Tuesday, December 04, 2007

ஆறடிக்கே இந்தப்பாடுன்னா...?

தமிழர் தலைவர் 75-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா மிகச்சிறப்பாக வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. அய்யா வீரமணி அவர்களுக்கு பிறந்தநாள் பரிசாக '10000' விடுதலை சந்தாக்கள் வழங்கப்பட்டன.

அவர் கேட்ட இரண்டு வரங்களை உடனடியாக வழங்கினார் முதல்வர் கலைஞர்! 95 அடி உயர பெரியார் சிலை அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.. என்று கோரினார் ஆசிரியர்! தந்தேன் வரம் என்றார் கலைஞர்!

அப்போது கலைஞர் சொன்னதுதான் பலபேரின் வயிற்றில் புளியைக்கரைத்திருக்கிறது. ஹிந்து பார்ப்பனர்கள் கூட, "என்ன வந்தாலும், செய்து முடிப்பேன்" என்று பேசியதைத்தான் முக்கியப்படுத்தியிருந்தன... சந்தோசம்தானே! இதைத்தானே எதிர்பார்க்கிறோம் கலைஞரிடம் இருந்து...!

சென்னையை சுற்றி சிலை அமைக்க ஏற்பாடு செய்வோம் எனச் சொன்ன கலைஞர் அடுத்து என்ன சொன்னார் தெரியுமா?

"ஆறடி சிலைக்கே (இன எதிரிகள்) இந்தப் பாடுபடுகிறார்கள் என்றால் 95 அடியில் சிலை வைத்தால் இன்னும் அதன் வீச்சு எப்படியிருக்கும்?" என்று கலைஞர் மகிழ அரங்கமே கரவொலியில் தங்கள் ஆதரவை தெரிவித்தது!

எப்படியிருக்கும்...... அசத்தலா இருக்கும்....!
கலைஞர் பேச்சைப் பார்க்க போங்க ... இங்க!

1 மறுமொழிகள்:

said...

வச்சாரு பாரு தலைவர் பன்ச்!
-------------------------
கவன ஈர்ப்புத் தீர்மானம் என்க!

Related Posts with Thumbnails