முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வெறித்துப் பார்த்தார்...விரட்டி வந்தார்...

நமது ஆடைகளில் இருக்கும் வாக்கியங்கள் என்ன பொருள் கொண்டிருக்கின்றன என்று என்றைக்காவது படித்திருக்கிறோமா? ஆபாசத்தின் அடையாளங்களாக, பெண்கேலியின் வடிவங்களாக படங்களும் எழுத்துகளும் அச்சிடப்பட்டிருக்கின்றன். இளைஞர்களும், இளைஞிகளும் 'அழைக்கும்' தொனியில் அமைந்த வாசகங்களையும் கூட கூச்சமின்றி அணிந்திருக்கிறார்கள். இல்லாவிட்டால் எதாவதொரு நிறுவனத்தின் விளம்பரத்தை கட்டணமின்றி உடலில் சுமக்கிறோம். அதிலும் விளையாட்டு வீரர்கள் அணிதிருக்கும் நிறுவனங்களின் விளம்பரம் என்றால் அதற்கு தனி மவுசு.. (அட எலிக்குட்டி இல்லப்பா..) இல்லாவிட்டால் நடிகர் நடிகைகளின் விளம்பரம் தாங்கிய பனியன்கள் கிடைக்கின்றன. இங்கிலீஷில் என்ன எழுதியிருந்தாலும் வாங்கி அணிந்து கொள்ளவும் நாம் தயார்.

அந்த வகையில் தமிழ் எழுத்துகள் அடங்கிய சேலையை வடிவமைத்து விளம்பரப்படுத்திய சேரன் பாராட்டுகுரியவர். புரட்சியாளர்களை நெஞ்சில் சுமந்து அதை அதிக அளவில் விளம்பரப்படுத்தியவர் அண்ணன் சீமான் தான்! சேகுவேராவை தமிழகமெங்கும் திரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது சீமானே! அது அவரது அடையாளமாகக் கூட ஆனது.


தந்தை பெரியாரின் உருவம் தாங்கிய பனியன்கள் அவ்வப்போது வெளிவந்தாலும் இப்போது அதிக அளவில் அணியப்படுகிறது. இந்தத் தலைவர்களுக்கு விளம்பரம் தேவையில்லையாயினும் எமக்கு அது அடையாளமாகிறது. இன்னும் பலரிடம் இந்த தலைவர்களை அறிமுகப்படுத்த, நினைவூட்ட இவை பயன்படுகின்றன. 'மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு' என்ற வாசகம் பொறித்த அய்யா பனியனும், 'வெற்றி நமதே' சே பனியனும் நான் அதிகம் அணியக்கூடியவை.

கல்லூரி செல்லும்போதும், பொது இடங்களிலும் அனைவரின் கவனமும் ஒருமுறை பெரியாரை நோக்கித் திரும்பும், அல்லது சேகுவேராவை விசாரிக்குத் தூண்டும்.
கடந்த வாரம் வடபழனி வசந்தபவனுக்குள் நுழைந்தேன். உடன் உள்நுழைந்த பையன் என் பனியனையே வெறித்துப்பார்த்தபடி வந்தான். அதில் உள்ள வாசகத்தை படிக்க முயன்றான். அதற்காக கொஞ்சம் இழுத்துப் பிடித்துக் காண்பித்தேன். படித்துவிட்டு நன்றி சொல்லி விடைபெற்றான்.
உணவை முடித்துவிட்டு வெளியேறிக்கொண்டிருந்தேன் (பணம் கொடுத்துவிட்டுத்தான்). பின்னாலேயே ஒருவர் விரட்டி வந்துகொண்டிருந்தார். வாசலை அடையும்போது கவனித்துத் திரும்பினேன்.
"சார், கேட்டா தப்ப எடுத்துக்க மாட்டீங்களே?"
என்ன கேட்கப்போகிறார் என்று தெரியாததால் "சொல்லுங்க" என்றேன்.
"சார், இந்த பெரியார் பனியன் எங்க சார் கிடைக்குது?" என்றார்.
"இதுக்கென்னங்க, பெரியார் திடல்-ல கிடைக்குது" என்று சொல்லிவிட்டு மகிழ்வுடன் திரும்பினேன்.
அப்படி எல்லாம் நீங்கள் விரட்டிவிரட்டிக் கேட்கவேண்டாம்.
பெரியாரின் உருவம் பொறித்த பனியன்கள் ஓவியர் மருதுவின் கைவண்னத்தில் புதிதாக வெளிவந்திருகின்றன. கருப்பு வண்ண பனியனில் "மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு - பெரியார்" என்ற வாசகத்தோடு குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் போடும் வகையில், பல அளவுகளிலும், காலர் வைத்தும் கிடைக்கிறது.
பொது இடங்களில் அணிந்து செல்ல வெள்ளை மற்றும், சாம்பல் வண்ண உடைகள் S, M அளவுகளில் கிடைக்கிறது. வெள்ளையில் பெரியார் படம் மற்றும் வாசகத்துடனும், சாம்பல் பனியனில் படம் மற்றும் கையெழுத்துடனும் கிடைக்கிறது.
மற்ற இடங்களிலும் கிடைக்க செய்ய வேண்டுமானால் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய கழிவுத் தொகையோடு சேர்த்து அதிக விலைக்குத்தான் வழங்க வேண்டும். இப்போது அடக்கம் மற்றும் போக்குவரத்து செலவு மட்டும் கணக்கிடப்பட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள்(106-154) (கருப்பு)- ரூ.80
சிறியது, நடுத்தரம் (காருப்பு, வெள்ளை, சாம்பல்) - ரூ.100
பெரியது, மிகப் பெரியது (காலருடன் கருப்பு மட்டும்) - ரூ.110
நல்ல தரத்துடன் விற்பனையில் கிடைக்கிறது.
சென்னை பெரியார் திடல் - திராவிடன் புத்தக நிலையத்தில் கிடைக்கும்.
திருச்சி பெரியார் மாளிகை, தமிழர்தலைவர் வீரமணியின் சுற்றுப்பயணங்கள், தமிழகமெங்கும் உள்ள பெரியார் புத்தக விற்பனை நிலையங்கள் போன்ற இடங்களில் கிடைக்கும்.
பெரியார் திடலுக்கு வழி எப்படினெல்லாம் கேட்கப் ப்டாது ? இங்க பாருங்க!

