அவசியம் எழுத வேண்டும்; பிறருக்குச் சொல்ல வேண்டும் என்று நாம் கருதி பணி/சோம்பல் காரணமாக தள்ளிப்போடும் செய்திகள் பல பிறரால் சொல்லப்பட்டுவிடும் போது, நாம் நினைத்தது வந்துவிட்டதே என்ற மகிழ்ச்சியும், கொஞ்சம் இயலாமையால் உருவான பொறாமையும் ஏற்படுவதை மறுக்க முடியாது. ஆனால் அதை மீறி, மகிழ்ச்சியை வளர்த்துக் கொள்ளுதலே நமது உடலுக்கும் மனதுக்கும் நல்லது என்கிற உணர்வில் தான் இது வரை செயல்பட்டு வந்திருக்கிறேன். (வேற வழி...!)
அந்த வகையில் நீண்ட நாட்களாக நினைத்துவைத்திருந்த சில விசயங்கள் பதிவாகவோ, செய்தியாகவோ, படத்திலோ வெளிவந்து விட்டன. எனவே இனியும் அவற்றைக் காலம் கடத்தாமல் பதிவது என்ற நோக்கில் தொடங்கிவிட்டேன். அநேகமாக, அடுத்த ஓரிரண்டு பதிவுகளும் இதே திக்கில் இருக்கலாம்..
---------------------------------------
இளையராஜாவின் பாடல்களைத் தொடர்ந்து கேட்டு, அணுஅணுவாய் ரசிக்கும் பழக்கம் அண்ணன்களிடமிருந்து தொற்றியது. ஒவ்வொரு இசை நுணுக்கங்களையும் ரசித்து, வியந்து, மகிழ்வது தனிசுகம்.
இப்போதிருக்கும் சன் மியூசிக் வருவதற்கு முன்னால், சன் தொடங்கிய சில ஆண்டுகளில் சன் மூவீஸ் என்றும், சன் மியூசிக் என்றும் இரண்டு சேனல்கள் தோன்றின. பின்னர் அவை தொடரப்படாமல் நின்றுபோயின. அதன் பின்னர் 2000-ஆம் ஆண்டு வாக்கில் கே டிவி-யும் பின்னர் சன் நியூஸ், சன் மியூசிக், ஆதித்யா என அடுத்தடுத்து சேனல்கள் வந்தன.
நிறைய இடைக்காலப் படங்களை எனக்கு அறிமுகப்படுத்தியது சன் மூவீஸும், கே டி.வியும் தான். அதே போல் தான் சன் மியூசிக் சேனலும்.
ஆட்டோ ராஜா படத்தில் ’சங்கத்தில் பாடாத கவிதை...’ பாடலுக்கு பாட்டி ஒருவருடன் மலர்களுக்கு மத்தியில் காதல் செய்து கொண்டிருப்பார் விஜயகாந்த். அட்டகாசமான அந்தப் பாடலை தேடித்தேடிக் கேட்கத் தொடங்கினேன். பிறகு இணையத்தின் துணை கொண்டு அந்தப் பாடலை தேடிய போது, அதே இசையில் எண்ணற்ற பாடல்களை பல மொழிகளில் ராஜா உருவாக்கியிருப்பது தெரிந்தது.
தம்பி புருனோவும், நானும் அவற்றைத் தொகுத்துக் கொடுத்து, ஒரு முறை சூரியன் பண்பலையில் நண்பர் ராஜசேகர் மூலமாக பகிர்ந்து கொண்டோம். அந்த இணைப்புகளோடு நமது வலைப்பூவிலும் எழுத வேண்டுமென்று அதை வைத்திருந்தும் இழுத்துக்கொண்டே போய் எழுத முடியவில்லை.
இத்தொகுப்புகளை பலரும் யூடியூப் இணையதளத்தில் குறிப்புடன் கூட இணைத்திருக்கிறார்கள்.
இந்நிலையில் இன்று அக்கா கவின் மலர் அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் இந்த தொகுப்பைத் தேடிப் பகிர்ந்திருந்தார்கள். எனவே வாயை மூடிக் கொண்டு அதையே எடுத்து இந்தப் பக்கத்திலும் பதிந்துவிட்டுப் போகிறேன்... பொறாமை கலந்த மகிழ்ச்சியுடன்!
எனக்குத் தெரிந்து மிக அதிகமான எண்ணிக்கையில் ஒரே ஒரு மெட்டு இத்தனை முறை பயன்படுத்தப்பட்டிருப்பது இளையராஜாவின் இந்த ஒரு மெட்டுதான் என்று நினைக்கிறேன்.
மலையாளத்தில் ’ஓலங்கள்” படத்தில் இடம்பெற்ற ‘தும்பி வா’ முதல்...
