முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

'பெண் ஏன் அடிமையானாள்?' - தந்தை பெரியார்

தந்தை பெரியாரின் மிகவும் இன்றியமையாத படைப்புகளில் பெண்ணுரிமைக்கான விளக்கமாக அமையக்கூடிய சிறப்புடையது "பெண் ஏன் அடிமையானாள்?" என்னும் நூலாகும். அச்சில் பல பதிப்புகள் வெளிவந்து பல லட்சம் மக்களை சென்றடைந்திருக்கும் இந்த பெண்ணுரிமை ஆவணம் மின்னூலாக வெளிவந்தால் நன்று என்று பல தரப்பு நண்பர்களும் தோழியர்களும் வேண்டுகோள் விடுத்திருந்தனர். நூலின் அச்சுக்கோர்ப்பு மின் வடிவம் கிடைக்காததால் அதனை மின்னூலாக்கும் பணி தடைப்பட்டுவந்தது.
தந்தை பெரியாரின் எழுத்துக்களை மின்னூலாக்கி இணையத்தில் வெளியிடுவதற்கான ஒப்புதல் தமிழர் தலைவர் அய்யா கி.வீரமணி அவர்களால் வழங்கப்பட்டதோடு, பெரும் ஊக்கமும் அளித்து அந்தப் பணி நடைபெற பெரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். பெரியார் இணையங்கள் சார்பில் அப்பணி நடைபெற்று வருகிறது. அதன் முதல் கட்டமாக 'விடுதலை' நாளிதழின் 72-ஆம் ஆண்டை முன்னிட்டு கடந்த 1-ஆம் தேதி periyar.org தளத்தில் 'பெண் ஏன் அடிமையானாள்?' என்ற இந்நூல் மின்னூலாக தரவேற்றப்பட்டுள்ளது.
இதன் உடனடித் தேவை கருதி முழு நூலையும் (80 பக்கங்கள்) ஸ்கேன் செய்து தந்த திரு.பிரபாகரன் நம் நன்றிக்குரியவர்.

பெரியார் இணையதளத்தில் தற்காலிகமாக ஏற்பட்டிருக்கும் தொழில்நுட்பப் பிரச்சனையால், அந்தப் பக்கம் தவிர அவர்களின் முழு அனுமதியோடு, என்னுடைய தளத்திலும் அதனை தரவேற்றியிருக்கிறேன். தற்காலிகச் சுட்டியாக அதனைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். விரைவில் தந்தை பெரியாரின் எழுத்துகள் மின்னூலாக உலகை வலம் வர இருக்கின்றன என்ற செய்தியையும் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்.

நண்பர்கள், பெண்ணிய சிந்தனையாளர்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு அனைவருக்கும் இந்நூல் சென்று சேருமாறு செய்ய வேண்டும். மின்னஞ்சல் மூலம் இவ்விணைப்புகளை அனுப்பிப் பயன்படுத்தவும்.

உங்கள் ஆலோசனைகள், தேவைகளை பெரியார்.அமை தளத்திற்குத் தெரிவியுங்கள்.


பெரியார்.அமை தளத்தில்...
என் கூகிள் பக்கத்தில் இங்கே...

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
வாழ்த்துக்கள் தோழரே.

அன்புடன்,
விடாது கருப்பு.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owne...

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்...

திருக்குறளை மலத்தோடு ஒப்பிட்டாரா பெரியார்? உண்மை என்ன?

இதைத் தான் அயோக்கியத்தனம் என்கிறோம். எதை? குறளை பெரியார் மலத்துடன் ஒப்பிட்டார்... இதோ ஆதாரம் என்றார்கள்.  எது? இது தான் அது!  "வள்ளுவர் குறளையும் அந்தப்படியே அப்போது பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல என்று கண்டித்து வந்தேன். எல்லாவற்றையும் குறை சொல்லும்போது பலர் என்னிடம், எல்லாம் போய்விட்டால் நமக்கு எதுதான் நூல் என்று கேட்பார்கள். நான் இங்கே இருக்கிற மலத்தினால் கெட்ட நாற்றம் வீசுகிறது; அதை எடுத்து விடு என்று கூறினால் அந்த இடத்தில் என்ன வைப்பது? என்று கேட்பதா என்று பதில் கூறுவேன்."  பார்த்தியா... பார்த்தியா... இதைத்தான் சொன்னோம்னு குதிச்ச கூமுட்டைகள், கூமுட்டைகள் சொல்லுக்குக் குட்டிக்கரணம் போட்ட கூறுகெட்டதுகள் எல்லோரையும் நாம் கேட்டுக் கொள்வது, அந்தக் கட்டுரையை முழுமையாகப் படியுங்கள் என்பது தான். அவ்வளவு வேண்டாம்... அதற்கு முன்னேபின்னே என்ன சொல்லியிருக்கிறார்.. அதைப் படித்தாலே புரியும் அவரது நேர்மைத் திறம்கொண்ட பார்வை!  பெரியாருக்குப் பொழிப்புரை, தெளிவுரையெல்லாம் தேவையில்லை. இதோ பெரியார் பேசுகிறார்... கேளுங்கள்! "மக்களுக்கும் நான் குறள் பற்றி பேசுவது மிகுந்த ஆச்சரியமாய் இருக்க...