முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முத்துப்பேட்டையில் தந்தை பெரியார் சிலை உடைப்பு - கி.வீரமணி அறிக்கை

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் தந்தை பெரியார் சிலையினை காலிகள் சிலர் சேதப்படுத்தினர் என்ற செய்தி தமிழர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தந்தை பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டது என்ற செய்தியை அறிந்த ஆத்திரத்தின் மேலீட்டால் இரண்டொரு தோழர்கள் தஞ்சையில் பார்ப்பனர்களின் பூணூலை அறுத்தனர் என்கிற தகவலும் வெளியாகியுள்ளது.பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டது என்பது ஆத்திரத்தை ஊட்டக் கூடியதுதான் என்றபோதிலும் அதற்காக பூணூல் அறுப்பு போன்ற செயல்களில் இறங்க வேண்டாம் என்று தோழர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.தந்தை பெரியார் சிலையைச் சேதப்படுத்திய குற்றவாளிகள் இருவர் கைது செய்யப்பட்டு உரிய நடவடிக்கையினை தமிழ்நாடு அரசின் காவல்துறை செய்து வருகிறது. குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய நடவடிக்கைகளை உறுதியாக எடுத்து தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று காவல் துறையை வலியுறுத்துகின்றோம்.வேறு சில இடங்களில் தந்தை பெரியார் சிலையை அவமதித்த காரணத்தால் ஏற்கெனவே தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழோ குண்டா சட்டத்தின் கீழோ சிறையில் இருப்பவர்களின் பிரச்சினையில் காவல்துறை கவனமாக இருந்து அது தொடர்பான வழக்கினைச் செம்மையாக நடத்தி குற்றவாளிகள் தப்பிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துவது நமது கடமையாகும்.

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம் - சென்னை 22.4.2007

நன்றி: விடுதலை (www.viduthalai.com)

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Police have arrested a muslim and another person involved in this. They dont belong to any hindutva group. Prince can you please write something on the following.

http://www.hindu.com/2007/04/16/stories/2007041608530100.htm

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்....

நான் வாய்விட்டு உரக்கப்பாடி மகிழ்ந்தது போல் நீங்களும் கேட்டு, பாடி மகிழ வேண்டாமா? இதோ புரட்சிக் கவிஞர் ஓங்கி ஒலித்த "சங்கே முழங்கு" பாடல் கலங்கரை விளக்கம் திரைப்படத்திலிருந்து.... KalangaraiVilakkam... சங்க நாதம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றூதூது சங்கே! பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்! வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்! எங்கள் வாழ்வும்...... -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owner - Dinam