முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வாழையும் கொஞ்சம் வாழ்க்கையும்!

விவசாய விளைபொருட்களுக்குப் பெரும்பாலும் பேரம் பேசாமலும், ஏன் என்று கேட்காமலும் வாங்கி வந்துவிடுவேன். ’விலைப்பட்டியல் போட்டு விற்பவனிடம் பேரம் பேசாமல், அன்றாடம் பிழைப்பவரிடம் என்ன பேரம்?’ என்பது தான் அதற்குக் காரணம். இருந்தாலும் சில நேரம் இளநீர் விலை ரூ. 30, 35 எனும் போது கொஞ்சம் ஜெர்க் ஆகித் தான் போகிறேன். 



நேற்றும் இன்றும் வாழைப்பழம் வாங்கப் போனபோதும் இதே நிலை தான். பெரிய மேடு, சூளை பகுதிகளில் 10:30-க்குமேல் எங்கும் வாழைப்பழம் இல்லை. மசூதிக்கு எதிரில் உள்ள கடையில் 4 ரூபாய் என்றார் ஒரு பழம்! சின்னப் புள்ள விரல் தண்டி இல்ல அந்த வாழைப்பழம்.. - அது 4 ரூபாயாம்... சரி, நேரமாயிட்டதுனால அப்படியிருக்கும்னு நினைச்சேன். இன்னிக்கு வேற ஒரு கடையிலயும் அதே 4 ரூபாய் தான். ஒன்ஸ் ஏறுனா அதில இருந்து இறக்காம,  ஃபிக்ஸ் பண்ணிடுவாங்க போலிருக்கு!

ரூபாய்க்கு எத்தனை என்று கேட்கும் நிலை போய், இப்போ 10 ரூபாய்க்கு ஒன்றா இரண்டா எனக் கேட்க வேண்டியிருக்கும் போல! 
ஊரில் இருக்கும் வரை எனக்கு நிரம்பப் பிடித்தது ரஸ்தாலி தான்! பூவன் பழம் சளிப் பிடிக்கும் என்று எங்க அய்யா வாங்க மாட்டார். சித்தப்பா வீட்டில் பச்சை நாடா வாங்குவார்கள். ஆனால் அதில் ஒரு மருந்து வாடை அடிப்பது போல் எனக்குத் தோன்றும். அதனால் அதிகம் விரும்பமாட்டேன். மதுரையில் ஒரு முறை கல்லூரிப் போட்டிகளுக்காகப் போனபோது தான் நாட்டுப் பழம் சாப்பிட்டேன். மிகவும் பிடித்துப் போனது. வீட்டில் காய்த்த ஆயிரம் காய்ச்சியும் இந்தப் பட்டியலில் உண்டு.

வீட்டில் விளைந்தவை தவிர, எங்க அய்யா பழம் வாங்கினால் தாரில் பாதி அளவுக்கு வாங்கிவிடுவார். ’என்ன மாப்ள!’ என்று பழவண்டியில் அய்யா கை வைத்தால் கால் வாசி சரக்கு தீர்ந்து தான் செல்வார் வண்டிக்காரர். சென்னைக்கு வந்த பிறகு, ரஸ்தாலி அதிகம் கிடைக்காமல், கற்பூர வாழையை சுவைக்கத் தொடங்கிய பிறகு, அதன் இனிப்புக்கு நான் சுவைஞனாகிவிட்டேன்.

’செவ்வாழை’யெல்லாம் அண்ணாவின் கதையோடு சரி! அத்துடன் மலைப்பழம், சிறுமலைப்பழம், நேந்திரன் எல்லாம் கொஞ்சம் காஸ்ட்லியான பணக்காரப் பழங்கள். அதனால் அந்தப் பக்கம் போவதில்லை. எப்படியிருக்கும் என்று ஒவ்வொரு முறை சுவை பார்த்ததோடு அவ்ளோதான்.
சென்னையில் எது மஞ்சளாக இருந்தாலும் அது ’மஞ்சப்பழம்’ தான். ரஸ்தாலி, பூவன், கற்பூரவல்லி என்றெல்லாம் கேட்டால் ஏற இறங்கப் பார்த்துவிட்டுத்தான் பழத்தைப் பிய்த்துக் கொடுப்பார்கள்.

ஆனால், வரவர சென்னையில் மற்ற பழங்களே கிடைக்காமல் போய் எங்கு பார்த்தாலும் பச்சை நாடாவுக்கு மஞ்சள் பெயிண்ட் அடித்தது போன்ற ஹைபிரிட் வகை என்று சொல்லப்படும் ’மோரிஸ்’ தான். எனக்கு அதில் பெரிய விருப்பம் இல்லை. மிகப்பெரும்பாலும் அதை உண்பதைத் தவிர்த்துவிடுவேன். 

