எனதருமை தமிழீழச் சொந்தங்களே!
கொஞ்சம் தயக்கத்தோடும், நிறைய வருத்தத்தோடும் உங்களிடம் இதனைப் பேசத் துணிகிறோம். இதைப் பேசுகிற உரிமை எமக்கிருக்கிறதென்றும் கருதுகிறோம். இதனால் எம்மீது உங்களில் சிலருக்கும், எம்மில் சிலருக்கும் கூட வருத்தம் உண்டாகலாம். ஆயினும் யாரேனும் ஒருவர் இது குறித்துப் பேசியே ஆகவேண்டும்.
தமிழக அரசியலில் யார் யார் எப்படி செயல்பட வேண்டும் என்பது பற்றி அருள்கூர்ந்து நீங்கள் கருத்து தெரிவிக்காதீர்கள். இனப்பாசத்தின் அடிப்படையில், எம் உறவுகள் என்ற அடிப்படையில், தமிழனுக்கென ஒரு கொடி உலக அரங்கில் பறக்கட்டும் என்ற ஆசையில் தமிழீழத்துக்கான எங்கள் ஆதரவு அமைகிறது. அதே வேளையில் எம் தமிழ்நாட்டின் நிலைக்கேற்ப, எங்களின் தேவைகளுக்கேற்ப, இங்குள்ள சூழல்களைப் பொறுத்து யாரை ஆதரிப்பது, யாரை எதிர்ப்பது என்பது எங்கள் விருப்பம்.
அதை விடுத்து, உங்கள் விருப்பத்திற்கு செயல்படவில்லை என்பதற்காக கலைஞரைத் திட்டுவது, ஆசிரியர் வீரமணியைத் திட்டுவது, திருமாவை, சுப.வீ-யைத் திட்டுவது, தரக்குறைவாகப் பேசுவது என்று நீண்ட உங்கள் பட்டியல், இப்போது வைகோ வரை வந்திருக்கிறது. தெளிவாகச் சொல்கிறோம்... உங்களுக்காக நாங்கள் இயக்கம் தொடங்கவில்லை. எமது அடிமைச் சூழல்களுக்கு மத்தியில் தான் ஈழத்தமிழர்க்கான எங்கள் குரலும் ஓங்கி ஒலிக்கிறது. கடந்த 30 ஆண்டு காலத்தில் எமக்கான போராட்டங்களைவிட தமிழீழத்திற்கான போராட்டம் தான் தமிழ்நாட்டில் அதிகம்.
(2008-இல் Srilanka Guardian-இன் பார்வையில் ’தமிழ்நாட்டில் தமிழீழ அரசியல்’. Terror என்று அவன் தேசியத் தலைவரைக் குறிப்பிடுகிறான். மற்ற தலைவர்களை அதைக்கொண்டு வகைப்படுத்துகிறான். இதில் Terror என்ற வார்த்தையிலும், Victim of Terror, Forgetting terror- நபர்களிலும் நான் ஒத்துப் போகவில்லை.)
எப்படி சிங்களத்தின் கொடுமையை நாங்கள் நேரடியாக அனுபவித்ததில்லையோ (மீனவர் படுகொலை தவிர்த்து), அதே போல் இங்கிருக்கிற பார்ப்பனியக் கொடுவிஷத்தின் கொடுமைகளை நீங்கள் நேரடியாக அனுபவித்ததில்லை.
ஆனால் ஈழத் தமிழினத்தின் அழிவில் எந்த ஒரு தனி இயக்கத்துக்கும்(காங்கிரஸ்), தனிப்பட்ட மனிதருக்கும் இருக்கும் பங்கை விட ஆயிரம் மடங்கு வேகமாகவும், ஆழமாகவும் பார்ப்பனியத்தின் பணி இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால், பார்ப்பனியமே இவர்களை இயக்குகிறது. இயக்கங்களைப் பிரிப்பதும், மக்களைத் திசை திருப்புவதும், பார்ப்பனியமே. அதன் பல்வேறு கரங்கள் தான் உளவுத்துறையும், ஊடகங்களும்.
