முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

'பெரியார்' ஒளிக்காட்சி

'பெரியார்' திரைப்படம் வரலாற்றுக் காவியமாக, செல்லுலாயிட் ஓவியமாக மே மாதம் 25-ஆம் தேதி வெளியாகப் போகிறது. தமிழில் எடுக்கப்பட்ட திரைப்படமாக இருப்பினும், இந்திய மொழிகள் பலவற்றிலும் மொழியாக்கம் செய்யப்பட்டும், அயல்நாட்டு மொழிகள் பலவற்றில் துணைத்தலைப்புகள்(Subtitles) இடப்பட்டும் ஒரே நாளில் உலகெங்கும் வெளியாக இருக்கிறது.

தந்தை பெரியரின் ஒளிக்காட்சிகளை வண்ணத்தில் நீங்கள் இங்கே பார்க்கலாம்.


நீங்கள் இந்தப் படக்காட்சியை பல இடங்களில் பார்த்திருக்கக்கூடும். இணைய உலகில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் வண்ணக் காட்சிதான் இது. இங்கும், ஆர்க்குட்டிலும் தோழர்கள் நிறைய பேர் இதைத் தங்களுக்குப் பிடித்த பக்கங்களாக சேமித்து வைத்துள்ளார்கள். ஆனாலும் இந்த வீடியோ காட்சி எப்படி உருவானது என்பது பலருக்குத் தெரியாது. அதை கொஞ்சம் பின்னோக்கிய பார்வையில்(reverse process) பார்ப்போமா?
இந்த படக்காட்சியை youtube அல்லது கூகிள் தரும் வசதியால் நாம் பார்த்து வருகிறோம். 'உண்மைகள் உறங்காது' என்ற குறிப்பிட்டு தோழர்......... ம், நமது பதிவர் திருவும் தங்கள் தளங்களில் ஏற்றி, உலகெங்கும் கொண்டு சென்றிருக்கிறார்கள். அவர்களுக்கு நம் நன்றிகள் உரித்தாகுக. இப்போது நானும் ஏற்றிவிட்டேன்.
அவர்கள் இந்த படக்காட்சியை பெற்ற இடம்: www.periyar.org
periyar.org என்பது தந்தை பெரியார் பற்றிய ஒரு தெளிவான அறிமுகத்தைத் தருவதற்காக திராவிடர் கழகத்தால் உருவாக்கப்பட்ட இணையதளம். இங்கிலீஷ், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் செய்திகள் அடங்கிய இணையதளம் (bilingual website). சென்று பாருங்கள். புகைப்படத் தொகுப்பு, பெரியாரின் குரல், மேற்கண்ட வீடியோ காட்சி உள்பட இன்னும் ஏராளமான தகவல்கள் கிடைக்கும். பார்க்க சுவையாகவும் இருக்கும்.
(இந்தத் தளம் Flash கோப்போடு தொடங்கும். lt-tm-mullai, amudham ஆகிய இரண்டு எழுத்துருக்கள் அதிலேயே கிடைக்கும். தரவிறக்கம் செய்து கொள்க.)
ஆரம்ப நாட்களில் விடுதலை நாளேடு periyar.org தளத்தில்தான் பதிவேற்றப்பட்டது, 1994 முதல் இணையதளத்தில் வருகிறது விடுதலை. பின்னர் அது தனியாகப் பிரிக்கப்பட்டு viduthalai.com தளத்திற்கு மாற்றப்பட்டது. எனவே periyar.org தளத்தை முழுமையாக பெரியாரின் வாழ்க்கை, பணி, அவரது இயக்கம் பற்றிய நிரந்தரத் தளமாக மாற்றலாம் என்ற யோசனையை
முன்வைத்தபோது அதற்கான பணியை தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் எங்கள் பொறுப்பிலேயே வழங்கினார்கள்.
அந்தப்பணிகள் பற்றி பின்னொரு பதிவில் எழுதுவேன்,
படக்காட்சி போடவேண்டும் என்று யோசித்தபோது...
லிபர்டி கிரியேஷன்சின் முதல் படைப்பான 'புரட்சிக்காரன்' படத்தில் இடம்பெற்றிருந்தது அய்யாவின் வண்ணப் படக்காட்சி. "தொண்டு செய்து பழுத்த பழம்; தூய தாடி மார்பில் விழும்; மண்டை சுரப்பை உலகு தொழும்; மனக்குகையில் சிறுத்தை எழும்; அவர்தாம் பெரியார். அந்த இணையற்ற புரட்சிக்காரனுக்கு எங்கள் காணிக்கை" என்று பின்னணியில் இயக்குனர் வேலு.பிரபாகரனின் குரலோடு அந்தக் காட்சி இருக்கும்! அதை சென்னைக்கு வரும் முன் காரைக்குடியில் என் வீட்டில் இருந்த போது அய்யாவின் குரலோடு இணைத்து அய்யா பேசுவது போலவே edit செய்து வைத்திருந்தேன். அதை எடுத்து periyar.org-ல் பயன்படுத்திக் கொண்டேன்.