இப்போது, சென்னையைப் போலவே தமிழகத்தின் பெரும்பாலான ஊர்களிலும் மோரிஸின் ஆதிக்கம் இருப்பதைப் பார்க்கிறேன். ரிலையன்ஸ் பழம் என்றும் இதனைச் சொல்கிறார்கள். ரிலையன்சின் ஆதிக்கம் எங்கும் நிறைந்திருப்பதும் தெரிகிறது. முக்கனியில் மூன்றாம் கனியில், மோரிசைத் தவிர, வேறு வகையே இனி இருக்காது போலும். எங்கேனும் ரஸ்தாலியைக் கண்டால் காணாததைக் கண்டது போல் இருக்கிறது. விலையோ கடுமையாக இருக்கிறது. 

பசிக்கு ரெண்டு வாழைப்பழம் சாப்பிட்டால் போதும் என்ற எளிய நிலையெல்லாம் இன்று இல்லை. 2 ரூபாய்க்கு பெரிய பழமே கிடைக்கும் என்றிருந்த நிலை ஒன்றிரண்டு ஆண்டுகளில் சிறிய பழம் தான் 4 ரூபாய் என்னும் நிலையைத் தொட்டிருக்கிறது. நல்ல வளர்ச்சி தான்!?


எனக்கு இந்த அரிசி விலை, காய்கறி விலையெல்லாம் தெரியாது. விலையேற்றத்துக்கான எனது அளவுகோல் பரோட்டா தான். 10 ஆண்டுகளுக்கு முன் சென்னையில் பரோட்டா 2 ரூபாய்; இன்று அதே கடையில் 10 ரூபாய்! டீ 1.50-லிருந்து 6, 7 வரை ஆகிவிட்டதாம். 
வாழை மட்டுமல்ல... இங்கே வாழ்க்கையே விலையேறித் தான் போயிருக்கிறது!

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
சரியா ஒண்ணாந்தேதி சம்பளம் வாங்குறவனுக்கு எந்த கவலையும் இல்ல. அவன் பார்க்கிறதை விட பல மடங்கு வேலையை டீ மாஸ்டரும், பரோட்டா போடுறவரும் பார்க்கிறார், விலைவாசி உயர்வை டீ விலையையும், பரோட்டா விலையையும் வைச்சு பார்க்கிறதுக்கு ஒயிட் காலருக சம்பளத்தை வைச்சு கணக்கிடலாம். இல்ல உங்க சம்பளத்தை வைச்சே கணக்கிடலாம்,
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
கரெக்டு தான் அனானி! அதை சம்பளம் வாங்குறவன் கணக்கு பண்ணலாம். இன்னும் படிச்சுக்கிட்டிருக்கேன். ஓரளவு எனக்கு வேணுங்கிறத சம்பாதிக்கிற நானெல்லாம் அன்னாடங்காச்சி! வேலை பார்த்தா கூலி! நான் வேற எப்படி கணக்கு பண்றது?
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
டீ 1.50 வித்த காலத்துல இருந்து காலேஜ்ல தான் படிக்கிறிங்களா. கால காலத்துல படிச்சு முடிங்க. உங்களுக்கு வருமானம் இல்ல. ஓகே. உங்க அப்பாவோட வருமானம் பத்து வருஷத்துல ஏறி இருக்கும்ல. நீங்க சுயமா சம்பாதிக்காதவரை டீ எல்லாம் குடிக்காதிங்க.
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
ஆகட்டுங்க அனானி! எனக்கு டீ குடிக்கிற பழக்கம் கிடையாதுங்க... அதனால் தான் //டீ 1.50-லிருந்து 6, 7 வரை ஆகிவிட்டதாம். //னு எழுதியிருக்கேன். இன்னும் 5 வருடம் படிக்கிற எண்ணம் இருக்கு! Do you have any problem with this? //ஓரளவு எனக்கு வேணுங்கிறத சம்பாதிக்கிற நானெல்லாம்// நான் சுயமா சம்பாதிச்சாலும் டி குடிக்கிறதில்ல..

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்....

நான் வாய்விட்டு உரக்கப்பாடி மகிழ்ந்தது போல் நீங்களும் கேட்டு, பாடி மகிழ வேண்டாமா? இதோ புரட்சிக் கவிஞர் ஓங்கி ஒலித்த "சங்கே முழங்கு" பாடல் கலங்கரை விளக்கம் திரைப்படத்திலிருந்து.... KalangaraiVilakkam... சங்க நாதம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றூதூது சங்கே! பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்! வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்! எங்கள் வாழ்வும்...... -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owner - Dinam