அந்த நாள்
என் நினைவில் இருக்கிறது...
இன்றோ...
நாளையோ...
விடியும்
எங்கள் வாழ்வு என்று
வானோக்கியிருந்த
எங்களை
இருட்டு வந்து
சூழ்ந்த
அந்த நாள்
என் நினைவில் இருக்கிறது...
பதுங்குவது
பாய்வதற்கே என்று
போரின்
நாட்குறிப்புகளைப்
புரட்டிப் பார்த்து
நிம்மதி கொண்டிருந்த
எங்களுக்கு
நாளை குறிக்க
தாளே இல்லை என்ற
குறிப்பு வந்து சேர்ந்த
அந்த நாள்
என் நினைவில் இருக்கிறது...
'மக்களைக் காக்க
நாங்கள் இருந்த
நாள் போக...
எங்களைக் காக்க
மக்களா?
எங்கள் துவக்குகள்
மௌனிக்கும்'
என்ற குரல் கேட்ட
அந்த நாள்
என் நினைவில் இருக்கிறது...
"வெள்ளைக் கொடி
ஏந்தினாலும்
கொல்லுவோம்...
தமிழர்களை
கடைவாயில்
மெல்லுவோம்..."
-கொக்கரித்த கொடூரனின்
ரத்தம் வடிந்த
புன்னகை கண்ட
அந்த நாள்
என் நினைவில் இருக்கிறது...
தந்தையை..
தமையனை..
கணவனை...
களத்திற்குத் தந்து
தனயனை..
களத்திற்கனுப்பிய
தாய் போல்..
"எம் பிள்ளைகளை
நாட்டுக்கே கொடுத்திட்டனப்பா"
என்ற எம் தலைவனின்
பெருமிதம் கேட்ட
அந்த நாள்
என் நினைவில் இருக்கிறது...
கள நிலைக்குத்
திரையிட்டு
எம் அரிப்புக்கு
சொறிந்துவிட்ட
வாய்ப்பந்தல்
வீரர்களின்
பொய்கள் வெளித்தெரிந்த
அந்த நாள்
என் நினைவில் இருக்கிறது...
இதுதான் தருணம் என
இந்தியா இளிக்க...
வருவாயில் பங்குபோட
பாக் சிரிக்க...
போதுமா ஆயுதம் என
சீனம் கொடுக்க...
ஒன்றும் நடவாது போல்
உலகமே பார்க்க...
ஓர் இனமே
இல்லாதொழிந்த
அந்த நாள்
என் நினைவில் இருக்கிறது...
தாய்நாடென்ற
கனவும் கூட
கொடூரமானதென்று
ஊளையிட்டபடி
ஊடக நரிகள்
பிணங்களைப்
பார்த்து
வயிறு நிறைந்த
அந்த நாள்
என் நினைவில் இருக்கிறது...
வாய்க்காலில்
குருதியோடிய
அந்த நாள்...
பெருவெடிப்பு
நிகழ்ந்த
அந்த நாள்...
கனவுகள்
பாஸ்பரசில் கரைந்த
அந்த நாள்...
துரோகங்கள்
சூழ்ந்த...
நினைவுகள்
மரத்த...
மரணமே
ஓலமிட்ட...
இனமே
அழிந்துபட்ட...
அந்த நாள்...
அந்த நாள்...
அந்த நாள்...
என் நினைவில் இருக்கிறது...
இருக்கும்...
மண்ணில்
என் எலும்பு
கரையும் வரை...
என் ஊன்
கலக்கும் வரை...
எம்மினத்தின்
கடைசி உயிர்
இருக்கும் வரை...
அந்த நாள்
எம் நினைவில் இருக்கும்...
நந்திக்கடலில்
புலிக்கொடி
பறக்கும்
நாள்வரை...
அதைக் கடந்தும்
அந்த நாள்
எம் நினைவில் இருக்கும்...
என் நினைவில் இருக்கிறது...
இன்றோ...
நாளையோ...
