மாவீரன் பிரபாகரன்பற்றி சட்டமன்றத்திலேயே ஜெ கூறியது என்ன?
16.4.2002 அன்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் முதல் அமைச்சர் ஜெயலலிதா முன்மொழிந்த தீர்மானம் வருமாறு:
நான் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த போதெல்லாம் இந்திய அரசாங்கத்தை ஸ்ரீலங்கா அரசுடன் தொடர்பு கொண்டு பயங்கரவாத அமைப்பான LTTE.-யின் தலைவரான பிரபாகரனை ஸ்ரீலங்கா நாட்டிலிருந்து இங்கு கொண்டு வந்து சேர்த்து, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நீதிமன்றத்தின்முன் நிறுத்தவேண்டுமென திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தேன். 20.9.1991 ஆம் தேதியிட்ட எனது கடிதத்தில், அப்போது மாண்புமிகு பாரதப் பிரதமராக இருந்த திரு. பி.வி. நரசிம்மராவ் அவர்களை, தேவைப்படும் பட்சத்தில் ஸ்ரீலங்கா அரசினுடைய அனுமதி பெற்று நம்முடைய இராணுவத்தை அனுப்பியேனும், பிரபாகரனைப் பிடித்து இந்தியாவிற்குக் கொண்டுவரவேண்டுமென்று கேட்டுக்கொண்டேன். முன்னாள் பிரதமர், அமரர் திரு. ராஜீவ்காந்தியின் படுகொலையைப் புரிந்தமைக்காக விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை இந்திய நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டுமெனக் கோரியிருந் தேன். அதன் பின்னர் பலமுறை இதே கோரிக்கையை வலியுறுத்தினேன். அப்போது பாரதப் பிரதமராக இருந்த திரு. பி.வி. நரசிம்மராவ் அவர்களின் அரசு, இது குறித்து நடவடிக்கை எடுத்து, 1995-இல் - Interpol-International Criminal Police Commission அமைப்பின் வாயிலாக பிரபாகரனைக் கைது செய்ய Red Corner Notice வழங்கப்பட்டது. ஆனால், அதன் பின்னர் எதுவும் நடக்கவில்லை.
அண்மையில் நிறைவேற்றப்பட்ட 2002 ஆம் ஆண்டு பயங்கரவாத தடுப்புச் சட்டம், Prevention of Terrorism Act, 2002-இன்கீழ் இந்திய அரசாங்கம் விடுதலைப்புலிகள் இயக்கத்தைப் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்த்து இந்திய மக்களை நிம்மதியடையச் செய்தது. அந்தப் பயங்கரவாத அமைப்பினால், அண்மைக் காலங்களில் விடுதலைப்புலிகள் சம்பந்தப்பட்ட சில பிரச்சினைகளில் மத்திய அரசாங்கம் மௌனம் காத்து வருவது எங்களுக்குக் கவலை அளிக்கிறது.
படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பாரதப் பிரதமர் அமரர் திரு. ராஜீவ்காந்தி அவர்களின் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் இலங்கை விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து இந்திய அரசிடம் ஒப்படைப்பதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும் என்று இச்சட்டப் பேரவை வற்புறுத்துகிறது. மேலும், தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் இயக்கத்தைச் சார்ந்த எந்த ஒருவரையும் இந்தியத் திருநாட்டிற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்றும் மத்திய அரசை இப்பேரவை வற்புறுத்துகிறது. இவ்வாறு சட்டப் பேரவையிலேயே தீர்மானத்தை நிறைவேற்றியவர்தான் ஜெயலலிதா.
----------------------------------
"தமிழகத்தில் அமைதி நிலவவும், இந்தியாவின் இறையாண்மை காக்கப்படவும், பயங்கரவாத இயக்கமான தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கம் தடை செய்யப்பட வேண்டும் என்று 1991-ஆம் ஆண்டு நான் தமிழக முதலமைச்சராக பொறுப்பெற்ற பிறகு, மத்திய அரசை வலியுறுத்தினேன். என்னுடைய பெரு முயற்சியின் காரணமாகத்தான் தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கம் 14.5.1992 அன்று மத்திய அரசால் தடை செய்யப்பட்டது. அந்த இயக்கத்தின் மீதான தடை இன்று வரை தொடருகிறது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நிர்ணயிக்கப்பட்ட நீதிமன்றத்தால் பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியாக வி. பிரபாகரன் அறிவிக்கப்பட்டுள்ளார்" (நமது எம்.ஜி.ஆர். 23.10.2008 பக்கம் 1).
