




செங்கோ
முன்னும் பின்னுமாக இரண்டு தலைகள் முகம் முழுக்க மண்டிக்கிடக்கும் அடர்ந்த தாடிகள். இவை விசித்திர உருவமாகத் தென்படுகிறது அல்லவா? இது ஒரு கடவுளின் உருவமாம். கிரேக்கக் கடவுள். இந்தக் கடவுள் இன்றைக்கு உயிருடன் இல்லை. இது மாஜி கடவுளாகிவிட்டது. இதன் பெயர் ஜனுஸ்.
ஆனால் இந்தக் கடவுளின் பெயரால் அமைந்த ஜனவரி மாதம் நம்மிடையே இருந்து வருகிறது. ஆனால் நாம் யாரும் மாதத்தைச் சொல்லும்போது கடவுளைப் பற்றி நினைப்பது கிடையாது. மற்ற நேரங்களில்கூடக் கடவுளை எதற்கு நினைக்க வேண்டும்?
மனிதர்கள் தவறு செய்கிறார்கள்; குற்றம் புரிகிறார்கள். இதை மதம் பாபம் என்கிறது. பாபம் செய்தவன் பரிகாரம் செய்ய வேண்டும் என்கிறது. பரிகாரம் செய்வதால் - செய்த குற்றம் இல்லை என்றாகிவிடுமா? ஆகிவிடாது. இருந்தாலும் பரிகாரம் செய்வது என்ற பெயரில் பலி கொடுத்தார்கள்.
கோழி ஆடு ஒட்டகம் என்று பலி கொடுத்து வந்தனர் பழங்காலத்தில்! காட்டுமிராண்டிகள் இன்றும்கூட பலி இடுகிறார்கள். இந்தியாவில் இந்து மதத்தினர் இன்றளவும் பலி இடுகிறார்கள். அதனால் தான் அவர்களைக் காட்டுமிராண்டிகள் என்றார் தந்தை பெரியார்.
இந்தப் பலி பீடங்கள் பெப்ருவாலியா என அழைக்கப்பட்டன. அந்தப் பெயர்தான் இரண்டாம் மாதமான பெப்ருவரி.
ரோம் நகரை உருவாக்கியது ரோமுலுஸ் என்று ஒரு கதை. இவனின் தந்தை மார்ஸ் எனும் கிரேக்க சண்டைக் கடவுள். இந்தக் கடவுளின் பெயர்தான் மூன்றாம் மாதம் மார்ச்.
வசந்தகாலத்தில் செடிகளில் மலர்கள் பூத்துக் குலுங்கும் லத்தீன் மொழியில் தொடங்குதல் எனும் பொருள் தரக்கூடிய பெரிர் எனும் சொல்லின் அடிப்படையில் தான் வசந்தகாலப் பூ பூக்கத் தொடங்கும் மாதமான ஏப்ரல் என்ற பெயரை வைத்தனர்.
வளமைக்குக் கடவுள் மேயா அல்லது மேயஸ்டா என்றார்கள். அய்ந்தாம் மாதம் வளம் பொங்கி இருக்க வேண்டும் என மேயா பெயரில் மே என அழைத்தார்கள்.
கிரேக்கத்தின் ஜூபிடர் கடவுளின் தங்கையும் மனைவியுமான ஜூனோ எனும் பெண் கடவுள். சகோதரியையே மணந்து கொள்ளும் பழக்கம் அப்போது இருந்தது. கிளியோபாட்ரா அப்படித்தான் மணந்தாள் என்கிறது வரலாறு. ராமனின் தங்கை சீதா என்றும் அவளையே ராமன் மணந்து கொண்டான் என்றும் சமண ராமாயணம் கூறுகிறது. ஜூனோவின் பெயரால்தான் ஆறாம் மாதம் ஜூன் என்று அழைக்கப்படுகிறது.
ஜூலியஸ் சீசரின் பெயரால் ஜூலை என்றும் சீசரின் தங்கையின் பேரன் அகஸ்டஸ் என்பாரின் பெயரால் எட்டாம் மாதமான ஆகஸ்ட் மாதமும் அழைக்கப்படுவது தெரிந்ததே. இந்த இரண்டு பேரும் கிரேக்கப் பேரரசின் புகழ் வாய்ந்த மன்னர்கள் ஆவார்கள்.
லத்தீன் மொழியில் செப்டம் என்றால் ஏழு அக்டோ என்றால் எட்டு. நவம் என்றால் ஒன்பது. டிசம் என்றால் பத்து. இவற்றின் அடிப்படையில் செப்டம்பர் அக்டோபர் நவம்பர் டிசம்பர் என்று பெயர்கள் வைக்கப்பட்டன.
ஒன்பது பத்து பதினொன்று பன்னிரண்டு ஆகிய மாதங்களுக்கு ஏழு எட்டு ஒன்பது பத்து எனப் பொருள் தரும் சொற்கள் எப்படிப் பொருத்தம்? சரியான கேள்விதான்.
ஆதியில் நிலாக் கணக்குப்படி ஆண்டுக்கு முந்நூறு நாள்கள் பத்து மாதங்கள். சூரியக் கணக்குப்படி 365 நாள்களாக ஆக்கப்பட்டு 12 மாதங்களாகப் பிரித்தபோது ஏழு எட்டு மாதங்களுக்குத் தம் அரசர்களின் பெயர்களை வைத்துப் பெருமை கொண்டாடிவிட்டனர் கிரேக்க மக்கள். மீதி மாதங்களின் பெயர்களை அப்படியே வைத்துக் கொண்டுவிட்டனர்.
இன்றைய காலண்டரை வடிவமைத்தவர் கத்தோலிக்கக் கிறித்தவ மதத்தலைவர்-போப் கிரிகோரி என்பவர்.
நன்றி: பெரியார் பிஞ்சு (ஏப்ரல் 2007)
கருத்துகள்
எல்லாரும் தெரிஞ்சுக்க வேண்டியத ஆர்ப்பாட்டம் இல்லாம சொல்லி இருக்கீங்க.
பகிர்ந்தமைக்கு நன்றி.
இளங்குமரன்.
http://www.orkut.com/Profile.aspx?uid=646496240620658019
http://www.viduthalai.com/periyarpinju/200704/04.htm
எழுத்துரு- அதிலேயே இருக்கும்!
// இருந்தாலும் பரிகாரம் செய்வது என்ற பெயரில் பலி கொடுத்தார்கள்.
கோழி ஆடு ஒட்டகம் என்று பலி கொடுத்து வந்தனர் பழங்காலத்தில்! காட்டுமிராண்டிகள் இன்றும்கூட பலி இடுகிறார்கள். இந்தியாவில் இந்து மதத்தினர் இன்றளவும் பலி இடுகிறார்கள். அதனால் தான் அவர்களைக் காட்டுமிராண்டிகள் என்றார் தந்தை பெரியார். //
இது ஏற்றுக்கொள்ளும்படி தோணவில்லை. இந்துக்களில் திராவிடர்களே இந்தப் பலியிடுதலைச் செய்வது. இப்பொழுது பிராமணர்கள் பலியிடுவதில்லை. அதுவுமில்லாமல் ஜெயலலிதா பலியிடுதலைத் தடை செய்ய சட்டம் போட்டார். அப்படியானால் அவர் நவநாகரீகவாதியா! மைக்கேல் காபிரியேல் கதை தெரியுந்தானே. அங்கே கொழுத்த ஆட்டுக்குட்டியைப் பலியிட்டவன் காட்டுமிராண்டியா! என்னவோ போங்கள்.
please explain this in detail .