முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கருணாநிதிக்கு கோயில் கட்டியவரே அகற்றினார்!

First Published : 02 Jul 2010 12:51:51 PM IST



குடியாத்தம், ஜூலை 1: வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே முதல்வர் கருணாநிதிக்கு கோயில் கட்டிய திமுக தொண்டரே வியாழக்கிழமை அவரது சிலையை அங்கிருந்து அகற்றினார்.
 கட்சித் தலைமையில் இருந்து வந்த உத்தரவையொட்டி, அவர் சிலையை அகற்றியதாகக் கூறப்பட்டது.
 குடியாத்தம் அருகே உள்ள பரதராமி அடுத்த சாமிரெட்டிபல்லி கிராமத்தில், ஒன்றிய திமுக மாவட்ட பிரதிநிதியும், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினருமான ஜி.ஆர். கிருஷ்ணமூர்த்தி, முதல்வர் கருணாநிதிக்கு கோயில் அமைத்தார்.
  தன் சொந்த நிலத்தில், சொந்த பணம் சுமார் ரூ. 2 லட்சம் செலவில் கட்டடம் கட்டி, அதில் கருணாநிதியின் இரண்டரை அடி உயர மார்பளவு சிலை வைக்கப்பட்டு, அறையின் முகப்பு சுவரில் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், சட்டம் மற்றும் சிறைத் துறை அமைச்சர் துரைமுருகன், திமுக மாவட்டச் செயலர் ஆர். காந்தி ஆகியோரின் படங்களும் பதிக்கப்பட்டிருந்தன.
 இதுதொடர்பான செய்தி தினமணியில் புதன்கிழமை (ஜூன் 30) வெளியாகியிருந்தது.
 இந்நிலையில், தனக்கு கட்டிய கோயிலை அகற்றுமாறு மாவட்டச் செயலர் ஆர்.காந்தியிடம் முதல்வர் கருணாநிதி கூறியதாகத் தெரிகிறது.
 இதுகுறித்து ஜி.ஆர்.கிருஷ்ணமூர்த்திக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
 இதற்கிடையே, அனுமதியின்றி கட்டிய கோயிலை அகற்றுவதற்காக, குடியாத்தம் வட்டாட்சியர் எம்.வசந்தா, காவல் துணைக் கண்காணிப்பாளர் வி.காசிவிஸ்வநாதன் உள்ளிட்டோர் அங்கு விரைந்தனர்.
 போலீஸôரும், வருவாய்த் துறையினரும் வருவதையறிந்த ஜி.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, தான் கட்டிய கோயிலில் இருந்த கருணாநிதி சிலையை துணியால் சுற்றி, வியாழக்கிழமை இரவு 10 மணி அளவில் வீட்டுக்குக் கொண்டு சென்றுவிட்டார். மேலும், அங்கிருந்த கல்வெட்டை உடைத்து, அகற்றினார்.
 இதைத் தொடர்ந்து அங்கு வந்த வருவாய்த்துறையினர், ஏதும் செய்யாமல் அங்கிருந்து திரும்பினர். தற்போது கோயில் காலியாகக் காட்சியளிக்கிறது.
http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Edition-Vellore&artid=265861&SectionID=140&MainSectionID=140&SEO=&Title=கருணாநிதிக்கு%20கோயில்%20கட்டியவரே%20அகற்றினார்!

தினமலர் செய்தி....

முதல்வருக்கு கட்டிய கோவில் அகற்றம்




பதிவு செய்த நாள் : ஜூலை 03,2010,01:22 IST

வேலூர் : குடியாத்தம் அருகே முதல்வர் கருணாநிதிக்கு கவுன்சிலர் கட்டிய கோவிலை அதிகாரிகள் அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் பரதராமி நெடுஞ்சாலையில் உள்ள சாமிரெட்டிபல்லியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (45). தி.மு.க.,வைச் சேர்ந்த இவர் மாவட்ட ஊராட்சி கவுன்சிலராக உள்ளார்.
சாமிரெட்டி பல்லியில், அவருக்கு சொந்தமான இடத்தில் இரண்டு லட்ச ரூபாய் செலவில் ஒரு கோவில் கட்டியுள்ளார். இதில், இரண்டரை அடி உயரத்தில் கற்சிலையால் மார்பளவில் முதல்வர் கருணாநிதிக்கு சிலை அமைத்துள்ளார். கோவில் முகப்பில் துணை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன், காந்தி எம்.எல்.ஏ., ஆகியோர் உருவப் படங்கள் வரையப்பட்டுள்ளன.
"இக்கோவிலில் மூன்று வேளையும் பூஜைகள் நடக்கும், ஆண்டு முழுவதும் அனைத்து நாட்களிலும் விசேஷ பூஜைகள் நடக்கும், கோவிலுக்கு வருபவர்களுக்கு மதியம் இலவச உணவு வழங்கப்படும்' என, கிருஷ்ணமூர்த்தி கூறியிருந்தார்.
இந்நிலையில், குடியாத்தத்தைச் சேர்ந்த வருவாய்த் துறையினர் நேற்று காலை 10 மணிக்கு கோவில் இருந்த இடத்துக்கு வந்து மார்பளவு இருந்த கருணாநிதியின் சிலையை அகற்றினர். மேலும், கோவிலின் முகப்புத் தோற்றம் உள்ளிட்ட அனைத்தையும் அகற்றினர். இது குறித்து தகவல் அறிந்த கிருஷ்ணமூர்த்தி விரைந்து வந்து காரணம் கேட்ட போது, "அனுமதியில்லாமல் கட்டிய கோவிலை இடிக்கிறோம்' என, கூறினர்.