இப்படி ஈழத் தமிழர்களையும் சேர்த்து, எம் மக்கள் புரிந்துகொள்ள விரும்பாத, கண்ணுக்குத் தெரியாமல் போரிடும் எதிரியுடன் தினம் தினம் போராடிக் கொண்டிருக்கிறோம். இதில் எம்முடன் கரம் கோர்த்து போராட வேண்டிய நீங்கள், எமக்கெதிராக கட்சிகட்டி நிற்பது எவ்வகையில் சரியானது.
இதில் இன்னொரு பெரும் கொடுமையாக, ஆயிரம் ராஜபக்சேவுக்கு நிகரான மோடி என்னும் கொடுங்கோலனுக்கு அத்தனை பார்ப்பன ஊடகங்களும் ஆதரவுக் கரம் நீட்டிக் கொண்டிருக்க, அவனைப் போன்ற எண்ணற்ற வெறியர்களின் கூடாரமாகத் திகழும் ஆர்.எஸ்.எஸ் இயக்கமும், அதன் கிளைகளும் இந்த நாட்டையே விழுங்கத் துடித்துக் கொண்டிருக்கின்றன. இவர்களுக்கு எதிராக நாங்கள் எப்படி வியூகம் வகுப்பது, அணி திரட்டுவது என்று யோசித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், ஆத்திரத்தால் அறிவிழந்த சிலர் மோடியைப் பாராட்டுவதையும், பா.ஜ.க-வைப் பாராட்டுவதையும், அதை ஈழத் தமிழர்களின் பேரால் செய்வதும் வெந்த புண்ணில் சூலாயுதத்தைப் பாய்ச்சுவதாகும்.
எம் தமிழ்நாட்டு மக்களின் விடியலுக்காக இயக்கம் நடத்துகிற நாங்கள், எம்மினம் என்கிற துடிப்பில் உங்களுக்குக் கரம் தர முன்வருகிறோம். அத்தகைய சூழலிலும் நாங்கள் சொல்வதை நீங்கள் கேளுங்கள் என்ற தொனியில் எங்களுக்குக் கட்டளை விதிப்பதும், உணர்வோடு கரம் தருவோரை, தமிழக அரசியலில் அவர்களது நிலைப்பாடு குறித்து விமர்சனம் எழுப்பி தட்டி விடுவதும் அறிவார்ந்த செயல் ஆகுமா?
சகோதர யுத்தம் என்று தப்பித் தவறி யாராவது பேசினாலோ, ஈழத்தில் ஜாதிப் பிரச்சினை என்று தமிழகத் தமிழர்கள் யாராவது பேசிவிட்டாலோ கூட ”உங்களுக்கென்ன தெரியும், தமிழகத்தோடு எங்கள் சூழலை ஒப்பிடாதீர்கள்” என்று கொதித்துக் கொந்தளிக்கும் எம் ஈழச் சொந்தங்களே! எங்களின் அரசியல் நிலை உங்களுக்கென்ன தெரியும் என்று நாங்கள் கேட்கிறோம். (நாளை ஈழம் விடிந்தால் அங்கு ஜாதி ரீதியாக ஒடுக்கப்படும் குரல் எழுந்தாலும் நிச்சயம் நிலைமையைப் புரிந்துகொண்டு எங்கள் குரல் இருக்கும் என்பது ஒரு பக்கம்)
தனக்கான இடஒதுக்கீட்டு உரிமைக்குக் கூட சேர்ந்து போராடாத எம் தமிழ்நாட்டு இளைஞன் பெருமளவில் உணர்வோடு திரண்டது ஈழத் தமிழர் படுகொலைகளைக் கண்டித்துத் தான்! அப்படி ஒன்று சேர்ந்தவர்களும் உள்ளூர் அரசியல் நுழைந்தால் பிரிந்துவிடுவார்கள் என்ற கவலைதான் எங்களுக்கு!
ஈழப்பிரச்சினையைப் பயன்படுத்தி பலன் அனுபவிக்கத் துடிக்கும் கும்பலும் இங்கு இல்லாமல் இல்லை. கடந்த தேர்தலில் தமிழர்கள் அங்கு செத்துக் கொண்டிருந்த நேரத்திலும், எங்களுக்கு ஆதரவாய் ஓர் அறிக்கை விட்டால் ஒரே பிடுங்காகப் பிடுங்கிவிடுவோம் என்று வாக்கு சேகரிக்க உங்களைக் கொண்டு வந்து நிறுத்த முயற்சித்தது யார் என்று யோசியுங்கள். கடந்த பாராளுமன்றத் தேர்தலிலேயே ஈழப்பிரச்சினையை வைத்து அரசியல் லாபம் பார்க்கத் துடித்தவர்கள் தோல்வியுற்றார்கள்.
