முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டா?

-தஞ்சை நாராயணசாமி

பிரபவ முதல் அக்ஷய வரை 60 வருடங்கள் சித்திரை முதல் நாளை ஆண்டு துவக்க நாளாகக் (தமிழ்ப் புத்தாண்டு) கொண்டிருக்கிறார்கள். சூரியன் மேஷ ராசியில் சஞ்சரிக்கத் தொடங்கும் இந்த நாளை விஷு புண்ணிய காலம் என்பர்.
வடதேசத்தில் பைசாகி என்றும் கேரளத்தில் விஷு என்றும் தெலுங்கு தேசத்தில் ஆண்டு தொடக்க நாளை யுகாதி என்றும் கொண்டாடுகிறார்கள். வருஷப் பிறப்பு என்பது சில தெய்வீகக் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டும் அனுஷ்டிக்கப்படுகிறது.
மற்ற பண்டிகைகளைப் போன்றே புத்தாண்டு தினத்திற்கும் தெய்வ வழிபாட்டு நியதிகள் உண்டு. தெலுங்கு தேசத்தவர் வருடப் பிறப்பன்று எண்ணெய்க் குளியல் செய்து புத்தாடை உடுத்தி வடை போளி பாயசத்துடன் சமையல் செய்து பண்டிகை கொண்டாடுவர். கேரளத்தில் முதல் நாள் நடுக் கூடத்தில் அரிசி காற்கறிகள் எல்லாம் சேமித்து வைத்து குத்து விளக்குகளும் ஏற்றி விடிந்து எழுந்ததும் கண்ணை மூடிக் கொண்டே நடுக்கூடத்துக்கு வந்து முதல் முதலாகக் கண்ணாடியில் பார்ப்பார்கள். இதனால் ஆண்டு முழுவதும் யோகம் கூடும் என்பது அய்தீகம். இதை விஷுக்களி காணுதல் என்பர். கேரளாவில் நடைபெறும் இன்னொரு வழிபாடு குருவாயூரப்பனின் தரிசனம். வருடத் தொடக்கத்தில் குருவாயூரப்பன் முகத்திலேயே விழிக்க வேண்டும் எனும் ஆவலோடு ஆயிரக்கணக்கான பக்தர்கள் குருவாயூர்க் கோயிலில் முதல் நாள் இரவில் காத்திருப்பார்கள். காலை 2 மணிக்கு அல்லது 3 மணிக்கு கதவுகள் திறந்ததும் குருவாயூரப்பனை தரிசிக்கும் வழக்கம் இன்றும் உண்டு. தமிழ் நாட்டிலும் புத்தாண்டு தினத்தில் கண்ணாடியில் முகம் பார்க்கும் வழக்கம் பல இடங்களில் உண்டு.
தமிழகத்தில் பரவலாக புத்தாண்டு தினத்தில் வீட்டை மெழுகி கோலம் செம்மண் இட்டு வாயிற்படிக்கு மஞ்சள் குங்குமம் பூசி மாவிலைத் தோரணம் கட்டி பூஜையறையை அலங்கரித்து விளக்கேற்றி வைத்து வழிபடுவதோடு அன்று பூஜையில் புது வருடப் பஞ்சாங்கம் வாங்கி வந்து அதற்கும் குங்குமப் பொட்டு வைத்து மலர்சூடி பூஜையை முடித்துவிட்டு பெரியவர்கள் பஞ்சாங்கப் பலனை வாசிக்க மற்றவர்கள் கவனமுடன் கேட்பது வழக்கம்.
தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று சமையலில் வேப்பம்பூ பச்சடி மாங்காய் பச்சடி வடை பருப்பு சேர்த்துப் படைத்து உண்பர். இன்பமும் துன்மும் கலந்து வருவதே வாழ்க்கை என்பதை உணர்த்தவே சமையலில் மேற்கண்ட பதார்த்தங்கள் சேர்த்துப் படைத்து உண்பது அய்தீகம்.
பஞ்சாங்கம் திதிவாரம் நட்சத்திரம் யோகம் கரணம் என்ற பஞ்ச அங்கங்கள் சேர்ந்தது பஞ்சாங்கம். இந்த அய்ந்து அங்கங்களையும் பார்த்து அறிவதால் அஷ்ட அய்சுவரியங்களும் பெருகும் என்பது சாஸ்திரங்களின் கூற்று.
திதி சந்திரனை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப் படுவது. சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடைப் பட்ட தூரமே திதி தினமும் திதி பார்ப்பதால் சம்பத்துகள் பெருகும்.
வாரம் பார்த்து அறிவதால் ஆயுள் விருத்தி ஏற்படும்.
நட்சத்திரம் நான்கு பாதங்களுடன் திகழும் நட்சத்திர நடப்பு விவரங்களை தினமும் அறிவதால் தீவினைகள் அகலும்
யோகம் சூரியனும் சந்திரனும் சுற்றிக் கொள்ளும்போது ஏற்படுவது யோகங்கள். ஒவ்வொரு யோகத்துக்கும் தனித்தனி குணங்கள் உண்டு. தினம் யோக விசேஷன் காண்பதால் பிணிகள் நீங்கும்.
கரணம் திதியில் பாதி கரணம். திதி பற்றி பஞ்சாங்கம் பார்த்தறிவதால் காரிய சித்தி உண்டாகும்.
மகத்துவம் மிக்க பஞ்ச அங்கங்களையும் அனுதினமும் வாசித்தலை முதன் முதலாகக் தொடங்கும் நோக்கில் புது வருடத்தன்று வழிபாட்டோடு பஞ்சாங்கம் வாசிப்பார்கள். இது போன்றே புத்தாண்டு தினத்தில் ஏழைகளுக்கு நீர்மோர் விசிறி தானம் செய்வதால் சுபமங்கள வாழ்வு பெறலாம். (தினகரன் அருள்)

சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும் நாளே சித்திரை முதல் நாள். சித்திரை மாதத்தை வசந்த ராகம் என்பர்.
சித்திரரை மாதத்தின் முதல் நாள்தான் பிரம்மன் உலகத்தைப் படைத்தான் என்று புராணம் கூறுகிறது.
சித்திரை மாத திருதியை திதி அன்று மகாவிஷ்ணு மீனாக (மச்சம்) அவதாரம் எடுத்தார்.
சித்திரை மாதத்தில் சுக்கில பஞ்சமியில் லட்சுமி சத்திய லோகத்திலிருந்து பூமிக்கு வந்ததாக கூறப்படுவதால் அன்று லட்சுமி பூஜை செய்வது நன்மை தரும்.
சித்திரை சுக்கில பட்ச அஷ்டமியில் அம்பிகை பிறந்தால் என்று தேவி பாகவதம் கூறுகிறது.
சித்திரை பவுர்ணமி அன்று காஞ்சிபுரம் சித்திரகுப்தன் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். பூஜையின் போது இந்திரன் சித்திரகுப்தனை வழிபடுவதாக அய்தீகம்.
சித்திரை முதல் தேதி கோயில்களில் பஞ்சாங்கம் படிப்பார்கள். திதி வாரம் நட்சத்திரம் யோகம் கரணம் என்ற அய்ந்து அங்கங்களைக் கொண்டது பஞ்சாங்கம். திதியை அறிவதால் லட்சுமியின் அருளும் வாரத்தை அறிவதால் நீண்ட ஆயுளும் நட்சத்திரத்தை அறிவதால் வினைகள் தீருவதும் யோகத்தை அறிவதால் நோயற்ற வாழ்வும் கரணத்தை அறிவதால் காரிய சித்தியும் ஏற்படும்.
(குமுதம் பக்தி ஸ்பெஷல்)

(சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு தினமாம். பிரபவ முதல் அக்ஷய வரை 60 வருடங்கள் தமிழ் வருடங்களாம். ஒன்று கூட தமிழில் இல்லை. எல்லாம் வட மொழியிலேயே உள்ளன. இதற்கு ஒரு கதை. நாரதன் பெண் ஆசை கொண்டு கிருஷ்ணனிடம் வந்து நீ நிறையப் பெண்களை வைத்திருக்கிறாயே எனக்கு ஒரு பெண்ணைக் கொடு என்று கேட்டானாம். நான் எந்த வீட்டில் இல்லையோ அங்கு உன் எண்ணத்தை நடத்திக் கொள் என்றானாம். நாரதன் எல்லா கோபிகைகளின் வீடுகளுக்கும் சென்று பார்த்து எல்லா வீட்டிலும் கிருஷ்ணன் இருக்க திரும்பி அவனிடமே வந்து தன் இச்சையைத் தெரிவித்தானாம். கிருஷ்ணனும் நாரதனும் சேர்ந்து வாழ்ந்து 60 பிள்ளைகளைப் பெற்றனராம். அவைதான் பிரபவ முதல் அக்ஷய வரையான வருடங்களாம். ஆணும் ஆணும் சேர்ந்து வாழ்ந்து 60 பிள்ளைகளைப் பெற்றனராம். ஓரினச் சேர்க்கையில் எய்ட்ஸ் தானே வரும். எப்படி பிள்ளைகள் பிறந்தன? நல்ல வேடிக்கை.
வேறு இடங்களில் புத்தாண்டுகள் வேறு வேறு நாட்களில்தான் உள்ளன. சித்திரை முதல் நாள் புத்தாண்டு அல்ல. தமிழர்களுக்கு புத்தாண்டு ஆரம்பம் தை முதல் நாள்தான். பார்ப்பான் அதில் தன் வேலையைக் காட்டி சித்திரை முதல் நாள் என்றும் 60 ஆண்டுகளும்
12 மாதங்களும் வடமொழியாகவே மக்கள் மனதில் திணித்து நடந்து வருகிறது.
கேரளத்தில் கண்ணாடி பார்ப்பதும் குருவாயூர் கோயிலில் முதல் நாளே சென்று காத்திருந்து குருவாயூரப்பனை வணங்குவதும் பழக்கத்தின் அடிப்படையிலேதான். தமிழ்நாட்டில் வீடுகளில் தோரணம் முதலியன கட்டி அலங்கரித்து வழிபடுவதும் பஞ்சாங்கம் தானும் படித்து மற்றவர்களுக்கும் வாசிக்க வேண்டுமாம். பஞ்சாங்கம் அய்ந்து அங்கங்களாம். திதி பார்த்தால் செல்வம் பெருகுமாம். வாரம் ஆயுள் அதிகரிக்கவும் நட்சத்திரம் தீவினைகள் தீர்க்கவும் யோகம் பிணிகள் நீங்கவும் கரணம் காரிய சித்திக்கும் படிக்க வேண்டுமாம். அதற்காகவே தினமும் பஞ்சாங்கம் படிக்கும் நோக்கில் ஆண்டின் முதல் நாளில் படித்து நலம் அடைய வேண்டுமாம். மக்களின் ஆசையைத் தணிக்க இவை உதவும் என்று பொய் சொல்லி மக்களை முட்டாள்களாகவே வைத்துவிட்டனர். மக்களும் சிந்திக்காமலே பார்ப்பான் விரித்த வலையில் வீழ்ந்து மானமும் அறிவும் அற்றவர்களாகவே இருக்கின்றனர். இந்த மூடப்பழக்கங்கள் மாறவேண்டும்.

நன்றி: விடுதலை (13.4.2007)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்....

நான் வாய்விட்டு உரக்கப்பாடி மகிழ்ந்தது போல் நீங்களும் கேட்டு, பாடி மகிழ வேண்டாமா? இதோ புரட்சிக் கவிஞர் ஓங்கி ஒலித்த "சங்கே முழங்கு" பாடல் கலங்கரை விளக்கம் திரைப்படத்திலிருந்து.... KalangaraiVilakkam... சங்க நாதம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றூதூது சங்கே! பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்! வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்! எங்கள் வாழ்வும்...... -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owner - Dinam