டும்! ஆனால் அப்படி கொடாடப்படும் புத்தாண்டில் பயன் இருக்க வேண்டாமா?
60 ஆண்டுகள் சுழற்சி முறையில் வருகிறது என்பது எப்படி பயன்பாடுடையதாக இருக்க முடியும்.
300 வருங்களுக்கு முன் வந்த ஏதோ ஒரு 'சர்வசித்து'வில் நடந்த நிகழ்வை சர்வசித்து ஆண்டு, சித்திரை 1-ல் நடந்தது என்று வரலாற்றில் பதிவு செய்தால், எந்த சர்வசித்து என்று யாராலாவது சொல்ல முடியுமா?(பிறிதொரு ஆண்டுக் கணக்கின் உதவியில்லாமல்) 2007-இல் வந்த சர்வசித்து என்றோ, 1947-ல் வந்த சர்வசித்து என்றொ சொல்லாமல், தற்சார்பாக இயங்கும் வல்லமை சுழற்சி முறை ஆண்டுகளுக்கு உண்டா?
எப்போதுமே தனித்து இயங்கும் ஆற்றல் தமிழனுக்குண்டு. தமிழ் மொழிக்குண்டு. அதனைக் கருத்தில் கொண்டே இந்த வரலாற்றுத் திணிப்பை, திரிப்பை மாற்றி தமிழறிஞர்கள் 1921-ல் ஒழுங்குபடுத்தியவாறு, திருவள்ளூவர் ஆண்டை தமிழர் புத்தாண்டாக ஏற்றுச் செயல்படுத்திவருகிறோம். அதன் படி, திருவள்ளுவர் பிறந்த ஆண்டு கிறிஸ்து பிறப்பு கணக்குப்படி கி.மு.31- என்று முடிவு செய்யப்பட்டது.
அப்படிக் கணக்கிடும்போது, இப்போது "2038 சித்திரை (மேழம்) -1" என்பது தமிழாண்டுக் கணக்கு. ஒவ்வொரு தமிழ்ப் புத்தாண்டும், தமிழர் திருநாளான, உழைப்பாளர், உழவர் திருநாளான தை முதல் நாள் தொடங்குகிறது.
நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை அல்ல உன் புத்தாண்டு!
அறிவியலுக்கு பொருந்தாத,
வரலாற்றுக்கு ஒவ்வாத
வடமொழி ஆண்டுகளைப்
புறக்கணிப்போம்!
தமிழர் புத்தாண்டை
தை 1-இல் ஏற்று
மகிழ்வோம்.

தொடுப்புகள்:
http://princenrsama.blogspot.com/2007/04/blog-post_13.html
http://princenrsama.blogspot.com/2007/04/blog-post_9338.html
ஆங்கில மாதங்கள் பெயர் வந்த கதை:
http://princenrsama.blogspot.com/2007/04/blog-post_14.html

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owne...

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்...

சரத்குமாருக்கு மட்டுமல்ல... மானமற்ற மடையர்கள் அனைவருக்கும்!

"தமிழ் வளர வேண்டும். தமிழர்கள் வழிபடும் ஆலயங்களில் தமிழில் மந்திரங்கள் ஒலிக்க வேண்டும். தமிழில் அர்ச்சனைகள் நடக்க வேண்டும் என்ற ஆர்வம் தவறில்லை. ஆனாலும், காலகாலமாய் கடைப்பிடிக்கப்பட்டு வந்த மரபுகளையும் மனதில் கொண்டே மாற்றங்களை நிகழ்த்த அமைதி வழியில் முயற்சிக்க வேண்டும். அதற்கு இறை நம்பிக்கை கொண்டோரை, ஆன்மீகப் பெரியோர்களை, அறிஞர் பெருமக்களை கொண்ட ஒரு குழு அமைத்து அதன் வழியில் தீர்க்கமான சுமூக முடிவை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும் என்று ***** கூறியுள்ளார்." (தினமணி 4.3.2008 ) இது தினமணியில் வந்த செய்தி. அதே பேட்டியை சன் டி.வி-யும் ஒளிபரப்பியது. அதில் சொன்னார், "கடவுளுக்கு எந்த மொழியில் அர்ச்சனை செய்வது என்று ஆகமத்தில் இருக்கிறது அதன்படி தான் செய்ய வேண்டும். கடவுள் நம்பிக்கையற்றவர்கள் இப்பிரச்சினையில் உள்நுழைந்து குழப்பக்கூடாது." என்று. இப்பேட்டி யார் கொடுத்தது என்று நினைக்கிறீர்கள்? பா.ஜ.க. 'இலக்கடை' கணேசன் கொடுத்தது என்றுதானே! அதுதான் கிடையாது; இல்லை 'சோ'...ம்ஹூம்... அதுவும் கிடையாது இந்த அரிய பெரிய கருத்தினை தெரிவித்தவர் 2011-ன் தமிழக முதல்வர்களில் ஒர...