ஏற்கெனவே, சமூகப் பார்வை கொண்டவர்கள், அரசியலில், பொதுவாழ்வில் இருப்பவர்களில், பார்ப்பனர்கள், காங்கிரஸ்காரன், தேசிய அரசியல் பேசுபவன், பெரும்பான்மை பொதுவுடைமைத் தோழன், அ.தி.மு.க போன்றோர் ஈழப்பிரச்சினை பேசுவதில்லை. இன்னும் சொல்லப்போனால் இவர்கள் எப்போதுமே எதிர் நிலைப்பாடு கொண்டவர்கள்.
மிச்சமிருக்கும் சமுதாய இயக்கங்களான திராவிடர் கழகம் உள்ளிட்டவை, அரசியல் இயக்கங்களான தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க, வி.சி, இவற்றோடு, என்றைக்கும் தங்களுக்குள் ஒன்று சேர விரும்பாத கணக்கிலடங்கா தனிநபர் தமிழ்தேசியக் கட்சிகள் இவைதான் ஈழத் தமிழர் ஆதரவு நிலைப்பாட்டில் இருப்பவை. இதிலும் தி.மு.க - நேரடியாக புலிகளை ஆதரிக்காத இயக்கம்; ஆனால் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகக் (இருக்கிறார்கள் என்று நான் கருதுகிறேன்; இன்று பெயரளவில்தான் என்று நீங்கள் சொல்லலாம்) குரல் கொடுக்கும் இயக்கம்.
’நாங்கள் போராடிய அளவுக்காவது 2008-க்கு முன் புலம்பெயர் தமிழர்கள் களம் கண்டிருக்கிறார்களா’ என்ற கேள்வியும் கூட, புலம்பெயர் தேசத்தில் அதற்கான வாய்ப்பில்லை என்பதை நாங்கள் உணர்ந்த காரணத்தால் எம்மிடமிருந்து எழவில்லை.
ஆனால், இவர்களையும் இழக்கும் விதத்தில் அண்மைக் காலமாக பலரது பேச்சு இருந்துகொண்டிருக்கிறது. இப்படி எரிச்சலைக் கிளப்பும் வகையில் பேசச் செய்து, தமிழகத்தில் ஈழத் தமிழர்க்கான மக்கள் இயக்கங்களின் குரலை ஒழித்துவிடலாம் என்பதும் பார்ப்பனியத்தின் சூழ்ச்சியாக இருக்கலாம். இதில் அருள்கூர்ந்து ஈழத் தமிழர்கள் சிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
இப்போதைக்கு இது போதும், தேவைப்பட்டால் பிறகு விரிவாகப் பேசுவோம்.
ஏதோ சிலரின் அறிவற்ற பேச்சுக்காக, தமிழீழத்திற்கான ஆதரவுக் குரலையும், உணர்வையும் எங்களிடமிருந்து பிரித்துவிட முடியாது. ஏனெனில் உங்களுக்காகப் போராடுகிறோமே தவிர, உங்களைக் கேட்டுக் கொண்டு நாங்கள் போராடவரவில்லை.
நீங்கள் திட்டினாலோ, எங்களைத் துரோகி என்றாலோ நாங்கள் போராடாமல் இருக்கப் போவதுமில்லை. ஏனெனில், உங்களிடம் இருந்து எந்த பலனையும் எதிர்பார்க்காதவர்கள் நாங்கள். அதனால் தான் கேட்கிறோம், குறைந்தபட்சம் உங்கள் நலனை முன்னிட்டாவது, எமக்குள் இருக்கும் அரசியல் பிரிவினைகளுக்குள் நுழையாதீர்கள். பிறகு அதில் நசுங்கி ஒடுங்கப் போவது ஈழ ஆதரவு உணர்வுதான்!
