முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அரியணை ஏறும் அய்யாவின் வரலாறு!

தந்தை பெரியாரின் வரலாறு- ஒரு நூற்றாண்டு கால தமிழ்நாட்டு அரசியலின் வரலாறு என்றால் அது சரியான மதிப்பீடே! மக்களோடு கலந்து, மக்களுக்காகவே வாழ்ந்த அந்த மகத்தான தலைவரின் முழுமையான வாழ்க்கை வரலாற்றை எப்படி ஒரு படத்துக்குள் அடக்க முடியாதோ, அதே போல ஒரே ஒரு நூலுக்குள்ளும் அடக்க முடியாது! தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு என்பது பல்வேறு கால கட்டங்களைக் கொண்டது!

சிறுவனாக, இளைஞராக, வணிகராக, காங்கிரஸ் பிரமுகராக, வைக்கம் வீரராக, சுயமரியாதைச் சூரியனாக, இந்தியாவுக்கு பொதுவுடைமையை அறிமுகம் செய்தவராக, இந்தி எதிர்ப்புப் போராட்ட வீரராக என்று தந்தை பெரியாரின்(1939 வரை) பல்வேறு பரிணாமங்களை 'தமிழர் தலைவர்' நூலில் 'சாமி.சிதம்பரனார்' வடித்துக் காட்டினார். தந்தை பெரியாராலேயே சரிபார்க்கப்பட்டு வெளியிடப்பட்ட பெருமை வாய்ந்தது அந்நூல்! (அதன் பிந்தைய நிகழ்ச்சிகள் வரலாற்றுக் குறிப்புகளாக 'தமிழர் தலைவர்' நூலின் பிற்சேர்க்கையாகவும், Biographical Sketch என்று குறுநூலாக தமிழ் மற்றும் இங்கிலீஷ்-ல் வெளியிடப்பட்டிருக்கிறது.)

ஆனால் அதனினும் எழுச்சிக் காலமான 1940 தொடங்கி அய்யாவின் இறுதிக் காலம் வரையிலான 34 ஆண்டுக்கால வரலாறு முழுமையாகப் பதிவு செய்யப்படாமலேயே இருந்துவந்தது. அய்யாவின் நூற்றாண்டுக் கொண்டாட்டங்களின்போது கவிஞர் கருணானந்தம் அவர்கள் "தந்தை பெரியார்- வாழ்க்கை வரலாறு" என்ற நூலை எழுதி வெளியிட்டார்.

அதன் பின் அய்யாவோடு பழகியவர்கள்... பார்த்தவர்கள்... என நிறைய பேர் தங்களுக்கும் அய்யாவுக்குமான தொடர்புகளைப் பற்றி எழுதியும், பேசியும் இருக்கிறார்கள். இப்படி ஏகப்பட்ட அய்யாவின் வாழ்க்கை நிகழ்ச்சிகள் பதிவு செய்யப்பட்டும், எவையும் முழுமையானதாக இல்லை.

அதையெல்லாம்விட, வரலாற்று நூலுக்குத் தேவையான அதிகாரப்பூர்வமான தகவல்களும், அவைக்கு வராத சில நெருக்கமான தகவல்களும், அதுவரை வெளிவராத புதிய செய்திகளுமாக அமையக்கூடிய நூல் ஒன்று இத்தனைக் காலம் வராதது பெரும் இழப்பே! இதோ, அந்த இழப்பையும் ஈடுகட்ட வருகிறது... 'தமிழர் தலைவர்' நூலின் தொடர்ச்சியாக அய்யா பெரியாரின் 1940 முதல் 1949 -ஆம் ஆண்டுகளுக்கிடையிலான பத்து ஆண்டுகளின் வாழ்க்கை வரலாற்றை விளக்கமாக எடுத்துரைக்கும் "உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு" (2-ஆம் பாகம்).

இன்றைய தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதி, 2007 ஜூன் 21- அன்று திருவல்லிக்கேணியில் நடைபெறும் விழாவில் தமிழக முதல்வர் கலைஞரின் கரங்களால் வெளியிடப்பட இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக வாழ்க்கை வரலாற்றின் அடுத்தடுத்த பாகங்கள் வெளிவர இருக்கின்றன. பெரியாரின் வாழ்க்கையை இன்றைய இளைஞர்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கும் 'பெரியார்' படத்தின் பெருவெற்றியைத் தொடர்ந்து இப்பணி ஒரு வரலாற்றுப் பணியாகும். ஆர்வலர்களும், தமிழினப் பெருமக்களும் படித்துப் பரப்பவேண்டியது நம் கடமையாகும்!

கருத்துகள்

அமலசிங் இவ்வாறு கூறியுள்ளார்…
Ayya pukazh onguka
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி கேள்விக்குறி அவர்களே!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்....

நான் வாய்விட்டு உரக்கப்பாடி மகிழ்ந்தது போல் நீங்களும் கேட்டு, பாடி மகிழ வேண்டாமா? இதோ புரட்சிக் கவிஞர் ஓங்கி ஒலித்த "சங்கே முழங்கு" பாடல் கலங்கரை விளக்கம் திரைப்படத்திலிருந்து.... KalangaraiVilakkam... சங்க நாதம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றூதூது சங்கே! பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்! வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்! எங்கள் வாழ்வும்...... -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owner - Dinam