(மதிமுக பொதுக்குழுவில் (9.4.2009) விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்க வேண்டும் என்று தீர்மானம் நிறை வேற்றியுள்ளார்களே - இதற்கு என்ன பதில் சொல்வார்கள்? விடுதலைப்புலிகள் இயக்கம் என்னால்தான் தடை செய்யப்பட்டது என்று கித்தாப்புப் பேசும் அம்மையாரிடம் அல்லவா கூட்டு சேர்ந்துள்ளனர்?)-------------------------------------
- ஜெயலலிதா அறிக்கை (நமது எம்.ஜி.ஆர். ஏடு 23.10.2008)
இதன் மூலம் என்ன தெரிகிறது? ஜெயலலிதா ஆட்சியில் இருந்தால் விடுதலைப்புலிகளைப் பற்றிப் பேச முடியாது. கலைஞர் ஆட்சியில் இருந்தால் பேச முடிகிறது. இதற்குப் பிறகும் ஜெயலலிதாவுக்கு ஜெ போடுவோரை என்னவென்று கூறுவது?கலைஞர் ஆட்சியில் இருக்கும்போதுதான் பொதுக் கூட்டம் போட முடிகிறது, பேரணி நடத்த முடிகிறது, போராட்டங்களை நடத்த முடிகிறது என்பதை நன்கு தெரிந்திருந்தும் ஜெயலலிதாவைப் போற்றுவதும், கலைஞரைத் தூற்றுவதும் அறிவார்ந்த செயல் தானா? உண்மையிலே ஈழத் தமிழர்கள்மீது அக்கறை யிருந்தால் விரோதியை நண்பராகவும் நண்பரை விரோதியாகவும் கருதுவார்களா?
--------------------------------------
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக கருணாநிதி !
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட (14.10.2008) தீர்மானத்தைப் பார்த்தால், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக கருணாநிதி செயல்படுகிறாரோ என்ற சந்தேகம்தான் தமிழக மக்கள் மனதில் எழுந்துள்ளது. இலங்கையில் தற்போது நடைபெறும் உள்நாட்டுப் போரை நிறுத்துவதற்கான அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை என்பதை அய்ந்து முறை முதலமைச்சரான கருணாநிதி புரிந்து கொள்ளாதது விந்தையாக உள்ளது.இலங்கை உள்நாட்டு விஷயத்தில் இந்திய அரசு தலையிட்டால், பின்னர் நம் நாட்டு உள் விவகாரத்தில் அண்டை நாடுகள் தலையிடுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டு, அது இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிப்பதாக அமையும். அடுத்த நாட்டின் உள்விவகாரத்தில் தலையிடுவதை உலக நாடுகள் ஏற்றுக் கொள்ளாது.
- ஜெயலலிதா (நமது எம்.ஜி.ஆர். 16.10.2008)
------------------------------------
போரை நிறுத்த வேண்டும் என்பதன்மூலம் கருணாநிதி விடுதலைப் புலிகள் அமைப்பை காப்பாற்றுவதற்கான முயற்சியில் தற்போது ஈடுபட்டிருக்கிறார். இது ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்றல்ல. (நமது எம்.ஜி.ஆர். 16.10.2008)
ஈழப் போரை நிறுத்த இந்தியா தலையிட வேண்டும் என்று ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்துள்ள கட்சிகளும் கூறுகின்றன. ஜெயலலிதாவோ என்ன சொல் லுகிறார்? அப்படி தலையிட்டால், இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கும் என்கிறார். இந்த ஜெயலலிதாவுடன் தான் இவர்கள் கூட்டாம் -குழம்பாம் - பொரியலாம் - ரசமாம் - துவையலாம் - குருமாவாம்! தமிழர்களே, புரிந்து கொள்வீர்!
கருத்துகள்
நியாயத்துக்காக துடிக்கும் மனது வேறு
அரசியல்வாதிகளிடம் நியாயத்தை எதிர்பார்ப்பது மடத்தனம்
நியாயத்துக்காக வேறு வழி ஒன்ன்றை யோசிக்கணும் தோழரே