கருத்துகள்
ஈழத்தமிழராகிய நாமும் உங்களிடம் ஒன்றைத் தயை கூர்ந்து கேட்டுக்கொள்கிறோம். தயவு செய்து எம்மை விட்டு விடுங்கள். கிடைக்கிற கேப்பில் சூழலுக்குத் தகுந்தவாறு குரல் கொடுப்போம் என்றெல்லாம் வேண்டாம்.
இப்பொழுதெல்லாம் தொப்புள் கொடி உறவென்ற சொல்லைக் கேட்டாலே அருவருக்கிறது.
இந்தியா - தமிழ்நாடு என்பதெல்லாம் நமது அரசியல் போரில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது என்பதை நாங்கள் தெளிவாக உணர்ந்து கொண்டதால் தயவு செய்து நீங்களும் ஈழத்தமிழனுக்கு விடுதலை என கண்ணீர் வடிக்காதீர்கள். முடிந்தால் மீனவர்கள் உயிரைக் காக்க ஏதாவது செய்ய முடியுமா பாருங்கள்..
மீனவருக்காக நாங்கள் இயக்கம் கட்டவில்லை என்று சொல்லிவிடமாட்டீர்கள் தானே..
தமிழ்நாட்டிலிருந்து ஈழ ஆதரவு எதிர்ப்பு பேசுகிற எவரைப்பார்த்தாலும் வயிறு பற்றி எரிகிறது.
எங்கள் வார்த்தைகளில் தெரிவது நம்பி ஏமாந்து கெட்டவனின் விரக்தி.. இப்போ மெல்ல மெல்ல எல்லாம் புரிகிறது. தப்பு எங்க மேலதான்.
எப்போதாவது ஒருநாள் - சிங்கள இனத்தோடும் அதன் தலைவர்களோடும் நீதியான முறையில் மனதோடு ஒன்றிணைய முடியுமென்கிற நம்பிக்கை ஒரு ஓரத்தில் உண்டு. ஆனால் தமிழகம் இந்தியா அப்படிக் கிட்ட வரும் என இப்ப கனவு கூட வருவதில்லை. தப்பு எங்க மேலதான் விட்டுடுங்க..
வடிவேலு மாதிரி சொன்னால்.. (இப்ப அப்படிச் சொன்னால்தானே எடுபடுகிறது) இந்தக் கோட்டுக்கு அங்கால நானும் வரமாட்டேன்.. நீங்களும் வரக்கூடாது ஆமா..
இறுதியாக ஒரு வேண்டுகோள்.. தயவு செய்து தேசியத் தலைவர் என்றெல்லாம் சொல்லாதீர்கள். உங்கள் வாயால் கேட்கிற எங்களுக்கு காது கூசுகிறது
அப்படியே நீங்களும் ஈழத்தமிழர் பிரச்சினை - தேசியத்தலைவர் வருகிறார் - தொப்புள் கொடி - தனி நாடு என்று பிதற்றிக் கொண்டு இருக்காமல் உங்கள் நாட்டில் இருக்கும் பிரச்சினைகளுக்காக மட்டும் போராடுங்கள் அதுவே போதுமானது.
நன்றி.
கீழ் வரும் வரிகளின் ஆழத்தை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
ஈழத் தமிழினத்தின் அழிவில் எந்த ஒரு தனி இயக்கத்துக்கும்(காங்கிரஸ்), தனிப்பட்ட மனிதருக்கும் இருக்கும் பங்கை விட ஆயிரம் மடங்கு வேகமாகவும், ஆழமாகவும் பார்ப்பனியத்தின் பணி இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால், பார்ப்பனியமே இவர்களை இயக்குகிறது. இயக்கங்களைப் பிரிப்பதும், மக்களைத் திசை திருப்புவதும், பார்ப்பனியமே. அதன் பல்வேறு கரங்கள் தான் உளவுத்துறையும், ஊடகங்களும்.
இப்படி ஈழத் தமிழர்களையும் சேர்த்து, எம் மக்கள் புரிந்துகொள்ள விரும்பாத, கண்ணுக்குத் தெரியாமல் போரிடும் எதிரியுடன் தினம் தினம் போராடிக் கொண்டிருக்கிறோம்
இந்து ராம், நாராயணன் மற்றும், இந்தியாவைப் பொறுத்தவரை ஈழப் போராட்டம் ஆரிய( சிங்களவர்) திராவிடப் போராட்டம்.