இதோ..:http://www.youtube.com/watch?v=QczFj252vGE
அதன்பின் தமிழில் ‘ஆட்டோ ராஜா’வுக்காக இங்கே :
http://www.youtube.com/watch?v=DQg-5s21zP4
அதன்பின் தெலுங்கில் பாலுமகேந்திரா இயக்கத்தில் ’Nireekshana’ படத்தில்:
http://www.youtube.com/watch?v=hNaJftkrKcU
அதனபின் தமிழில் அதேபடம் மொழிமாற்றம் செய்யப்பட்டு ‘கண்ணே கலைமானே” என்ற பெயரில் வெளியானது.
https://www.youtube.com/watch?v=bXsHgqTwRl0
அநேகமாக பாலுமகேந்திராவுக்கு மிகப் பிடித்த மெட்டாக இது இருந்ததால்...மீண்டும்..Aur ek prem kahani" இந்திப் படத்தில் அதே மெட்டை மீண்டும் பயன்படுத்தினார்
https://www.youtube.com/watch?v=CayXUhErirI
மீண்டும் 'Paa" படத்தில் அதே மெட்டு..வேறொரு வடிவத்தில்... :
http://www.youtube.com/watch?v=Ir6tShQJmHk
இவை மட்டுமல்ல....வரிகளே அல்லத ஒரு இன்ஸ்ட்ருமெண்டல் போனஸ்
:http://www.youtube.com/watch?v=8Thz8_Z7rw8
எல்லாம் ஓர் இடத்தில்!
https://www.youtube.com/watch?v=8aUOeT2i9CQ
இது மாதிரி ஒரே மெட்டு இத்தனை முறை வேற்ங்காவது பயன்படுத்தப்பட்டிருக்கிறதா? இருந்தால் சொல்லுங்கள்.
எத்தனை முறை எப்படிக் கேட்டாலும் பிடித்துப் போகும் மாயம் தான் என்ன?
நன்றி: கவின்மலர்
https://www.facebook.com/kavinnnn/posts/3148563476301
ஒரே மெட்டு தான்.. ஆனால் அதில் எத்தனை உணர்வுகளைக் கொடுக்க முடிகிறது இவரால்...!
காதலாகிக் கசிந்துருகும் பாடல், அப்படியே உற்சாகமாக குழந்தைகள் பாடும் பாடலாகிறது, இளசுகள் சுற்றுலாவில் கரகரப்புடன் பாடும் துள்ளல் பாடலாகிறது...! இது தவிர கார்த்திக்ராஜா இசையில் விளம்பர இசையாகவும் வந்துள்ளது. (’நீர்வீழ்ச்சி தீமூட்டுதே’ பாடலை எழுதியவர் பாவலர் அண்ணன் அறிவுமதி அவர்கள்)
ராஜா - நீ - தமிழன் உலகுக்குத் தந்த இசைக் கொடை!
அந்த வகையில் நீண்ட நாட்களாக நினைத்துவைத்திருந்த சில விசயங்கள் பதிவாகவோ, செய்தியாகவோ, படத்திலோ வெளிவந்து விட்டன. எனவே இனியும் அவற்றைக் காலம் கடத்தாமல் பதிவது என்ற நோக்கில் தொடங்கிவிட்டேன். அநேகமாக, அடுத்த ஓரிரண்டு பதிவுகளும் இதே திக்கில் இருக்கலாம்..
---------------------------------------
இளையராஜாவின் பாடல்களைத் தொடர்ந்து கேட்டு, அணுஅணுவாய் ரசிக்கும் பழக்கம் அண்ணன்களிடமிருந்து தொற்றியது. ஒவ்வொரு இசை நுணுக்கங்களையும் ரசித்து, வியந்து, மகிழ்வது தனிசுகம்.
இப்போதிருக்கும் சன் மியூசிக் வருவதற்கு முன்னால், சன் தொடங்கிய சில ஆண்டுகளில் சன் மூவீஸ் என்றும், சன் மியூசிக் என்றும் இரண்டு சேனல்கள் தோன்றின. பின்னர் அவை தொடரப்படாமல் நின்றுபோயின. அதன் பின்னர் 2000-ஆம் ஆண்டு வாக்கில் கே டிவி-யும் பின்னர் சன் நியூஸ், சன் மியூசிக், ஆதித்யா என அடுத்தடுத்து சேனல்கள் வந்தன.
நிறைய இடைக்காலப் படங்களை எனக்கு அறிமுகப்படுத்தியது சன் மூவீஸும், கே டி.வியும் தான். அதே போல் தான் சன் மியூசிக் சேனலும்.
ஆட்டோ ராஜா படத்தில் ’சங்கத்தில் பாடாத கவிதை...’ பாடலுக்கு பாட்டி ஒருவருடன் மலர்களுக்கு மத்தியில் காதல் செய்து கொண்டிருப்பார் விஜயகாந்த். அட்டகாசமான அந்தப் பாடலை தேடித்தேடிக் கேட்கத் தொடங்கினேன். பிறகு இணையத்தின் துணை கொண்டு அந்தப் பாடலை தேடிய போது, அதே இசையில் எண்ணற்ற பாடல்களை பல மொழிகளில் ராஜா உருவாக்கியிருப்பது தெரிந்தது.
