Tuesday, April 22, 2008

தமிழர்கள் தூக்கிச் சுமந்த மூத்திரச் சட்டி!

ராமன், அனுமன் வேடங்களில் இருப்போர் ஒன்னுக்கு அடிப்பதைப் போன்ற திரைப்பட சுவரொட்டி பற்றிய எமது பதிவுக்கு பின்னூட்டமிட வந்த அனானி ஒருவர் பெரியார் மூத்திரம் இருப்பதைப் போன்ற படத்தை சுவரொட்டியாக அடித்து ஒட்ட விரும்பியிருக்கிறார். அவருக்கு உதவியாக இருக்கட்டுமே என்று...
___________________________________________________________________

பெரியார் ஒன்னுக்கு அடிப்பதைப் போன்ற படத்துக்காக அவ்வளவு சிரமப்படவெல்லாம் வேண்டாம். மூத்திரம் வெளியேறும் போதெல்லாம் 'அம்மா அம்மா' என்று அலறித் துடித்தபிறகும், தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு தன் மக்களுக்காக பிரச்சாரம், பயணம் என்று சுற்றிய பெரியாரையும் அவரது மூத்திரச் சட்டியையும் தூக்கிச் சுமந்தவர்கள் தமிழர்கள்!அதனால் அந்தப் படத்தை தாராளமாக தமிழகமெங்கும் போஸ்டர் அடித்து ஒட்டுங்கள்.. அப்போதுதான் இன்றைய தமிழனுக்கு பெரியாரின் பெருங்குணமும் அவரது கடும் உழைப்பும் விளங்கும்! அனானியின் இந்த முயற்சிக்கு நாம் துணை நிற்போம்! அதற்காக அந்த புகைப்படங்களை பதிவாக இடுவதில் நாம் பெருமை கொள்கிறோம்.

ஒவ்வொரு சொட்டாக மூத்திரம் இறங்கும் போதெல்லாம் வலியால் துடித்து
முகம் சிவந்தபடி தன் பயணத்தைத் தொடர்ந்த ஒப்பற்ற சமுதாயப் பணியாளர்
தங்களுக்காக உழைத்த தலைவனை தூக்கிச் சுமந்த தமிழினம்... (பெரியாரின் மூத்திரச் சட்டியைச் சுமப்பவர் புலவர் இமயவரம்பன். இடம்: காரைக்குடி என்.ஆர்.சாமி கடை)

பெரியாரின் ஓய்வுக்குப் பிறகு ஓய்வு கொண்ட மூத்திரச் சட்டி...

தலைப்புக்குப் பின் குறிப்பு:
இந்தப்பதிவின் தலைப்பு ஏற்கனவே நம் பதிவர் ஒருவர் வைத்திருந்தது தான்.. இந்தப் பதிவுக்கு அதை விட சரியான தலைப்பு கிடைக்காது என்பதால் அதையே பயன்படுத்திக் கொள்கிறோம்

14 மறுமொழிகள்:

said...

http://ini2006.blogspot.com/2007/10/blog-post.html

அந்த பதிவை பிரசூரித்தது நான் தான் நண்பரே! மேலே இருக்கிறது.. அதன் சுட்டி..!

said...

வாவ். மிக சரியான நேரத்தில், முன்பு எப்போதையும் விட மிக அதிக இழிவையும் சூத்திர பட்டத்தையும் பெற்று 'இந்து' வாக அறியாமையில் வாழ்ந்து கொண்டிருக்கும்் திராவிட மக்களுக்கு பெரியாரின் கடின உழைப்பை உணர வைக்கும் அருமையான பதிவு ..

Anonymous said...

பகுத்தறிவு பகலவன்,சுயமரியாதைச் சுடர்,இட ஒதுக்கீட்டும கொள்கையின் பிறப்பிடம்,தாழ்த்தபட்ட,பிற்படுத்தபட்ட மக்களின் இன்றய நிலைக்கு(சுதந்திர உணர்வுடன்)வித்திட்ட தூயவர்,நாட்டின் சுதந்திரதிற்காக அனைத்து சொந்த சொத்துக்களையும் இழந்த தியாகி,கடைசிவரை பதவிக்காக தன்மானத்தை இழக்காத சிந்தனை சிற்பி,தமிழ் எழுத்து சீர்திருத்த பிதாமகர்

இப்படி சொல்லி கொண்டே போகாலாம்.
இறுதி மூச்சு வரை உடல் உபாதைகளை தாங்கி, அடிமை பட்டு கிடந்த தமிழ் சமுதாயத்தை மேன்மை படுத்தினார் என்பதற்கு உங்கள் பதிவு அவர்களின் கண்களை திறக்கட்டும்.இனியாவது தந்தை பெரியாரின் தியாக உணர்வை உணர்ந்து எதிர் வாதம் செய்வது என்றால் வாழும் தலைவர்களை பற்றி அவர்கள் எழுதினால் நல்லது.

said...