"கடவுள் இல்லை; கடவுள் இல்லை...." என்று இதில் வரும் அய்யாவின் குரல் காரைக்குடியில் பதிவு செய்யப்பட்டது.
திராவிடர் கழக வெளியீடாக வந்து உலகெங்கும் ஒலிக்கும் இந்தக்குரலைப் பதிவு செய்தவர் தற்போதைய காரைக்குடி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் சாமி.சமதர்மம் அவர்கள். (ஒன்றிணைந்த ராமநாதபுரம்(முகவை) மாவட்டத்தின் தி.க. செயலாளராக நீண்ட காலம் பணியாற்றிய சுயமரியாதை சுடரொளி காரைக்குடி என்.ஆர்.சாமி அவர்களின் மூத்த மகனும் என் தந்தையாரும் அவரே!)
அறுபதுகளின் இறுதியில் அய்யா எங்கள் மாவட்டத்தில் சுற்றுப்பயணத்தில் இருக்கும் போதெல்லாம், அவரது பேச்சை (பழைய படங்களில் போலிஸ் தொலைபேசிப் பேச்சுகளைப் பதிவு செய்வார்களே, அந்த மாதிரி) ஒரு spool type recorder-ல் பதிவு செய்திருக்கிறார் என் தந்தை. [அந்த அனுபவம் பற்றி விரைவில் என் அய்யா(சாமி சமதர்மம்)விடம் கேட்டு எழுதலாம் என்றிருக்கிறேன்.] அப்படிப் பதிவு செய்யப்பட்ட பேச்சில் ஒன்றுதான் 'காரைக்குடியில் பெரியார்' என்ற ஒலிநாடா!
(விரைவில் இன்னும் பல காரைக்குடி உரைகள் வெளிவர இருக்கின்றன)
அந்தப் பேச்சில் இருந்த அய்யாவின் குரலை இந்த வீடியோ காட்சியோடு இணைத்துக் கொண்டேன்.
சரி, இந்த வீடியோ காட்சி எப்படி வந்தது? தந்தை பெரியாரின் ஒளிக்காட்சிகள் தமிழக அரசின் செய்தி, ஒளிபரப்புத் துறையினரின் கோப்புகளில் சில கிடைக்கின்றன. பல்வேறு நிகழ்ச்சிகளில் எடுக்கப்பட்டவை அவை. 'செம்மீன்' மலையாளப் படத்தின் இயக்குனர் ராமு காரியத் அவர்கள் தந்தை பெரியாரின் ஒரு நாள் வாழ்க்கையை, அவர் உண்பதை, உறங்குவதை, நாயோடு விளையாடுவதை படமெடுத்திருக்கிறார். அது போக, ஜான் ஆபிரகாம் சில காட்சிகளை எடுத்ததாக நிழல் ஆசிரியர் திருநாவுக்கரசு அவர்கள் ஒருமுறை சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அது ராமு காரியத் எடுத்தது தானா, அல்லது ஜான் வேறு எடுத்தாரா என்பது சரியாகத் தெரியவில்லை. மேலும், அய்யாவின் மருத்துவர் ஒருவர், படம் எடுத்ததாக ஒரு செய்தி உண்டு. பூண்டி குமாரசாமி என்ற பொறியாளர் ஒருவரும் அய்யாவை படம் எடுத்திருப்பதாக ஒரு தகவல் கிடைத்தது, பிலிம் சுருள்களில் எடுக்கப்பட்டதால் இப்போது போல் 'ஒரு cd copy பண்ணிக் கொடுங்க!' என்று கேட்க முடியவில்லை போலும்.
ராமு காரியத் எடுத்தது கருப்பு வெள்ளை! தமிழக அரசு எடுத்தது நிகழ்ச்சிகள் மற்றும் இறுதி ஊர்வலம்! எனவே இந்தப் படத்தை எடுத்தது யாரென்பது குறித்து சரியான தகவல்கள் எனக்குத் தெரியவில்லை. வாய்ப்புக் கிடைக்கும்போது தெரிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் என்றிருக்கிறேன். அப்படித் தெரிந்தபின் அது பற்றிய தகவல்களையும் ஒரு பதிவாகப் போட்டுவிடுகிறேன். அதுவரை இந்தப் படக்காட்சியைப் பார்த்து, பெரியாரை நேரில் பார்க்காத குறையைத் தீர்த்துக் கொள்ளலாம். மேலும் இந்தப் படக்காட்சி உலகம் முழுமையும் பரவிக்கிடப்பதில் எனக்கு ஒரு முக்கிய பங்குண்டு என்பதில் பெருமைப்பட்டுக் கொள்ளலாம் அல்லவா! நிச்சயம் இந்தக் காட்சிகளைப் பார்க்கும் போதெல்லாம் "டே பிரின்சு, பரவாயில்லடா! நீயும் உருப்படியா ஏதோ செய்யிற" என்று ஊக்கம் பெற்றுக்கொள்வேன்.