ஒரு ஆரியனுக்கு உலகத்தில் எங்காவது கேடு நடந்தால் துடிக்கும் இந்தியா தமிழ் மீனவர்கள் ஆரியத்தினால் கொல்லப் படுவதைத் தடுக்காமல் கதை சொல்வது ஏன் ?
இதை நன்கு உணர்ந்து கொள்வது எதிர்காலத் திட்டங்களுக்கும், ஏமாறாமல் இருப்பதற்கும் முக்கியம். தமிழகத்துத் தமிழர்கள் உணர்ச்சிகளைக் கொட்டிய அளவிற்கு உதவிகளைக் கொட்ட முடியாத அடிமைகளாகப், புது டில்லியின் முழு ஆளுமையில் வாழ்வதுதான் உண்மை. இதைத் தலைவர் நன்கு புரிந்து கொண்டுதான் புலம்பெயர் தமிழர்கள் உலக அள்விலே போராட்டத்தைக் கெயெடுத்துச் செல்ல வேண்டும் என்பதைத் தெளிவாக்கினார்.
அதை தமிழீழ மக்களுக்கு நேரடியாக எழுதுவது சரியில்லை.
தேவையில்லாத பதிவு.
மா சிவகுமார்
காங்கிரசுக்கு வாக்களிக்கவேண்டுமென்கிறீர்களா? ஜெ அம்மையார் கொடுமையானவர் என்பதிலே எள்ளளவும் சந்தேகமில்லை. அவருக்கு கருணாநிதி மேல். ஆனால், கருணாநிதி ஈழத்தமிழர்மீது பாசம் கொண்டிருக்கின்றார் என்று படம் காட்டாதீர்கள்.
தமிழகத்தமிழர் தமக்கானவரைத் தேர்ந்தெடுக்க தம் வாழ்க்கைப்பிரச்சனைகளேயே முன்னுக்கு வைக்கவேண்டும் என்று நீங்கள் சொல்வதிலே முழுக்க உடன்பாடே!
காங்கிரசை ஆதரிப்பதுதான் சுயமரியாதை என்றால், வாழ்க
நிமல்-NiMaL உடைய கருத்தே மிக சிறந்த ஆரோக்கியமான கருத்து.
//அப்படியே நீங்களும் ஈழத்தமிழர் பிரச்சினை - தேசியத்தலைவர் வருகிறார் - தொப்புள் கொடி - தனி நாடு என்று பிதற்றிக் கொண்டு இருக்காமல் உங்கள் நாட்டில் இருக்கும் பிரச்சினைகளுக்காக மட்டும் போராடுங்கள் அதுவே போதுமானது.//
இதுவே தமிழகத்தில் உள்ள தமிழருக்கும் நல்லது. இலங்கையில் வாழும் தமிழருக்கும் நல்லது.
தமிழனுக்கென ஒரு கொடி உலக அரங்கில் பறக்கட்டும் என்ற உங்கள் ஆசைக்காக இலங்கையில் வாழும் தமிழனின் வாழ்வை தயவு செய்து நாசப்படுத்தாதீர்கள்.
http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_15.html
பதிவுலகப் போராளிகளுக்கு ஒரு வேண்டுகோள்.
http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_13.html
ஆமாம்..இன்னமும் எம்.ஜி.ஆர் இருக்கிறார் என்று நம்புவது போலவே இன்னமும் பிரபாகரன் இருக்கிறார் என்று கும்பல் நம்புகிறது. அது அவர்கள் உரிமை.
//அதை தமிழகத்து பதிவு எழுதுவோர் பலரும் ஏற்று கொண்டு பிரபாகரன் தான் தமிழர்களின் தலைவன் என்று எழுதுவதை கவனிக்கலாம். //
ஆமாம்.இவர்கள் அறிவுஜீவித்தனம் எதுவரை என்றால் ராணுவம் அப்பாவி மக்களை தாக்குவதை கண்டிப்பது வரை. ஏண்டா இத்தனாயிரம் மக்களை பணய கைதியாக வைத்திருந்து சாகடித்தாய் என்று பிரபாகரனை கேட்கமுடியாது.
