முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

'பொன்விழா' -பதிவு!

தந்தை பெரியாரின் போராட்டங்களில் வரலாற்றுச் சிறப்புமிக்க 'ஜாதி ஒழிப்புப் போராட்டம்' எனப்படும் ஜாதியைப் பாதுகாக்கும் 'அரசியல் சட்டத்தைக் கொளுத்தும் போராட்டம்' நிகழ்ந்து வரும் 2007 - நவம்பர் 26- ஆம் தேதி 50 ஆண்டுகள் நிறைவடைகிறது.

திராவிடர் கழகத்தின் போராட்ட வரலாற்றில், பெரியார் தொண்டர்களின் மனோதிடம் என்னவென்பதை வரலாறு கண்டுகொண்ட போராட்டம்!

'போராட்டத்திற்கான தண்டனை என்னவென்பதை முடிவு செய்து சட்டமியற்றிக் கொள்ளுங்கள், அதன் பிறகு என் போராட்டத்தை வைத்துக் கொள்கிறேன்' என்று வரலாறு காணாத வகையில் அறிவிப்புச் செய்து, தலைவர் பெரியார் நடத்திய போராட்டம்!


போராட்ட வீரர் ஒருவருக்கு இரண்டாண்டுகள் தண்டனை அறிவித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
அதற்கு அந்த போராளி, "சட்ட எரிப்பு போராளிகளுக்கு கடுமையான த்ண்டனை வழ்ங்கு' என்று நேரு மாமா சொன்னபின், ஏன் இவ்வளவு குறைந்த தண்டனை தருகிறீர்கள் மாமா!" என்று கேட்ட வரலாறு - வரலாற்றுக்கே புதிது!


போராட்டத்தில் ஈடுபட்ட சிறுவன் ஒருவன் மேல் இரக்கப்பட்ட நீதிபதி, " நீ (அரசியல் சட்டம் என்று எழுதப்பட்ட) வெறும் தாளைத் தானே கொளுத்தினாய்?" என்று கேட்டபோது, "நான் கொளுத்தியது வெறும் தாளாக இருக்கலாம். ஆனால் என் நோக்கம் அரசியல் சட்டத்தைக் கொளுத்துவது தான்" என்ற சிறுவனின் பதிலால் நீதிமன்றத்தையே அதிரச்செய்த போராட்டம்!


ஒளிந்து ஒளிந்து போராட்டம் நடத்தாமல், பெயரை அறிவித்து 'விடுதலை'யில் பட்டியல் வெளியிட்டு போராட்டம் நடத்தி சிறை காணும் வரலாறு படைத்த போராட்டம்!

இதோ பெரியார் அழைக்கிறார்:
"நான் எதற்காகச் சிறை செல்கிறேன்?"
சூதாடிய குற்றத்துக்காகவா?
கள்ளச்சாராயம் காய்ச்சிய குற்றத்துக்காகவா?
கொள்ளைக் குற்றத்துக்காகவா?
கொலைக் குற்றத்துக்காகவா?
மோசடிக் குற்றத்துக்காகவா?
பலவந்தப் புணர்ச்சிக் குற்றத்துக்காகவா?
பதுக்கல் - கலப்படம் குற்றத்துக்காகவா?
சாதிவெறியின் கலவரக் குற்றத்துக்காகவா?
என்ன குற்றத்துக்காக நான் சிறை செல்கிறேன்?

சாதியை ஒழிப்பதற்காகப் போராடினேன்! மறியல் செய்தேன்! சிறை சென்றேண்! சர்க்கார் கண் விழிக்கவில்லல. ஆகவே, சாதிக்கு ஆதாரமான சட்டத்தை கிழித்துத் தீயிலிட்டாவது இந்திய சர்க்காரின் (அரசின்) மனதை மாற்றலாமா, என்று கருதி அதைச் செய்தேன்.

இதில் எந்த உயிருக்கேனும் சேதமுண்டா? எந்தப் பொருளுக்கேனும் நாசமுண்டா?

இதற்காக எனக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை என்றால், இதை நான் மகிழ்ச்சியுடன் வரவேற்க வேண்டாமா?