கருத்துகள்

Thamizhan இவ்வாறு கூறியுள்ளார்…
மிக்க நன்றி.பெரியாரை நேரிலே பார்க்காத பல்ர் நேரிலே பார்த்துக் கேட்க வைத்திருக்கிறீர்கள்.பாராட்டுக்கள்.
மேடையிலே சிங்கம் நேரிலே தங்கம் என்பதையும் படம் வெளிவந்ததும் தெரியும்.
லக்கிலுக் இவ்வாறு கூறியுள்ளார்…
தகவல்களுக்கு நன்றி பிரின்ஸ்!

பெரியார் திரைப்படத்தை காண மிக்க ஆவலாக காத்திருக்கிறோம்.
சிவபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
மிக்க நன்றி
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
மிக்க நன்றி நண்பரே...மேற்கொண்டும் பெரியாரைப்பற்றி நீங்கள் தரப்போகும் செய்திகளை மிகுந்த ஆர்வமாக எதிர்பார்க்கிறேன்.
நா.பூ.பெரியார்முத்து இவ்வாறு கூறியுள்ளார்…
NANRI PRINCE

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்....

நான் வாய்விட்டு உரக்கப்பாடி மகிழ்ந்தது போல் நீங்களும் கேட்டு, பாடி மகிழ வேண்டாமா? இதோ புரட்சிக் கவிஞர் ஓங்கி ஒலித்த "சங்கே முழங்கு" பாடல் கலங்கரை விளக்கம் திரைப்படத்திலிருந்து.... KalangaraiVilakkam... சங்க நாதம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றூதூது சங்கே! பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்! வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்! எங்கள் வாழ்வும்...... -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owner - Dinam