தம்பி புருனோவும், நானும் அவற்றைத் தொகுத்துக் கொடுத்து, ஒரு முறை சூரியன் பண்பலையில் நண்பர் ராஜசேகர் மூலமாக பகிர்ந்து கொண்டோம். அந்த இணைப்புகளோடு நமது வலைப்பூவிலும் எழுத வேண்டுமென்று அதை வைத்திருந்தும் இழுத்துக்கொண்டே போய் எழுத முடியவில்லை.
இத்தொகுப்புகளை பலரும் யூடியூப் இணையதளத்தில் குறிப்புடன் கூட இணைத்திருக்கிறார்கள்.
இந்நிலையில் இன்று அக்கா கவின் மலர் அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் இந்த தொகுப்பைத் தேடிப் பகிர்ந்திருந்தார்கள். எனவே வாயை மூடிக் கொண்டு அதையே எடுத்து இந்தப் பக்கத்திலும் பதிந்துவிட்டுப் போகிறேன்... பொறாமை கலந்த மகிழ்ச்சியுடன்!
-------------------------------------------------------
அதிகமாக இசை கேட்டுக்கொண்டிருப்பதன் பலன் இந்த குறிப்பு..எனக்குத் தெரிந்து மிக அதிகமான எண்ணிக்கையில் ஒரே ஒரு மெட்டு இத்தனை முறை பயன்படுத்தப்பட்டிருப்பது இளையராஜாவின் இந்த ஒரு மெட்டுதான் என்று நினைக்கிறேன்.
மலையாளத்தில் ’ஓலங்கள்” படத்தில் இடம்பெற்ற ‘தும்பி வா’ முதல்...
இதோ..:http://www.youtube.com/watch?v=QczFj252vGE
அதன்பின் தமிழில் ‘ஆட்டோ ராஜா’வுக்காக இங்கே :
http://www.youtube.com/watch?v=DQg-5s21zP4
அதன்பின் தெலுங்கில் பாலுமகேந்திரா இயக்கத்தில் ’Nireekshana’ படத்தில்:
http://www.youtube.com/watch?v=hNaJftkrKcU
அதனபின் தமிழில் அதேபடம் மொழிமாற்றம் செய்யப்பட்டு ‘கண்ணே கலைமானே” என்ற பெயரில் வெளியானது.
https://www.youtube.com/watch?v=bXsHgqTwRl0
அநேகமாக பாலுமகேந்திராவுக்கு மிகப் பிடித்த மெட்டாக இது இருந்ததால்...மீண்டும்..Aur ek prem kahani" இந்திப் படத்தில் அதே மெட்டை மீண்டும் பயன்படுத்தினார்
https://www.youtube.com/watch?v=CayXUhErirI
மீண்டும் 'Paa" படத்தில் அதே மெட்டு..வேறொரு வடிவத்தில்... :
http://www.youtube.com/watch?v=Ir6tShQJmHk
இவை மட்டுமல்ல....வரிகளே அல்லத ஒரு இன்ஸ்ட்ருமெண்டல் போனஸ்
:http://www.youtube.com/watch?v=8Thz8_Z7rw8
எல்லாம் ஓர் இடத்தில்!
https://www.youtube.com/watch?v=8aUOeT2i9CQ
இது மாதிரி ஒரே மெட்டு இத்தனை முறை வேற்ங்காவது பயன்படுத்தப்பட்டிருக்கிறதா? இருந்தால் சொல்லுங்கள்.
எத்தனை முறை எப்படிக் கேட்டாலும் பிடித்துப் போகும் மாயம் தான் என்ன?
நன்றி: கவின்மலர்
https://www.facebook.com/kavinnnn/posts/3148563476301
--------------------------------------------------------
ஒரே மெட்டு தான்.. ஆனால் அதில் எத்தனை உணர்வுகளைக் கொடுக்க முடிகிறது இவரால்...!
காதலாகிக் கசிந்துருகும் பாடல், அப்படியே உற்சாகமாக குழந்தைகள் பாடும் பாடலாகிறது, இளசுகள் சுற்றுலாவில் கரகரப்புடன் பாடும் துள்ளல் பாடலாகிறது...! இது தவிர கார்த்திக்ராஜா இசையில் விளம்பர இசையாகவும் வந்துள்ளது. (’நீர்வீழ்ச்சி தீமூட்டுதே’ பாடலை எழுதியவர் பாவலர் அண்ணன் அறிவுமதி அவர்கள்)
ராஜா - நீ - தமிழன் உலகுக்குத் தந்த இசைக் கொடை!
கருத்துகள்
http://www.youtube.com/watch?v=ZFq8a5vPFuU
ஏசியாநெட் ஐடியா ஸ்டார் சிங்கரில் துர்கா விஸ்வநாத் என்பவர் பாடியது.. கேட்டுப் பாருங்கள்...
//
அதனால் தான் அவர் இசைக்கு ராஜ வாக உள்ளார்
நண்பன் படமும் அஜித் ரசிகர்களும்
S A ராஜ்குமாரை மறந்து விட்டு பேசுகிறீர்கள். ஒரே மெட்டை வைத்து பற்பல பாடல்கள் கொடுத்திருக்கிறார்.. (ஆனால் கேட்கும்போது கொலைவெறி வருவதை தவிர்க்க முடியாது!)