முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இலவசக் கழிவறையும், சில கழிவுகளும்

மதுரை பேருந்து நிலையம் அருகில் நவீன இலவச கழிப்பிடம் ஒன்றைக் கட்டப்பட்டிருக்கிறது! அவரைப் பாராட்டுவதை விட்டுவிட்டு அழகிரி படம் இருப்பதைப் புகைப்படம் எடுத்துக் காட்டி கிண்டல் அடிக்கிறார் ஒருவர். அங்கே ராசா படம் வைக்கவேண்டும்; பெண்கள் பகுதிக்கு கனிமொழி, நீராராடியா என்று ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறீர்கள். வேலையத்த வெட்டிகளைப் போல உங்கள் அருவெறுப்பை இங்கே வந்து காட்டுவதா?


கோடிகோடியாய்க் கோயிலுக்குக் கொட்டி அழுபவர்களும், திருவிழா, கொண்டாட்டம் என்று பாவக் கணக்கை தீர்க்க செலவு செய்து கொண்டிருப்பவர்களும் லட்சக்கணக்கில் இருக்கின்றனர். அப்படி நடக்கும் திருவிழாக்களில் கூட முறையாகக் கழிப்பிட வசதி செய்து கொடுக்காமல், போகும் வரும் இடங்களில் எல்லாம் அசுத்தம் செய்து ஊரையே கழிவறையாக்கிவிட்டுச் செல்லும் படி திருவிழா நடத்துகிற கோயில்களையும், அதன் மூலம் கொள்ளையடிக்கிற கும்பலையும் கண்டிக்க ஒருமுறையாவது உங்களுடைய விரல்கள் கணினியைத் தொட்டிருக்குமா? சுகாதரமற்ற குளங்களினாலும், கோவிலைச் சுற்றிய கழிவுகளினாலும் எத்தனை பேர் பாதிக்கப்படுகிறார்கள். அதற்கெல்லாம் கவலைப்பட்டதுண்டா?

சமூகத்திற்குப் பயன்படும் விதத்தில் கழிவறை கட்டிவிட்டவர் அழகிரி ஆதரவாளராக இருந்தால் அவரையும், மனமிருந்தால் அழகிரியையும் சேர்த்துப் பாராட்டுவதை விட்டுவிட்டு கிண்டல் அடித்துக் கொண்டிருக்கிறீர்களே! வெட்கமாயில்லை...?

ஊடகங்கள் உருவாக்கியிருக்கும் தோற்றத்தைக் கொண்டே, தொடர்ந்து வன்மம் நிறைந்ததும், கருத்தற்ற கிண்டலுமாக பேசிக் கொண்டிருப்பதும், கற்றோர்க்கு அழகல்ல!

கழிவறையில் அடையாளத்திற்காக படம் மாட்டப்பட்டிருந்தால், அதைக் கேவலம் என்றா கருதுவீர்கள்? அப்படியெனில் அதைப் பயன்படுத்தும் நீங்கள் அதைவிடக் கேவலமானவர்களா? நாம் கேவலமானவர்களா? ஏன், உங்களில் யாருக்கும் கழிவு வெளியேறாதா? கடவுளர், கடவுளச்சி படங்களை கழிவறைகளில் மாட்டியிருக்கிறார்களே! அதற்கென்ன பொருள்?
---------------------------------------------------------------------------------------------

இதை விட மோசமான, ஆபாசமான குறுந்தகவல்களும், மின்னஞ்சல்களும் தி.மு.க.வைக் குறிவைத்து எய்யப்படுகின்றன. ஸ்பெக்ட்ரம் குறித்த கேள்விகளுக்குப் பதில் தரத் தயார் என்று சொன்னாலும், நாடாளுமன்றத்தை நடத்த விடாத அராஜககும்பலைப் போலத்தான் இருக்கிறது இவர்களது நடவடிக்கை.

"ஸ்பெக்ட்ரம் பிரச்சினை - ஊழல் பிரச்சினையில்லை; கற்பனை நட்டம் என்ற கதை கட்டல்" என்று தெரிந்ததும், "அதுவும் இவர்கள் சொன்ன தொகையெல்லாம் சம்பந்தமே இல்லாத தொகை" என்று இதே துறைக்கான முன்னாள் அமைச்சர் அருண்ஷோரி சொன்னதும், "2001-இலிருந்து விசாரிக்க வேண்டும்" என்று உச்ச நீதிமன்றம் சொன்னதும் நடந்தபிறகு முறையான கருத்துகளை விட்டுவிட்டு, அவதூறு பரப்பும் விதமாக மட்டுமே வருவதை கவனித்தாலே இந்த கெட்டிக்காரர்களின் புளுகு எத்தனை நாள் என்று தெரிந்துவிடும்.

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
alagiri supporters have not built it for social service but for collecting Rs 5 for urin.
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
http://www.sureshkumar.info/2010/12/blog-post_26.html
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
நண்பனே மிக விபரமாக சரியாகத்தான் பேசினீர்கள்.. ஆனால் கடைசியில் நீங்கள் கொண்டு வந்த சேர்த்த இடம் தான் இருக்கிறதே.. அதை நிணைத்து நான் சிரிப்பதா.. இல்லை அழுவதா என்று தெரியவில்லை. (ரொம்ப புத்திசாலிதான் நீங்க....)
bandhu இவ்வாறு கூறியுள்ளார்…
எப்படியோ, மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டுவிட்டீர்கள்!
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
loosapaa nee?

ivanoda panam, background, rowdism ellam theriyuma? illa, therinchum theriyatha maathiri nadikkirya?

CM son appdinu oru qualification pothuma? vera ethuvume illa. (councillor ward la kooda nikkirathukku layakku illa!)

kastam, ithu maathiri aalungalala ungala maathiri padichavanga support panrathu. naadu urupatta maathiri thaan.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்....

நான் வாய்விட்டு உரக்கப்பாடி மகிழ்ந்தது போல் நீங்களும் கேட்டு, பாடி மகிழ வேண்டாமா? இதோ புரட்சிக் கவிஞர் ஓங்கி ஒலித்த "சங்கே முழங்கு" பாடல் கலங்கரை விளக்கம் திரைப்படத்திலிருந்து.... KalangaraiVilakkam... சங்க நாதம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றூதூது சங்கே! பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்! வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்! எங்கள் வாழ்வும்...... -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owner - Dinam