கலைஞர் மாபெரும் மனிதரே!
முதலமைச்சர் மானமிகு, மாண்புமிகு கலைஞர் அவர்கள், பகுத்தறிவு, தன்மான, இனமானக் கருத்துகளைத் தொடர்ந்து சுட்டிக் காட்டி வந்தாலும், அண்மைக்காலமாக அதற்கு மேலும் முக்கியத்துவம் கொடுத்து, அழுத்தம் கொடுத்துச் சொல்லி வருகிறார்.
தன்னைப் பற்றி ஒரு வரியில் சுயமதிப்பீடு என்று சொல்லும்போது மானமிகு சுய-மரியாதைக்காரன்! என்று திட்டவட்டமாகவே தெளிவுபடுத்திவிட்டார்.
டில்லியில் பெரியார் மய்யத் திறப்பு விழாவில் தி.மு.க. தோழர்களுக்கு வேண்டு-கோள் அல்ல_கட்டளையாகவே தெரி-வித்தார்.
பெரியார் _ அண்ணா பெயரைச் சொல்லிக் கொண்டு கோவிலுக்குப் போவது, வாஸ்து பார்ப்பதெல்லாம் கூடாது என்றே தெளிவுபடுத்தியும் விட்டார்.
இந்தச் சூழலில் வேலூர் பகுதியில் தி.மு.க.வைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சிக் கவுன்சிலர் ஒருவர் மானமிகு கலைஞர் அவர்களுக்குக் கோவில் எழுப்பி, மூன்று வேளை பூஜைக்கும் ஏற்பாடு செய்துள்ளார் என்று வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சிக்குரியது; கண்டிக்கத்தக்கதுமாகும்.
தி.மு.க. தலைவராகவும், 5 ஆம் முறை-யாகத் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராகவும் விளங்கக் கூடிய மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்களை மதிப்பது, பாராட்டுவது, நன்றி காட்டுவது என்பது இது போன்ற மூடநம்பிக்கைச் செயல்களால் அல்ல!
அவரைப் பொறுத்தவரை பாராட்ட எத்தனையோ பரிமாணங்கள் உண்டே! 87 ஆண்டுகளில் 75 ஆண்டுகளுக்கு மேலான பொது வாழ்க்கைக்குச் சொந்தக்காரரான அவர் பன்முகப் பேராற்றல் கொண்டவர். அவர்தம் நூல்களைப் பரப்பலாம்; அவர் முரசொலியில் எழுதி வரும் அறிக்கைகளை அச்சிட்டுப் பொது மக்களுக்கு_ குறிப்பாக இளைஞர்களுக்குக் கொடுக்கலாம்.
பகுத்தறிவு சார்ந்த நூல்களில் இடம் பெற்ற பகுதிகளை அச்சிட்டு வழங்கலாம். கலைஞர் பெயரில் படிப்பகத்தை ஏற்படுத்தி திராவிடர் இயக்கக் கொள்கைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்லலாம்_தெரு முனைப் பிரச்சாரக் கூட்டங்களை நடத்த-லாம். கலைஞர் அவர்களின் பிறந்த நாளை-யொட்டி பள்ளிகளில், கல்லூரிகளில் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிகளை நடத்திப் பரிசளிக்கலாம்.
பகுத்தறிவு அடிப்படையில் கலைஞர் அவர்களின் புகழை, சாதனைகளைப் பரப்பி அதன்மூலம் அவரை மதித்திட ஆயிரம் ஆயிரம் வழிகள் இருக்கும்போது, தன்மான -_ பகுத்தறிவுக் கொள்கைக்கு விரோதமாக கோயில் எழுப்பி அதில் கலைஞர் அவர்-களைக் கடவுளாக ஆக்குவது என்பது_-நினைத்துப் பார்க்கப்பட முடியாத ஒன்றாகும்.
ஒருவருடைய கொள்கையை ஒழிக்க வேண்டுமானால், அவரை மகானாகவோ, கடவுளாகவோ ஆக்கினாலே போதும் என்பார்கள்.
கலைஞர் என்பவர் திராவிடர் இயக்-கத்தின் கருவூலம்! தந்தை பெரியார் அவர்களின் தன்மான இயக்கத் தனிப் பெரும் தளகர்த்தர்! இன்றைக்கு நம்மிடையே வாழும் திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர்.
அவர் மனிதர் _ மாபெரும் மனிதர்_ மதிக்கத்தக்க போராளி. அவரைக் கடவுளாக்கி, பகுத்தறிவாளர்கள் மத்தியில் சங்கடத்தை உருவாக்கும் வேலையில் ஈடுபடவேண்டாம். அது சிலையாக இருக்-கட்டும்_அதன் கீழ் கலைஞர் அவர்களின் பகுத்தறிவுப் பொன்மொழி கல்வெட்டாகச் செதுக்கப்படட்டும். கோயில் _ பூஜை என்ற முயற்சியை உடனடியாகக் கைவிடுக!

