முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அந்த நாள் என் நினைவில் இருக்கிறது...

அந்த நாள்
என் நினைவில் இருக்கிறது...

இன்றோ...
நாளையோ...
விடியும்
எங்கள் வாழ்வு என்று
வானோக்கியிருந்த
எங்களை
இருட்டு வந்து
சூழ்ந்த
அந்த நாள்
என் நினைவில் இருக்கிறது...

பதுங்குவது
பாய்வதற்கே என்று
போரின்
நாட்குறிப்புகளைப்
புரட்டிப் பார்த்து
நிம்மதி கொண்டிருந்த
எங்களுக்கு
நாளை குறிக்க
தாளே இல்லை என்ற
குறிப்பு வந்து சேர்ந்த
அந்த நாள்
என் நினைவில் இருக்கிறது...

'மக்களைக் காக்க
நாங்கள் இருந்த
நாள் போக...
எங்களைக் காக்க
மக்களா?
எங்கள் துவக்குகள்
மௌனிக்கும்'
என்ற குரல் கேட்ட
அந்த நாள்
என் நினைவில் இருக்கிறது...

"வெள்ளைக் கொடி
ஏந்தினாலும்
கொல்லுவோம்...
தமிழர்களை
கடைவாயில்
மெல்லுவோம்..."
-கொக்கரித்த கொடூரனின்
ரத்தம் வடிந்த
புன்னகை கண்ட
அந்த நாள்
என் நினைவில் இருக்கிறது...

தந்தையை..
தமையனை..
கணவனை...
களத்திற்குத் தந்து
தனயனை..
களத்திற்கனுப்பிய
தாய் போல்..
"எம் பிள்ளைகளை
நாட்டுக்கே கொடுத்திட்டனப்பா"
என்ற எம் தலைவனின்
பெருமிதம் கேட்ட
அந்த நாள்
என் நினைவில் இருக்கிறது...

கள நிலைக்குத்
திரையிட்டு
எம் அரிப்புக்கு
சொறிந்துவிட்ட
வாய்ப்பந்தல்
வீரர்களின்
பொய்கள் வெளித்தெரிந்த
அந்த நாள்
என் நினைவில் இருக்கிறது...

இதுதான் தருணம் என
இந்தியா இளிக்க...
வருவாயில் பங்குபோட
பாக் சிரிக்க...
போதுமா ஆயுதம் என
சீனம் கொடுக்க...
ஒன்றும் நடவாது போல்
உலகமே பார்க்க...
ஓர் இனமே
இல்லாதொழிந்த
அந்த நாள்
என் நினைவில் இருக்கிறது...

தாய்நாடென்ற
கனவும் கூட
கொடூரமானதென்று
ஊளையிட்டபடி
ஊடக நரிகள்
பிணங்களைப்
பார்த்து
வயிறு நிறைந்த
அந்த நாள்
என் நினைவில் இருக்கிறது...

வாய்க்காலில்
குருதியோடிய
அந்த நாள்...

பெருவெடிப்பு
நிகழ்ந்த
அந்த நாள்...

கனவுகள்
பாஸ்பரசில் கரைந்த
அந்த நாள்...

துரோகங்கள்
சூழ்ந்த...

நினைவுகள்
மரத்த...

மரணமே
ஓலமிட்ட...

இனமே
அழிந்துபட்ட...

அந்த நாள்...
அந்த நாள்...
அந்த நாள்...

என் நினைவில் இருக்கிறது...
இருக்கும்...

மண்ணில்
என் எலும்பு
கரையும் வரை...
என் ஊன்
கலக்கும் வரை...
எம்மினத்தின்
கடைசி உயிர்
இருக்கும் வரை...
அந்த நாள்
எம் நினைவில் இருக்கும்...

நந்திக்கடலில்
புலிக்கொடி
பறக்கும்
நாள்வரை...
அதைக் கடந்தும்
அந்த நாள்
எம் நினைவில் இருக்கும்...

கருத்துகள்

Joe இவ்வாறு கூறியுள்ளார்…
அருமையான கவிதை பிரின்ஸ்.

தலை குனிந்து அழுவதைத் தவிர வேறென்ன செய்வதென்று தெரியவில்லை.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Why is this son of a bitch attempting to write poetry?It is pathetic.
VijayaRaj J.P இவ்வாறு கூறியுள்ளார்…
அந்த நாளை யாரும் மறக்க முடியாது..

மறக்கவும் கூடாது.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
நாங்கள் மறக்க மாட்டோம் பிரின்ஸ் தயவு செய்து நீங்கள் மறந்துவிடுங்கள். இனிமேல் தமிழனுக்காக எங்கும் குரல் கொடுக்க வேண்டாம் முடிந்தால் உங்கள் பகுத்தறிவு கருத்துகளை மற்றும் பரப்பவும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்....

நான் வாய்விட்டு உரக்கப்பாடி மகிழ்ந்தது போல் நீங்களும் கேட்டு, பாடி மகிழ வேண்டாமா? இதோ புரட்சிக் கவிஞர் ஓங்கி ஒலித்த "சங்கே முழங்கு" பாடல் கலங்கரை விளக்கம் திரைப்படத்திலிருந்து.... KalangaraiVilakkam... சங்க நாதம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றூதூது சங்கே! பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்! வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்! எங்கள் வாழ்வும்...... -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owner - Dinam