முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஈழத் தமிழர் உரிமை பெற்றிட செம்மொழி மாநாடு நல்ல துவக்கம்!

தமிழினத்துக்கு எதிரான ஜெ கூட்டத்தை மக்கள் அடையாளம் காண்பர்
ஈழத் தமிழர், உலகத் தமிழர் உரிமை பெற்றிட
உலகத் தமிழ் செம்மொழி மாநாடு - இனமானத் திருவிழா - நல்ல துவக்கம்!
தமிழர் தலைவர் கி.வீரமணி அறிக்கை
சென்னை, ஜூன் 20- ஈழத் தமிழர், உலகத் தமிழர் இனம் உரிமை பெற்றிட உலகத் தமிழ் செம்மொழி மாநாடு ஒரு நல்ல துவக்கம். எதற்கெடுத்தாலும் போராட்டம், சேற்றை வாரி இறைப்பது, ஈழத் தமிழர் பிரச்சினை வரை நாகரிகமில்லாமல் நடந்து கொள்ளும் எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவையும் அவரது கூட்டத்தினரையும் மக்கள் அடையாளம் காண்பர் என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார் அவரது அறிக்கை வருமாறு:
எதிர்க்கட்சித் தலைவர் - அவரது கூட்டத்தார்! பைத்தியக்காரனுக்கு கள் ஊற்றியதுபோல்...
தமிழ்நாட்டு அறிக்கைத் தலைவியாகக் காட்சியளித்து நாளுக்கொரு போராட்டத்தை, மலையேறிய நிலையிலும் நடத்திடும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் அவரது கூட்டத்தாருக்கும், கோவையில் முதலாவது உலகத் தமிழ் செம்மொழி மாநாடு சீரோடும் சிறப்போடும் நடைபெற விருப்பதையும், உலக முழுவதிலும் உள்ள நல்ல தமிழ் நெஞ்சங்கள் பற்றோடும் பாசத்தோடும் கலந்து கொள்ள ஆயிரக்கணக்கில் வந்து குவியத் தொடங்கி விட்டனர் என்ற செய்தியையும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
தந்தை பெரியார் அவர்கள் கூறும் உவமைபோல், பைத்தியக்காரனுக்குக் கள் ஊற்றியதுபோல உளற ஆரம்பித்து வயிற்றெரிச்சலையும், வசவுகளையும் வாரி இறைத்து அதில் இன்பங் காணுகின்றனர்.
என்னே இழி நிலை!
நனி நாகரிகமின்றி சேற்றை வாரி இறைப்பதா? அரசியல் வேறு; மொழி வேறு. பொதுப் பிரச்சினைகளில் ஒன்றுபட்டு நிற்கும் அரசியல் நனி நாகரிகத்திற்கே இடமின்றி, குறைகூறி சேற்றையும், கையில் எடுக்கக் கூடாத அசிங்கங்களை யும், குப்பைகளையும் கலைஞர் மீதும் அவரது அரசுமீதும் வாரி இறைக்கும் திருப்பணியிலே ஈடுபட்டு வருகின்றனர்!
பாதிக்கப்படுவது கலைஞரோ - அரசோ அல்ல
இதனால் பாதிக்கப்படுவது முதல்வர் கலைஞரோ, அவரது அரசோ, உலகத் தமிழ் செம்மொழி மாநாடோ அல்ல. இந்த வசவுகள் அர்ச்சனைகள் இவையெல்லாம் அந்த வளமான வயல்களில் இடப்பட்ட உரங்கள்!
எதிர்நீச்சல் _ எப்போதும் ஈரோடு சென்றவர்களுக்கு நிலாச் சோறு. களைப்படைய மாட்டார்கள்.
பிலாக்கணங்கள் அவர்களை மேலும் உற்சாகம் கொள்ளவே செய்விக்கும்.
அண்ணா பெயரில் கட்சி
அண்ணா பெயரில் கட்சி! அவர்தம் மூல தத்துவங்கள் இன்று காற்றில் பறக்க விடப்படுகின்றன.
உண்மைத் தமிழர்கள் அடையாளம் காண்பர்!
ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கு ஓரணியில் ஒன்று திரண்டு குரல் கொடுக்க மனமற்றவர்களை, தமிழ் இன உணர்வினை போலிச் சாயமிட்டு வருபவர்களைத் தக்க வகையில் அடையாளம் காண உண்மைத் தமிழர்கள் தவறிட மாட்டார்!
செம்மொழி மாநாடு ஒரு நல்ல துவக்கம்
செம்மொழி மாநாடு ஒரு வகையில் ஈழத் தமிழர், உலகத் தமிழர் இனம் உரிமை பெற்றிட ஒரு நல்ல துவக்கம்.
தமிழர்களுக்கு இது ஓர் இனமானத் திருவிழா!
உலகத் தமிழர்களின் பிரச்சினைகள் எல்லாம் தீர்க்கப்பட்ட பிறகே இப்படி ஒரு மாநாடு நடைபெற வேண்டும் என்று திசை திருப்ப முயலுவோருக்கு, ஒன்று புரிய வேண்டும்.
உலகத் தமிழர்களின் உன்னத எழுச்சி
இத்தகைய மாநாட்டின் மூலம் உலகத் தமிழினத்தின் உன்னத எழுச்சியே அப்பிரச்சினைகள் தீருவதற்கு முன்னோடியாக அமையும் என்பது உறுதி!
எதைக் கண்டாலும் காமாலைக் கண்ணர்களுக்கு பழுதுதான் புலப்படும். வளர்ந்தோங்கிய விழுதுகளும், அதைவிட பலமான வேர்களும் ஒருபோதும் தெரியாது. அது அவரவர்கள் குற்றமே தவிர, மற்றவர்களது குற்றமல்ல.
பச்சைத் தமிழர் காமராசர் ஒன்று கேட்பார்: உன் வீட்டில் நடந்தால் கல்யாணம்; என் வீட்டில் நடந்தால் துக்கமா? என்று. அதுதான் இப்போது இவர்களுக்கு - _ ஜெயலலிதா, சோ போன்றவர்களுக்கு தாறுமாறான தரக்குறைவான வயிற்றெரிச்சல் _ அவைகளைக் காணும்போது.
காரிருளால் சூரியன்தான் மறைவதுண்டோ?
இதனால் மாநாட்டின் வெற்றியை எவரும் தடுத்திட முடியாது. காரிருளால் சூரியன்தான் மறைவதுண்டோ?
தலைவர்
திராவிடர் கழகம்
20.6.2010
சென்னை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்....

நான் வாய்விட்டு உரக்கப்பாடி மகிழ்ந்தது போல் நீங்களும் கேட்டு, பாடி மகிழ வேண்டாமா? இதோ புரட்சிக் கவிஞர் ஓங்கி ஒலித்த "சங்கே முழங்கு" பாடல் கலங்கரை விளக்கம் திரைப்படத்திலிருந்து.... KalangaraiVilakkam... சங்க நாதம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றூதூது சங்கே! பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்! வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்! எங்கள் வாழ்வும்...... -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owner - Dinam