கருத்துகள்

TBCD இவ்வாறு கூறியுள்ளார்…
உள்ளூரிலே ஹீரோவ வச்சிக்கிட்டு...வெளிய அலைஞ்சிக்கிட்டு இருந்திருக்கோம்...
இதுல தமிழ் வாசகங்கள் உள்ள பனியனாலே,ஏதோ சோப் கம்பெனி டீ,சர்ட் என்று இருக்கும் ஒரு கருத்தாக்கமும் உடைப்படும்...
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
காலர் வைத்த டிசர்ட் இருந்தால் பரவாயில்லை. ரவுண்ட் நெக் ஒருசிலருக்கு நன்றாக இருக்காது.
லக்கிலுக் இவ்வாறு கூறியுள்ளார்…
திராவிடன் புத்தகநிலையம் இயங்கும் நேரம் என்ன? ஆறு மணிக்கு மேல் வந்தாலும் திறந்திருக்குமா?
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
L, XL அளவுகள் காலருடன் கிடைக்கின்றன.
உங்களுக்கில்லாததா...சொல்லுங்க லக்கி... வாங்கி வைக்கிறேன்.
நன்றி tbcd, லக்கி, அனானி
சிவபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
Good Post!
கோவி.கண்ணன் இவ்வாறு கூறியுள்ளார்…
//
"மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு - பெரியார்" என்ற வாசகத்தோடு குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் போடும் வகையில், பல அளவுகளிலும், காலர் வைத்தும் கிடைக்கிறது.பொது இடங்களில் அணிந்து செல்ல வெள்ளை மற்றும், சாம்பல் வண்ண உடைகள் S, M அளவுகளில் கிடைக்கிறது.
//
நல்ல இடுகை !

பெரியார் இறந்துவிட்டார் என்று நினைப்பவர்களுக்கு புளியை கறைக்கும் !
வவ்வால் இவ்வாறு கூறியுள்ளார்…
சே குவேரா தேனீர் சட்டை எங்கே கிடைக்கும் என சொல்லுங்களேன்!
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
சிவபாலன், கோவி.கண்ணன், வவ்வால் ஆகியோருக்கு நன்றி!
சே பனியன் முற்போகு நிகழ்ச்சிகள் நடக்கும் அரங்கங்களில் விற்பனைக்குக் கிடைக்கும்... திருப்பூர் முகில் தான் சேபனியன் தயாரிக்கிறர். வாய்ப்பிருப்பின் அந்த முகவரியை தருகிறேன்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்....

நான் வாய்விட்டு உரக்கப்பாடி மகிழ்ந்தது போல் நீங்களும் கேட்டு, பாடி மகிழ வேண்டாமா? இதோ புரட்சிக் கவிஞர் ஓங்கி ஒலித்த "சங்கே முழங்கு" பாடல் கலங்கரை விளக்கம் திரைப்படத்திலிருந்து.... KalangaraiVilakkam... சங்க நாதம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றூதூது சங்கே! பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்! வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்! எங்கள் வாழ்வும்...... -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owner - Dinam