முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

துரோகத்தின் நூற்றாண்டும், தியாகத்தின் பொன்விழாவும்!

செப்டம்பர் 11: இந்த நாள் பலருக்கு பயங்கரவாதிகளால் அமெரிக்க இரட்டைக் கோபுரம் இடிக்கப்பட்ட நாளாக நினைவிருக்கும்.

இன்னும் சிலருக்கு அமெரிக்கப் பயங்கரவாதத்தால் சிலி அதிபர் அலண்டே படுகொலை செய்யப்பட்டது நினைவு வரும்.
ஆனால் நம் நாட்டில், அதுவும் தமிழகத்தில் நடந்த ஒரு படுகொலையும், அதனைத் தொடர்ந்த கலவரமும் நம்மில் பலருக்கு தெரிந்திருக்குமா என்று சொல்லமுடியவில்லை.

தனக்கு நிகராக எதிரில் அமர்ந்து, தன்னால் தாழ்த்தப்பட்டவர்களாக கருதப்படுவோரைத் தலைமை தாங்கி நடத்துகிறார் என்பதற்காக ஒருவர் கொல்லப் படக் கூடுமா?

கூடும் என்கிறது தமிழக வரலாறு...

1957 பொதுத் தேர்தாலையும், இடைத்தேர்தலையும் ஒட்டி, முதுகுளத்தூர் பகுதிகளில் எழுந்த கொந்தளிப்புகளை அடக்க மாவட்ட ஆட்சித் தலைவர் கூட்டிய அமைதிக்கூட்டத்தில் தனக்கு நிகராக எதிரில் அமர்ந்து, தன்னால் தாழ்த்தப்பட்டவர்களாக கருதப்படுவோரைத் தலைமை தாங்கி நடத்துகிறார் என்பதற்காக கொல்லப்பட்டவர்தான்...

தியாகி இம்மானுவேல் சேகரன்

ஊர் ஊராகச் சென்று தீண்டாமை ஒழிப்புப் பிரச்சாரப் பணியில் ஈடுபட்டு தன் 34-ஆவது வயதிலேயே தான் ஏற்றுக் கொண்ட கொள்கைக்காகவே தியாக மரணத்தைச் சந்தித்த பெருமை இவருக்கு உண்டு.

'நீதானடா தேவருடன் சவால்விட்டுப் பேசியவன்' எனக்கத்திக் கொண்டே இம்மானுவேல்சேகரன் மீது தன் கொலை வெறியைத் தீர்த்துக்கொண்ட அந்தக் கூட்டம் யாரால் தூண்டப்பட்டது? அதன் தொடர்ந்து நடந்த கலவரங்களுக்கு காரணம் யார்?

தன்னைப் பின்பற்றிய மக்களை முழுக்க முழுக்க தனது சுயலாபத்துக்கு மட்டும் பயன்படுத்திக் கொண்டு, அவர்களின் முன்னேற்றத்துக்கு எதிராகவே மாற்றியது யார்?

இன்னமும் தென் மாவட்டங்களில் தொடரும் ஜாதிக் கலவரங்களுக்கு அடையாளமாக நிற்பது யார்?

'சாணான் கட்டிய பள்ளியில் படிக்கப் போகாதீங்கடா' என்று காமராஜர் கட்டிய தமிழக அரசுப்பள்ளிகளில் படிப்பதை நிறுத்தச் சொல்லி, தன் இனத்துக்கே, தன்னை நம்பிய மக்களுக்கே துரோகம் செய்தது யார்?

வரலாற்றின் பக்கங்களில் தேடிப் பாருங்கள்..

இன்று புனித உருவம் கட்டப்பட்டு, தேசீயத் தலைவர் என்று புகழப்படும் ஒரு குறுகிய மனம் படைத்தவரை நோக்கி வரலாறு அழைத்துச் செல்லும்.

அவர் முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினரான பசும்பொன் திரு. உ.முத்துராமலிங்கம் ஆவார்.

