முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ராமனுக்கு வராதா ஒன்னுக்கு?

தென்னவன் கலைக்கூடம் சார்பில் தயாரிக்கப்படும் 'வணக்கம்மா' என்ற திரைப்படத்தின் தொடக்க விழா நேற்று சென்னை ஏ.வி.எம். அரங்கில் நடைபெறவிருந்தது. தொடக்க விழாவுக்கான சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டன. இந்நிலையில் சுவரொட்டி ஒட்டியவர்களைக் கைது செய்தது காவல் துறை. காரணம் இந்துமுன்னணி உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருப்பதாக காரணம் கூறப்பட்டது.
பிறகு தொடக்கவிழாவின் போதும் இந்து முன்னணி உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் தங்கள் காலித் தனத்தை அரங்கேற்றி உள்ளன.

என்னடா காரணம்ன்னா...."ராமனை இழிவுபடுத்திவிட்டார்கள்! எங்கள் மனம் புண்பட்டுவிட்டது" என்று தேய்ந்து போன நொந்து போன பழைய ரெக்கார்டை ஓட்டி இருக்கிறார்கள்.
சரி.. அப்படியென்ன இழிவுபடுத்திவிட்டார்கள்ள்ள்ள்-னு கூப்பாடு போடுறீங்கன்னு கேட்டா...
"ராமனும் அனுமானும் ஒன்னுக்கு போவது போல சுவரொட்டி ஒட்டப்பட்டிருக்கிறது. அது எங்கள் மனதைப் புண்படுத்திவிட்டது." அப்படின்னு நம்ம ராம கோமாளி சொல்றாரு.

புண்பட்டதெல்லாம் அப்புறம் இருக்கட்டும்... இப்படியே புண்பட்டுப் போச்சு... புண்பட்டுப் போச்சுன்னு இவங்க சொன்ன கணக்குப் படி பார்த்தா இதயமே இருக்க முடியாது. வெறும் பிளாஸ்திரிதான் சுத்தியிருக்கணும். (சிங்களப்படை தாக்குதலில் இரந்த விடுதலைப்புலிகள்-னு அவனுங்க சொல்ற கணக்குப் படி பார்த்தா இலங்கையில ஆளே இருக்க முடியாதுன்னு சொல்வாங்க அதுமாதிரி)

சரி, அந்த சுவரொட்டியில என்ன இருக்குன்னு நீங்களே பாருங்க...
"கதைப்படி பல வேடங்களில் சென்று திருடக்கூடிய திருடர்களாக சரவணனும், பிரியனும் நடிக்கிறார்கள். அப்படி ஒருமுறை கடவுள் வேடமிட்டு திருடச் செல்கிறார்கள். அப்போது வருவது போல் ஒரு காட்சி இது. அவ்வளவுதான்" அப்படிங்குறாரு இயக்குநர் அரிராமன்.

சரி, இதில மனசு புண்படுத்துன்னா என்ன அர்த்தம்... நான் செய்யாத ஒரு விசயத்தை செஞ்சதா சொன்னா தப்பு, மனசு புண்படுதுன்னு சொல்லலாம்...

அனுமனும், ராமனனும் ஒன்னுக்கு போற மாதிரி காட்டியதில் என்ன தப்பு? சாலையில் அனுமான் உள்ளிட்ட கடவுள் படங்கள், இன்னும் சீதா, லட்சுமணன் சகிதமாக ராமர் படங்களையெல்லாம் வரைந்து பிச்சை எடுக்கிறார்களே அப்பவெல்லாம் உங்க மனம் புண்படலையா? தொடர் வண்டியில ராமன் வேசம் போட்டு பிச்சை எடுக்கிறாங்க? சாலையில கையில வில்லு, ஆர்மோனியப் பெட்டியோட பிச்சை எடுக்கிறாங்க.... அவங்கள்லாம் ஒன்னுக்கு போகும்போது என்ன வேடத்தை கலைச்சுட்டா போறாங்க...
அதெல்லாம் விடுங்க, கோவில்ல பெருசு பெருசா உண்டியல் வச்சு நீங்க எடுக்காத பிச்சையா?
இதில கேவலப்படாத ராமன், அந்தப் போஸ்டர்லதான் கேவலப் படுவாரா?

ஏன்? ராமனுக்கு ஒன்னுக்கு வராதா?
சும்மா, கடவுளுக்கு நரை, திரை, மூப்பு இல்லைன்னெல்லாம் பேசக்கூடாது.

பிறப்பு, இறப்பு இல்லாத கடவுள்னு சொல்லிக்கிட்டே ராமன் பிறந்தநாளுன்னு ராம நவமி கொண்டாடுறீங்க? ராமன் பிறந்த இடத்தில கோயில்கட்டணும்னு சொல்றீங்க?

ராமன் நதியில விழுந்து தற்கொலை பண்ணி செத்தான்னு சொல்றீங்க?