'சாதியை ஒழிப்பதற்காக மூன்றாண்டு சிறை வாசஞ் செய்தான்' ன்பதை விடைப் பெரும் பேறூ, முக்கியக் கடமை, வேறென்ன இருக்கிறது?

இந்த விதமாக நீங்கள் ஒவ்வொருவரும் உங்களைக் கேட்டுக் கொள்ளுங்கள்.

பெரியார் அறிக்கை (விடுதலை 9-11-1957)
நன்றி: பெரியார் களஞ்சியம் - தொகுதி(11) [ஜாதி தீண்டாமை பாகம்(5)], பக்கம் 59, 60
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடு

இன்று வரை தொடர்ந்து வரும் இந்தப் போராட்டத்தின் பாதையில் கிடைத்த ஒரு வெற்றிதான் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் போராட்டம்! விந்தையாக இருக்கிறதா? ஜாதி ஒழிய வேண்டுமென்று போராடிய பெரியார் - அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக உரிமை கேட்டார் என்பது முரணாகத் தெரியலாம்! ஆனால் கண்ணதாசனின் வரிகளைப் போல் 'ஜாதி என்னும் நாகத்தை தாக்கித் தாக்கி பெரியார்' விரட்டியபோது அது, கோவில் கருவறைக்குள் நுழைந்து கொண்டது. அதை விரட்டிட வகுத்த சட்டம் -அய்யா மறைந்து 33 ஆண்டுகள் கழித்து நிறைவேறியது. அய்யாவின் கனவான ஜாதி ஒழிப்பும், சமதர்ம சமுதாயமும் நிறைவேறும் நாளுக்கு இப்பொன்விழா ஆண்டில் உறுதியேற்போம்!

ஜாதி ஒழிப்புக்காக சிறையிலும், களத்திலும் உயிர் நீத்த போராளிகளுக்கு வீரவணக்கம்! வீரவணக்கம்!!

படம்: எடமேலையூரில் நடைபெற்ற போராளிகளுக்கான பாராட்டுவிழா! - தமிழர் தலைவர் கி.வீரமணி பங்கேற்று பாராட்டினார்.


லால்குடியில் 2007 - நவம்பர் 26-இல் ஜாதி ஒழிப்புப் போராட்டப் பொன் விழா மாநாடு:
தமிழர் தலைவர் அறிவிப்பு!

கருத்துகள்

PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
தான் எழுதின பதிவை மற்ற பதிவர்கள் கண்டுக்காம விட்டுட்டாலோ, இரவு எழுதின பதிவை பார்க்கத் தவறிட்டாலோ அதை நினைவூட்டுவதற்காக கண்டுபிடிதிருக்கும் அருமையான முறைக்கு பின்னூட்டக் 'கயமை' என்று யார் பெயர் வைத்தது. அதை நான் வன்மையாக கண்டிப்பதோடு, என் 50-வது பதிவுக்கான 'கவன ஈர்ப்புத் தீர்மானத் தீர்மானத்'தைக் கொண்டு வருகிறேன்.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
மீண்டும் இது கவன் ஈர்ப்புத் தீர்மானம்!

-நானே நானே!
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
செய்திக்கு நன்றி, தோழர். பிரின்ஸ்.





பின்னூட்ட காவாளித்தனம், பின்னூட்ட பிராடுத்தனம் என்றெல்லாம் நிறைய உண்டு. ஹிஹிஹி
அபிமன்யு இவ்வாறு கூறியுள்ளார்…
நான் வழிமொழிகிறேன்.

50-வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
இறையனார் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்று பிரின்ஸ். அய்ம்பதாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்.விடாமல் பதிவினை தொடர்க.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்....

நான் வாய்விட்டு உரக்கப்பாடி மகிழ்ந்தது போல் நீங்களும் கேட்டு, பாடி மகிழ வேண்டாமா? இதோ புரட்சிக் கவிஞர் ஓங்கி ஒலித்த "சங்கே முழங்கு" பாடல் கலங்கரை விளக்கம் திரைப்படத்திலிருந்து.... KalangaraiVilakkam... சங்க நாதம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றூதூது சங்கே! பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்! வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்! எங்கள் வாழ்வும்...... -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owner - Dinam