விடுதலைப் போராட்ட வீரர், தீரர், போஸின் படைக்கு ஆள் அனுப்பியவர், ஆங்கில அரசால் வாய்ப்பூட்டுச் சட்டம் போடப்பட்டவர், தேசியமும் தெய்வீகமும் இரு கண்களென்றவர், மதுரை மீனாட்சிஅம்மன் கோவிலுக்குள் தாழ்த்தப்பட்டவர்களை அழைத்துச் செல்ல வைத்தியநாத அய்யருக்கு பாதுகாப்பாக ஆள் அனுப்பியவர்...... இப்படியெல்லாம் எனக்கு பாடநூல்கள் வாயிலாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டார் உ.மு.

சாந்தமான முகத்தோடும், நெற்றி நிரம்பிய பட்டையோடும், ஓவியர்களால் வரையப்பட்ட தலையின் பின்புறத்தில் சுற்றும் ஒளிவட்டங்களோடும் சில முறை... சிங்கத்தின் மேல் கை வைத்தபடி, வெறிக்கும் கண்களோடு வரையப்பட்ட ஓவியம் சிலமுறை என நான் பார்த்த தேவர் இருக்க... (அவரது பெயர் எனக்கு சிறு வயதிலிருந்தே அறிமுகம். ஒருங்கிணைந்த முகவை மாவட்டத்திலிருந்து, சிவகங்கையைத் தலைமையிடமாகக் கொண்டு எங்கள் மாவட்டம் எம்.ஜி.ஆர். அரசால் பிரிக்கப்பட்டபோது இடப்பட்ட பெயர் பசும்பொன் முத்துராமலிங்கனார் மாவட்டம். பின்னாளில் கலைஞரால் பசும்பொன் முத்துராமலிங்கம் தேவர் திருமகனார் மாவட்டம் என நீட்டி முழக்கப்பட்டது. எனது மாவட்டப் பெயர் என்ற வகையில் நான் அடிக்கடி புழங்கிய பெயர்.)

அவர் ஜாதி வெறியர் என்பதும், ஜாதி வெறியர்களின் பதாகை என்பதும் என்னுடைய புரிதலாக இருந்தது.

ஆனால் திரு.முத்துராமலிங்கம்(தேவர்) அவர்களின் உண்மை சொரூபத்தை எனக்குக் காட்டியது 'தினகரன்' நாளிதழின் நிறுவனரும், பன்னூல் ஆசிரியருமான திரு.தினகரன் அவர்கள் எழுதிய 'முதுகுளத்தூர் கலவரம்' என்னும் நூல். சில மாதங்களுக்கு முன்பு நான் படித்த அந்தப் புத்தகம்தான் தேவரின் முகத்திரையைக் கிழித்து, அவரது சுயநலப் போக்கிற்கு எவ்வாறு அந்த இனமே ஆளாக்கப்பட்டது என்பதைத் தெளிவுறுத்தியது.


"முதுகுளத்தூர் கலவரத்தின் போது எத்தனை உயிர்கள் இருபுறமும் பலியாகி இருக்கின்றன? குடிசைகள் எரிக்கப்பட்டிருக்கின்றன? தேவரைக் கைது செய்து சிறையிலடைக்கும் வரை தொடர்ந்த கலவரம், முத்துராமலிங்கத் தேவர் கைதைத் தொடர்ந்து அடங்கிப் போனதேன்?" என்று கேள்வி எழுப்புகிறது விடுதலை நாளேடு.

கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து ஒரு தலைவர், கண்ணீர்த்துளி(தி.மு.க)த் தலைவர் ஒருவர், ஒரு காங்கிரஸ் கண்ணீர்த்துளி தலைவர் (அநேகமாக ம.போ.சி)என மூவர் தலைமையில் சமாதானக் குழு மதுரைக்குச் சென்று தேவரின் கைதைக் குறைகூறுவதை 'எலியும், பூனையும், நாயும் ஒரே தட்டில் சாப்பிடுவது போன்ற சர்க்கஸ். சாதி வெறியர்களுக்கு ஆதரவாக ஊர்வலமாம், கடையடைப்பாம், நிதி திரட்டாம், நீதி மன்ற வழக்காம்' என்று எள்ளி நகையாடுகிறது 'விடுதலை' நாளிதழ், விசாரணையின் தீர்ப்பு என்ற தலைப்பில்.(12.10.1957)