அவன் சரக்கு சாப்பிட்டான்(சோம பானம், சுரா பானம்), சல்லாபிச்சான், சண்டை போட்டான்னு எல்லாம் கதை இருக்கு.. சரக்கு சாப்பிட்டவனுக்கு ஒன்னுக்கு வராதா? இல்லை கக்கா போகாதா? லவ, குசா குழந்தைகள் அவனுக்கு தான் பிறந்ததுன்னா... அது மட்டும் வெளிய வரும்... சிறுநீர் வராதா?

கேட்க கேட்க அசிங்கம் இல்லையா? கேட்டா மனம் புண்படுமா?

போஸ்டர் ஒட்டி பிரபலப் படுத்துனது தான் தப்புன்னா... முதல்ல நீங்க சண்டை போட வேண்டியது 'சோ' பார்ப்பான்கிட்ட...

ஏன்னா ஒரு இடத்தில செருப்படிபட்ட ராமனை தமிழ்நாடு முழுக்க போஸ்டர் அடிச்சு ஒட்டி விளம்பரப்படுத்துனது அந்தப் பயதான்..
ஒரு கை பாக்குறது 'சோ'வை!

கருத்துகள்

Sen22 இவ்வாறு கூறியுள்ளார்…
//அதெல்லாம் விடுங்க, கோவில்ல பெருசு பெருசா உண்டியல் வச்சு நீங்க எடுக்காத பிச்சையா?
இதில கேவலப்படாத ராமன், அந்தப் போஸ்டர்லதான் கேவலப் படுவாரா? ///


சும்மா நச்சுன்னு இருந்த்து Boss....

Senthil
Bangalore
லக்கிலுக் இவ்வாறு கூறியுள்ளார்…
சூப்பர்!!!
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
இதுல பெரிய காமெடி, யாராச்சும் நீல கலர் பொடிய உடம்பெல்லாம் பூசிகிட்டு, தலைல கிரீடம் வெச்சுகிட்டு, ஒரு வில் அம்பு வைத்திருந்தா அவங்க எல்லாம் ராமனா? இது ராமன் அனுமாரு நு எதை வெச்சு முடிவு செய்றீங்க இந்து முன்னனி மக்களே? முதல்ல ராமர் எப்படி இருப்பாருனு ஒரு போட்டோ காமிங்க.. அப்புறம் பேசலாம்..

இதுல் இட்லி வடை வகையை சார்ந்த லூசு பார்ட்டிகள் பெரியார் வேசம் போட்டு ஒன்னுக்கு போற மாதிரி காமிச்சா சும்மா இருப்பானுங்களா நு ஒரு கேள்வி...
தாடி வெச்சவன் எல்லாம் பெரியார் இல்லப்பா.. பெரியாருக்குனு ஒரு உருவம் இருக்கு. இப்படித்தான் இருப்பார்னு சொல்ல முடியும்.. அப்படி காமிங்க ராமனுக்கு ஒரு உருவம்..

பெரியார் வேஷம் கட்றவனுக்கும் , பெரியாருக்கும் வித்தியாசம் தெரிந்தவங்க நாங்க.. உங்கள மாதிரி வேஷம் கட்னவங்க எல்லாம் உன்மைனு மடத்தனமா யோசிக்க மாட்டோம்



ராமர்க்கு மட்டுமில்லை, லக்ஷ்மி , முருகர், பிள்ளையார், ஏசு என்ற எந்த கடவுளூக்கும் ஒரே மாதிரியான உருவம் இல்லை.. அவர் அவர் வரையரது தான் அந்த உருவம்..
ஒரு படத்துல ரஜினி கூட சிவன் வேசம் போட்டு அலம்பல் பன்னுவாரு, பி கே எஸ் ல கமல் சிவன் வேஷம் போட்டு அலம்பல் பன்னுவாரு.. அப்போ எங்கே போச்சு இந்து முன்னனி??

சிவனுக்கு ஒரு நியாயம், ராமனுக்கு ஒரு நியாயமா?
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
பெரியார் ஒன்னுக்கு அடிப்பதைப் போலவும்,வேட்டியைத் தூக்கிவிட்டு கக்கூசில் அமர்ந்திருப்பது போலவும் பொது இடத்தில் சுவரொட்டி வைத்தாலும்
இதே மன நிலையில் இருப்பீர்களா?
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
பெரியார் ஒன்னுக்கு அடிப்பதைப் போன்ற படத்துக்காக அவ்வளவு சிரமப்படவெல்லாம் வேண்டாம். மூத்திரம் வெளியேறும் போதெல்லாம் 'அம்மா அம்மா' என்று அலறித் துடித்தபிறகும், தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு தன் மக்களுக்காக பிரச்சாரம், பயணம் என்று சுற்றிய பெரியாரையும் அவரது மூத்திரச் சட்டியையும் தூக்கிச் சுமந்தவர்கள் தமிழர்கள்!

