முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மே நாளில் (மே-1) வருகிறார் `பெரியார்!- தினமலருக்கு நன்றி!

மேதினியெங்கும் மே நாளில் (அறிவித்த தேதிக்கு முன்பே)வருகிறார் `பெரியார்!
எங்கள் நிறுவனத்தின் சார்பில் தயாராகி வெளிவரவிருக்கும் ``பெரியார் திரைப்படம் மே 25 ஆம் தேதி வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது; ஆனால் எங்கெங்கிருந்தும் பொதுமக்களில் பலரும் ``பெரியார் பற்றாளர்கள் பலரும் எப்போது வரும் எப்போது வரும் என்று இடைவிடாது தணியா ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டே இருப்பதனால் அவர்களது ஏகோபித்த ஆசையைப் பூர்த்தி செய்யும் வகையில் உலகத் தொழிலாளர்களின் கொண்டாட்ட நாளான மே முதல் நாள் (1.5.2007) செவ்வாய் அன்று சென்னை தலைநகர் மற்றும் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள முக்கிய நகரங்கள் பேரூர்களில் ``பெரியார் திரைப்படம் வெளிவரவிருக்கிறது என்பதை ``லிபர்ட்டி கிரியேசன்ஸ் சார்பில் மகிழ்ச்சியுடன் அறிவிக்க விரும்புகிறோம்.மே நாளில் ``பெரியார் படம் வெளியாவதற்கு முழு ஒத்துழைப்பு தந்துள்ள இப்பட விநியோகஸ்தர்கள் அனைவருக்கும் நமது இதயங்கனிந்த நன்றி!
குடும்பம் குடும்பமாக மே நாளை குதூகலமாக கொண்டாடுவோம்.திரளுவீர்! திரளுவீர்!! திரளுவீர்!!!


கோ. சாமிதுரை,


இயக்குநர்,


லிபர்ட்டி கிரியேசன்ஸ்




நன்றி: விடுதலை (16.04.07)



பின்குறிப்பு:

"படம் விற்கவில்லை! விநியோகஸ்தர்கள் வாங்கவில்லை" என்றெல்லாம் அற்ப சந்தோசம் பெற்றுத் தன் அரிப்பைத் தீர்த்துக் கொண்டிருந்த கருமாதிப் பத்திரிக்கை ' தினமலம்' போன்ற பலரின் விளம்பர ஆதரவோடு வெற்றிகரமாக மே-யில் வெளிவருகிறார். இவ்வளவு நாள் எங்கள் விளம்பரச் செலவைக் குறைத்த தினமலம், துக்ளக் மற்றும் ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி, மாமா ராமகோபாலன் போன்றோர் இனியும் தங்கள் பணியைத் தொடர்ந்து செய்து, படத்தின் வெள்ளிவிழா விளம்பரப் பணியையும் செய்து தரவேண்டும் என்று பேரன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

கருத்துகள்

சிவபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
Let the film reaches the masses! Best Wishes!

It is time to celebrate!

Hope the "Bharathy" director will give one more hit!
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
vandhu?
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
'வந்து....' என்ன பண்ணுதுன்னு பார்ப்போம் அனானி!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owne...

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்...

சரத்குமாருக்கு மட்டுமல்ல... மானமற்ற மடையர்கள் அனைவருக்கும்!

"தமிழ் வளர வேண்டும். தமிழர்கள் வழிபடும் ஆலயங்களில் தமிழில் மந்திரங்கள் ஒலிக்க வேண்டும். தமிழில் அர்ச்சனைகள் நடக்க வேண்டும் என்ற ஆர்வம் தவறில்லை. ஆனாலும், காலகாலமாய் கடைப்பிடிக்கப்பட்டு வந்த மரபுகளையும் மனதில் கொண்டே மாற்றங்களை நிகழ்த்த அமைதி வழியில் முயற்சிக்க வேண்டும். அதற்கு இறை நம்பிக்கை கொண்டோரை, ஆன்மீகப் பெரியோர்களை, அறிஞர் பெருமக்களை கொண்ட ஒரு குழு அமைத்து அதன் வழியில் தீர்க்கமான சுமூக முடிவை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும் என்று ***** கூறியுள்ளார்." (தினமணி 4.3.2008 ) இது தினமணியில் வந்த செய்தி. அதே பேட்டியை சன் டி.வி-யும் ஒளிபரப்பியது. அதில் சொன்னார், "கடவுளுக்கு எந்த மொழியில் அர்ச்சனை செய்வது என்று ஆகமத்தில் இருக்கிறது அதன்படி தான் செய்ய வேண்டும். கடவுள் நம்பிக்கையற்றவர்கள் இப்பிரச்சினையில் உள்நுழைந்து குழப்பக்கூடாது." என்று. இப்பேட்டி யார் கொடுத்தது என்று நினைக்கிறீர்கள்? பா.ஜ.க. 'இலக்கடை' கணேசன் கொடுத்தது என்றுதானே! அதுதான் கிடையாது; இல்லை 'சோ'...ம்ஹூம்... அதுவும் கிடையாது இந்த அரிய பெரிய கருத்தினை தெரிவித்தவர் 2011-ன் தமிழக முதல்வர்களில் ஒர...