பதிவுக்கு நன்றி. இந்தப் பதிவுக்கு வந்து பின்னூட்டம் போடாமல் பொந்துக்குள் ஒளிந்துக் கொண்டதா அந்த சந்துக்கூட்டம்?

said...

கடைசிப் படத்தை தமிழர்கள் தங்கள் வீட்டு பூஜை அறையில் கூட வைத்து பூஜிக்கலாம், மற்ற படங்களைவிட இந்த படம் பூஜிக்கத்தக்கது.


அருமையான பதிவு !

said...

poosanaikku ivaRRai vaippathil enakku udan paadillai.. aayinum. htamizarkaLin yoosanaikku vaippathey emathu nookkam.
nanri thozarkaLe!

said...

அருமை !! அருமை ! அருமை!!!

எங்கே அந்த அனானி, ஓடி ஒளிந்துக்கொண்டாயா?? வா சீக்கிரம், பல பிரிதிகள் எடுத்து தமிழகம் முழுதும் ஒட்டு.. பணமில்லையா?? உதவி வேணுமா? கேள் செய்கிறோம்.
இதோ உண்மையான முகம் கொண்ட எங்கள் அய்யாவின் படங்கள்...

உங்களை போல வேசம் போட்டவன் எல்லாம் ராமன் , அனுமார் என்று சொல்லவில்லை நாங்கள்..

அனானி, புத்தி வந்து உன் வக்கிர பேச்சுக்கு மன்னிப்பு கேள். கேட்பாயா?

Anonymous said...

can i dowload the pictures. only if u permit.
thanks

said...

தாராளமாய் பதிவிறக்கிக் கொள்ளுங்கள்! அய்யா அனைவருக்கும் சொந்தமானவர்!

Anonymous said...

Thanks again.

said...

அன்புள்ள பிரின்ச் அவர்களுக்கு,

பெரியார் திரைப்படம் ஆங்கிலம்/ பிரெஞ்சு மொழி துணைத் தலைப்புடன் கிடைக்குமா?
அன்புடன்

தேரியூரான் .

said...

nalla seruppadi prinsu. iniyakinum thirunthuma antha kuttam?
who s that anony?

said...

பெரியார் என்ன இந்து மதத்தை எதிர்த்தார அல்லது ஆதறித்தார என்பதே இப்ப மறந்துபோச்சு, அந்த அளவுக்கு இங்க மத வெறி சாதி வெறி புடிச்சு ஆடுது,ஆனா இவனுங்க இன்னும் கடவுள் இல்லை கருமாதியில்லையில்னு சொல்லிட்டு ஏல்லா கோவிலுக்கும் போரானுங்க கேட்டா பகுத்தறிவுன்னு பசப்புரானுவ. அட இந்த பார்பனனை தொறத்த பெரியார் போட்ட பகுத்தறிவு வேசத்தை இந்த சூத்திறனுங்க இன்னும் புடிச்சிகினு இருக்கானுங்க‌.

அதான் இங்க‌ இந்து இல்லையே பிற‌கு என்ன‌ ம‌சுருக்கு இந்த‌ ம‌த‌த்துல‌ இருக்கீங்க‌, உங்க‌ பொண்டாட்டிக‌ ம‌ட்டும் ஒரு ரூபா அக‌ல‌த்துகு பொட்டு வ‌சிப்பாங்க‌ கேட்ட‌ அது ப‌குத்த‌றிவு, டேய் எத்த‌னை கால‌த்துக்குடா ஏமாத்துவீங்க‌ உங்க‌ ட‌ங்குவாராத்தான் கிழிச்சிட்டாங்க‌ளே.

said...

தோழர் தேரியூரான் அவர்களுக்கு, பெரியார் திரைப்படத்தின் டி.வி.டி. ஆங்இல துணைத் தலைப்புகளுடன் பெரியார் திடலில் விற்பனைக்குக் கிடக்கிறது. வாங்கிப் பயன் பெறுக.. பரப்புக... நன்றி!

Related Posts with Thumbnails