அதனால் அந்தப் படத்தை தாராளமாக தமிழகமெங்கும் போஸ்டர் அடித்து ஒட்டுங்கள்.. அப்போதுதான் இன்றைய தமிழனுக்கு பெரியாரின் பெருங்குணமும் அவரது கடும் உழைப்பும் விளங்கும்! அனானியின் இந்த முயற்சிக்கு நாம் துணை நிற்போம்! அதற்காக அந்த புகைப்படங்களை அடுத்த பதிவாக இடுவதில் நாம் பெருமை கொள்கிறோம்.
வெட்டிப்பயல் இவ்வாறு கூறியுள்ளார்…
// PRINCENRSAMA said...

பெரியார் ஒன்னுக்கு அடிப்பதைப் போன்ற படத்துக்காக அவ்வளவு சிரமப்படவெல்லாம் வேண்டாம். மூத்திரம் வெளியேறும் போதெல்லாம் 'அம்மா அம்மா' என்று அலறித் துடித்தபிறகும், தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு தன் மக்களுக்காக பிரச்சாரம், பயணம் என்று சுற்றிய பெரியாரையும் அவரது மூத்திரச் சட்டியையும் தூக்கிச் சுமந்தவர்கள் தமிழர்கள்!

அதனால் அந்தப் படத்தை தாராளமாக தமிழகமெங்கும் போஸ்டர் அடித்து ஒட்டுங்கள்.. அப்போதுதான் இன்றைய தமிழனுக்கு பெரியாரின் பெருங்குணமும் அவரது கடும் உழைப்பும் விளங்கும்! அனானியின் இந்த முயற்சிக்கு நாம் துணை நிற்போம்! அதற்காக அந்த புகைப்படங்களை அடுத்த பதிவாக இடுவதில் நாம் பெருமை கொள்கிறோம்.//

Excellent Reply...
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
இருந்தாலும்
இது
two much
three much ங்க!
puduvaisiva இவ்வாறு கூறியுள்ளார்…
{சாலையில கையில வில்லு, ஆர்மோனியப் பெட்டியோட பிச்சை எடுக்கிறாங்க.... அவங்கள்லாம் ஒன்னுக்கு போகும்போது என்ன வேடத்தை கலைச்சுட்டா போறாங்க...)

it is a Excellent line..
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
சிறப்பான பதிவு தோழா..அதிலும் அந்த அனானிக்கு நீங்கள் கொடுத்த பதில் நெத்தியடி...
- மயில்வண்ணன்..
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
பெரியாரை தொடர்பவர்களிடம் சும்மாங்கட்டியும் உதார் விட்டா இப்படிதான்....
பெயரில்லாதவருக்கு அருமையான பதில்.....
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
ஆனா நம்ப ஊர்ல தாங்க காலக்கொடுமை. கருத்து சுதந்திரம் ரொம்ப தாராளம். டாவின்சி கோட் படம் எடுத்தது நடிச்சது தயாரிச்சது எல்லாமே கிறிஸ்துவர்கள் வாழும் நாட்டில். அவங்க அங்கேயே வெளியிட முடியுது. ஆனா இங்க முடியாது....
சில்லற பசங்க....

பதிவுகள் சூடவும், காரமாவும் இருக்கு தோழரே தொடரட்டும் உங்கள் சேவை.

மற்றவர் கிடக்கிறார்கள், வெங்காயம் :)
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Thiruda poravan kadavul vesam pottu poran ok. Aaana kadavul vesamnu sonna adhu raman hanuma vesam mattumdhan.. yenna evanum kekka mattanla.. onnukku pona enna oth.....u ona enna. idhe jesus vesathulayo nabi vesathulayo thiruda pora maadhiri oru kaatchiyaavadhu vaikka mudiyuma ivanaala... Apparam avan vaalkaila onnukke poga mudiyadhu. Nammadhana ilicha vaayanuga. Thiruttu nathiga naaigale.
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
அட... அனானி, நம்ம ஊரில யேசு வேசம் போட்டுக்கிட்டு பிச்சை எடுக்கிறவனைக் காட்டு. அல்லாவுக்கு உருவம் இல்லைங்குறாங்க - நபி இவர் தான்னு படத்தையே காட்ட மாட்றாங்க... வேசம் போட்டு பிச்சை எடுக்குறவன் இந்துச் சாமி வேசம் தானே போடுறான். போய் அங்க புடுங்கேன்.... வேசத்தை!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்....

நான் வாய்விட்டு உரக்கப்பாடி மகிழ்ந்தது போல் நீங்களும் கேட்டு, பாடி மகிழ வேண்டாமா? இதோ புரட்சிக் கவிஞர் ஓங்கி ஒலித்த "சங்கே முழங்கு" பாடல் கலங்கரை விளக்கம் திரைப்படத்திலிருந்து.... KalangaraiVilakkam... சங்க நாதம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றூதூது சங்கே! பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்! வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்! எங்கள் வாழ்வும்...... -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owner - Dinam