விடியும்
எங்கள் வாழ்வு என்று
வானோக்கியிருந்த
எங்களை
இருட்டு வந்து
சூழ்ந்த
அந்த நாள்
என் நினைவில் இருக்கிறது...
பதுங்குவது
பாய்வதற்கே என்று
போரின்
நாட்குறிப்புகளைப்
புரட்டிப் பார்த்து
நிம்மதி கொண்டிருந்த
எங்களுக்கு
நாளை குறிக்க
தாளே இல்லை என்ற
குறிப்பு வந்து சேர்ந்த
அந்த நாள்
என் நினைவில் இருக்கிறது...
'மக்களைக் காக்க
நாங்கள் இருந்த
நாள் போக...
எங்களைக் காக்க
மக்களா?
எங்கள் துவக்குகள்
மௌனிக்கும்'
என்ற குரல் கேட்ட
அந்த நாள்
என் நினைவில் இருக்கிறது...
"வெள்ளைக் கொடி
ஏந்தினாலும்
கொல்லுவோம்...
தமிழர்களை
கடைவாயில்
மெல்லுவோம்..."
-கொக்கரித்த கொடூரனின்
ரத்தம் வடிந்த
புன்னகை கண்ட
அந்த நாள்
என் நினைவில் இருக்கிறது...
தந்தையை..
தமையனை..
கணவனை...
களத்திற்குத் தந்து
தனயனை..
களத்திற்கனுப்பிய
தாய் போல்..
"எம் பிள்ளைகளை
நாட்டுக்கே கொடுத்திட்டனப்பா"
என்ற எம் தலைவனின்
பெருமிதம் கேட்ட
அந்த நாள்
என் நினைவில் இருக்கிறது...
கள நிலைக்குத்
திரையிட்டு
எம் அரிப்புக்கு
சொறிந்துவிட்ட
வாய்ப்பந்தல்
வீரர்களின்
பொய்கள் வெளித்தெரிந்த
அந்த நாள்
என் நினைவில் இருக்கிறது...
இதுதான் தருணம் என
இந்தியா இளிக்க...
வருவாயில் பங்குபோட
பாக் சிரிக்க...
போதுமா ஆயுதம் என
சீனம் கொடுக்க...
ஒன்றும் நடவாது போல்
உலகமே பார்க்க...
ஓர் இனமே
இல்லாதொழிந்த
அந்த நாள்
என் நினைவில் இருக்கிறது...
தாய்நாடென்ற
கனவும் கூட
கொடூரமானதென்று
ஊளையிட்டபடி
ஊடக நரிகள்
பிணங்களைப்
பார்த்து
வயிறு நிறைந்த
அந்த நாள்
என் நினைவில் இருக்கிறது...
வாய்க்காலில்
குருதியோடிய
அந்த நாள்...
பெருவெடிப்பு
நிகழ்ந்த
அந்த நாள்...
கனவுகள்
பாஸ்பரசில் கரைந்த
அந்த நாள்...
துரோகங்கள்
சூழ்ந்த...
நினைவுகள்
மரத்த...
மரணமே
ஓலமிட்ட...
இனமே
அழிந்துபட்ட...
அந்த நாள்...
அந்த நாள்...
அந்த நாள்...
என் நினைவில் இருக்கிறது...
இருக்கும்...
மண்ணில்
என் எலும்பு
கரையும் வரை...
என் ஊன்
கலக்கும் வரை...
எம்மினத்தின்
கடைசி உயிர்
இருக்கும் வரை...
அந்த நாள்
எம் நினைவில் இருக்கும்...
நந்திக்கடலில்
புலிக்கொடி
பறக்கும்
நாள்வரை...
அதைக் கடந்தும்
அந்த நாள்
எம் நினைவில் இருக்கும்...
கருத்துகள்
தலை குனிந்து அழுவதைத் தவிர வேறென்ன செய்வதென்று தெரியவில்லை.
மறக்கவும் கூடாது.