//ஆகவே கலைஞர் எப்போதும் அவர்களுக்கு எதிரி தான். அடுத்தது புலிகளின் சாகச யுத்தம் தோல்வி என்ற யதார்த்தை புலி ஆதரவு தமிழர்களால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவே முடியாது.//
புத்தி ஏற்றுக்கொண்டாலும் மனசு ஏத்துக்காது. அறிவுஜீவியாக பேசினாலும் மனசு விசிலடிச்சான் குஞ்சு மனசுதான். வீரப்பன் என்றாலும் கைதட்டும்.பிரபாகரன் என்றாலும் கைதட்டும்.
// அதனால் கலைஞர் உட்பட தமிழக தலைவர்களை திட்டி தீர்க்கிறார்கள்.
நிமல்-NiMaL உடைய கருத்தே மிக சிறந்த ஆரோக்கியமான கருத்து.
அப்படியே நீங்களும் ஈழத்தமிழர் பிரச்சினை - தேசியத்தலைவர் வருகிறார் - தொப்புள் கொடி - தனி நாடு என்று பிதற்றிக் கொண்டு இருக்காமல் உங்கள் நாட்டில் இருக்கும் பிரச்சினைகளுக்காக மட்டும் போராடுங்கள் அதுவே போதுமானது.//
புலிகள் வலிமையாக இருந்த காலக்கட்டத்தில் தமிழக தலைவர்கள் வேலையை பார்க்கட்டும்.ஈழத்தை நாங்கள் வாங்கிக்கொள்வோம் என்றெல்லாம் வீரவசனம் விட்டார்கள் இந்த புலம்பெயர் காகித புலிகள்.
//
இதுவே தமிழகத்தில் உள்ள தமிழருக்கும் நல்லது. இலங்கையில் வாழும் தமிழருக்கும் நல்லது.
தமிழனுக்கென ஒரு கொடி உலக அரங்கில் பறக்கட்டும் என்ற உங்கள் ஆசைக்காக இலங்கையில் வாழும் தமிழனின் வாழ்வை தயவு செய்து நாசப்படுத்தாதீர்கள்.//
நூற்றில் ஒரு வார்த்தை.இன்று இவர்கள் ( காகித தமிழ்நாட்டு புலிகள்) எடுத்த நிலைக்காக மிச்சம் இருக்கிற தமிழனை இலங்கையில் சாகடிக்காமல் விட மாட்டானுங்க.
வழக்கம் போல் சூரமணியின் விசுவாசமான நாய் போலவே குரைத்திருக்கிறாய்.வாழ்த்துக்கள்.
இவர்கள் பேச்சை நம்பி ஈழத்தவன் நம்மவனாயிற்றே அவன் சாகிறானே என்று தீக்குளித்த முத்துக்குமாரும் இவர்கள் பேச்சை நம்பி மூவர் தூக்கை எதிர்த்துத் தீக்குளித்த செங்கொடியும் உயிரை விட்டது தான் கொடுமையிலும் கொடுமை. நாளைக்கே ராசீவ் கொலைக்காக உள்ளே இருக்கும் மூவரை கலைஞரோ வீரமணியோ திருமாவோ ஆதரிக்கவில்லை. கட்சி நடத்தி சமூக சேவை செய்யவே அவர்களுக்கு நேரம் பத்தலை என்று கூறுவார்கள். இவர்களை நம்பிய தமிழனுக்கு நன்றாக கோபாலபுரம் கிருஷ்ணன் கோவிலில் நாமக்கட்டி வாங்கி கிருஷ்ணா நதி நீரில் குழைத்து பட்டையாக நாமம் போடுவார்கள். நாமும் இவர்கள் தமிழினத் தலைவர்கள் என்று ஓட்டுப் போடுவோம். போங்கடா நீங்களும் உங்க இயக்கமும், இன உணர்வும், ஈர வெங்காயமும்.
இந்தக் கண்ணீர்த்துளி கருணாநிதியும், கைக்குட்டை வீரமணியும் தமிழனுக்கு நம்பிக்கை துரோகம் செய்தது தான் நாம் கண்ட இனமானச் செம்மை. தூ....