கலைஞர் இதனை ஏற்கமாட்டார்
கலைஞருக்குக் கோயிலாம்: திமுக கவுன்சிலர் ஏற்பாடு
வேலூர், ஜூலை 1_ தி.மு.க.-வைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சிக் கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி என்ப-வர் முதல் அமைச்சர் கலைஞர் செய்துவரும் சாதனைகளுக்காகக் கோயில் கட்டி, மூன்று வேளையும் பூஜை நடத்த உள்ளாராம்.
கோயிலுக்குப் போகா-தீர்! வாஸ்து பார்க்காதீர்! என்று திமுக தோழர்களுக்கு கலைஞர் கட்டளையிட்-டுள்ள நிலையில், இந்தக் கோயிலை கலைஞர் ஏற்க-மாட்டார் என்பதில் அய்யமில்லை. வேலூர் குடியாத்தம் பரதராமி நெடுஞ்சாலையில் உள்ள சாமிரெட்டிபல்லியை சேர்ந்தவர் கிருஷ்ண-மூர்த்தி (வயது 45). தி.மு.-க.,-வைச் சேர்ந்த இவர், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர். சாமிரெட்டி-பல்லியில் தனக்குச் சொந்-தமான இடத்தில் 2 லட்-சம் ரூபாய் செலவில் முதல்-வர் கலைஞருக்கு இவர் கோயில் கட்டியுள்-ளார். இரண்டரை அடி உயரத்தில் முதல்வர் கலைஞரின் மார்பளவு கற்சிலையை அமைத்து உள்ளார். கோவில் முகப்-பில் துணை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன், காந்தி எம்.எல்.ஏ., ஆகியோர் உருவப் படங்களும் வரை-யப்பட்டுள்ளன. கேட்-டால் கொடுப்பார் கட-வுள்; கேட்காமல் கொடுப்-பார் கலைஞர் என, அங்குள்ள கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. கலைஞருக்காக இக்-கோயில் கட்டப்பட்டுள்-ளது என, கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. கவுன்சிலர் கிருஷ்ண-மூர்த்தி கூறும்போது, முதல்வர் கலைஞர் ஏழை-களுக்கு உயிர் காக்கும் உயரிய சிகிச்சை அளிக்க மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், கிராம மக்கள் பயன் பெறும் வகையில் 108 ஆம்புலன்ஸ் வசதி, இலவச கலர் டிவி, ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி போன்ற திட்டங்-கள் கொண்டு வந்துள்ளார். அதனால், முதல்வருக்கு கோயில் கட்டியுள்ளேன். இங்கு மூன்று வேளை-யும் பூஜை நடக்கும். ஆண்டு முழுவதும் அனைத்து நாட்களிலும் விசேஷ பூஜைகள் நடக்கும். கோயி-லுக்கு வருபவர்களுக்கு மதியம் இலவச உணவு வழங்கப்படும், என்றார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்....

நான் வாய்விட்டு உரக்கப்பாடி மகிழ்ந்தது போல் நீங்களும் கேட்டு, பாடி மகிழ வேண்டாமா? இதோ புரட்சிக் கவிஞர் ஓங்கி ஒலித்த "சங்கே முழங்கு" பாடல் கலங்கரை விளக்கம் திரைப்படத்திலிருந்து.... KalangaraiVilakkam... சங்க நாதம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றூதூது சங்கே! பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்! வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்! எங்கள் வாழ்வும்...... -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owner - Dinam