ஓட்டுக்காக என்று எல்லோரும் பயந்தபோது, கொஞ்சமும் கவலைப்படாமல் தந்தை பெரியார் தான் அன்றைய முதல்வர் காமராஜருக்கு ஆதரவாக இருந்தார். தைரியமாக களத்தில் இறங்கி, கலவரத்தை அடக்கிக் கட்டுக்குள் கொண்டுவர போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டையும் தேவர் கைதையும் முழுமையாக ஆதரித்தார். கீழத்தூவல் கலவரத்தின் போது போலீஸ் துப்பாக்கிப் பிரயோகம் செய்யாவிட்டால் இருபுறமும் நூற்றுக்கணக்கான உயிர்கள் அழிந்திருக்கும். ஆதிதிராவிடர்களின் குடிசைகள் எரிந்திருக்கும் என கவலை கொள்கிறார் பெரியார்.

"திரு. தேவர் அவர்களுக்கு கட்சியுமில்லை, கொள்கையுமில்லை. சுபாஷ் போஸ் உயிரோடிருக்கிறார் என்பது மட்டும் ஒரு கட்சிக்கு கொள்கைஆகிவிடுமா?" என்று கேள்வி எழுப்பும் பெரியார் ஒருவர்தான் முதுகுளத்தூர் கலவரத்தின் போது தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஆதரவாக இருந்ததாக நூலாசிரியர் தினகரன் விளக்குகிறார்.

ஆடு, மாடு திருட்டு வழக்கிலிருந்து, ஆளை மறித்துப் பணம் பிடுங்கிய கேஸ் வரைக்கும் எது எதற்கெல்லாம் அவர் பஞ்சாயத்துக்கு வந்தார்.. நிலம் பிடுங்கிய வழக்கு முதல், விசாரிக்க வந்த அரசு அலுவலர் கொலல வ்ரைக்கும் ஏற்கனவே என்னென்ன வழ்க்குகள், தீர்ப்புகள், நீதிபதிகள் திரு.முத்துராமலிங்கத்தின் நடத்தைக்கு வழங்கிய சான்றுகளும் விரவிக் கிடக்கின்றன.

ஒரு முறை கீழ்க் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல் கோர்ட்டுக்குப் போனபோது... "ம்ம்ஹூம் பத்தாது..பத்தாது. இன்னும் கொஞ்சம் சேர்த்து ஜாமீன் வாங்கு " என்று தண்டனையை உயர்த்திய செய்திகளெல்லாம் இந்நூலில் இடம்பெற்றிருக்கின்றன.

இப்படி ஒரு நபருக்குத்தான் நூற்றாண்டு விழாவாம், இன்னொரு பக்கத்தில் 100 அடி உயர சிலையாம், திருவிளக்காம், முடிகாணிக்கையாம்.

எமக்கு இருக்கும் வருத்தமெல்லாம் தன் இனத்துக்காக உயிரைத் தியாகம் செய்த இம்மானுவேல் சேகரனின் நினைவு நாள் பொன் விழாவைவிட, தன் இனத்தின் முன்னேற்றத்தைத் தடுத்த ஒரு துரோகத்தின் நூற்றாண்டுவிழாவை அம்மக்களும் அரசுமே எடுக்கிறதே என்பதுதான்.

கருத்துகள்

PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
தேவர் நூற்றாண்டு கொண்டாட வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் தீர்மானம் போடும் அளவுக்கு நிலை இருக்கிறதே.. என்ன செய்ய?
muthunagaron இவ்வாறு கூறியுள்ளார்…
அன்புள்ள ப்ரின்ஸ்
நானும் அந்த புத்தகத்தை படித்தேன். அப்படிப்பட்ட ஒரு "தியாகி" க்கு தமிழக அரசு வரிந்து கட்டிக் கொண்டு நூற்றாண்டு விழா கொண்டாடுவதும், அதற்கு தமிழகத்திலுள்ள மற்ற கட்சிகளும் போட்டி போட்டு விழா நடத்துவதும் சகிக்க வில்லை.
எல்லோரும் சமூக நீதி என்ற ஒன்றை முற்றிலும் மறந்து விட்டனர் என்று நினைக்கிறேன். இப்போதைக்கு வோட்டு மட்டுமே அவர்கள் குறிக்கோள்

கருவாப்பயல்
muthunagaron இவ்வாறு கூறியுள்ளார்…
அன்புள்ள ப்ரின்ஸ்
நானும் அந்த புத்தகத்தை படித்தேன். அப்படிப்பட்ட ஒரு "தியாகி" க்கு தமிழக அரசு வரிந்து கட்டிக் கொண்டு நூற்றாண்டு விழா கொண்டாடுவதும், அதற்கு தமிழகத்திலுள்ள மற்ற கட்சிகளும் போட்டி போட்டு விழா நடத்துவதும் சகிக்க வில்லை.
எல்லோரும் சமூக நீதி என்ற ஒன்றை முற்றிலும் மறந்து விட்டனர் என்று நினைக்கிறேன். இப்போதைக்கு வோட்டு மட்டுமே அவர்கள் குறிக்கோள்

கருவாப்பயல்
பகுத்தறிவு முழக்கம் இவ்வாறு கூறியுள்ளார்…
எல்லாவற்றுக்கும் காரணம் ஓட்டுப் பொறுக்கி கட்சிகளே.விடுத்லை சிறுத்தைகள் கேட்பது முதல் அரசு விழா எடுப்பது வரை.. நன்றி சமா

அன்புடன்
இரா.இராவண கோபால்
முகமது பாருக் இவ்வாறு கூறியுள்ளார்…
நண்பா பிரின்ஸ்

இந்த சமூகவிரோதி விழாவை அரசு நடத்துவது என்பதை விட அந்த விளம்பரத்தை தந்தை பெரியாரின் ஏடான விடுதலையில் போட்டதை நீங்கள் எப்படி அணுகுகிறீர்கள்???..

ஆதாரச்செய்தி:

http://balajikumarg.powweb.com/viduthalai/20091029/Page08.html

பெருத்த அவமானாக இருங்குங்க
dass இவ்வாறு கூறியுள்ளார்…
பிரின்ஸ் அண்ணனுக்கு.....

அரசு முத்துராமலிங்கத்தேவருக்கு பிறந்தநாள் விழா கொண்டாடுகிறது.. அதை விடுதலையில் விளம்பரம் செய்துள்ளார்களே..............?

எதிர்ப்புனா....? எல்லா வகையிலும் எதிர்க்கனும்ல... அதை விட்டுடு ஒரு பக்கம் எதிர்ப்பு.. மறுபக்கம் அவருடைய பிறந்த நாளுக்கு விளம்பரப்படுத்துதல்னா....?

எந்த வகையில் இது நியாயம்...?

தோழர் முகமது பாருக் அவர்களின் சந்தேகம் தான் என் கேள்வியும்...

விடுதலை படிக்கும் எனக்கு விளக்கம் அளியுங்கள் அண்ணா...
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
//'நீதானடா தேவருடன் சவால்விட்டுப் பேசியவன்' எனக்கத்திக் கொண்டே இம்மானுவேல்சேகரன் மீது தன் கொலை வெறியைத் தீர்த்துக்கொண்ட அந்தக் கூட்டம் //

இதை யார் சொன்னவது இமானுவல் ஆவியா?

-ஆர்.தியாகு

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்....

நான் வாய்விட்டு உரக்கப்பாடி மகிழ்ந்தது போல் நீங்களும் கேட்டு, பாடி மகிழ வேண்டாமா? இதோ புரட்சிக் கவிஞர் ஓங்கி ஒலித்த "சங்கே முழங்கு" பாடல் கலங்கரை விளக்கம் திரைப்படத்திலிருந்து.... KalangaraiVilakkam... சங்க நாதம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றூதூது சங்கே! பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்! வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்! எங்கள் வாழ்வும்...... -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owner - Dinam