
'சென்னை சங்கமம்' பற்றி சக பதிவர் (அய்.அய்.டி.யில் படிப்பவர்) ஒருவர் பதிவிட்டிருக்கிறார். அய்.அய்.டி.யில் தொடக்கவிழா நடைபெறுகிறது என அறிந்தவுடனே போய்ப் பார்த்துவிடவேண்டும் என்ற எண்ணம் திண்ணமாகிவிட்டது. அதனால், கல்லூரி விளையாட்டு விழாவின் களைப்பையும் பொருட்படுத்தாமல் கிளம்பினேன். மாற்றார் யாரையும் எளிதில் அனுமதிக்காத அய்.அய்.டி, கதவு திறந்து வரவேற்றது தமிழக முதல்வரை வரவேற்கும் விளம்பரத் தட்டியோடு!
'சமத்துவப்பொங்கல்' என்ற அறிவிப்பின், வேண்டுகோளின் மூலம் இந்த ஆண்டுப் பொங்கலை கலைஞர் தித்திப்பாக்கியதைப்போல, 'சென்னை சங்கமம்', சென்னை முழுக்க பல்வேறு இடங்களிலும், 'எண்ணற்ற கலை நிகழ்ச்சிகள்', அதிலும் 'ஒடுக்கப்பட்ட மக்களின், தமிழர்களின் பாரம்பரிய கலைகளுக்கு முக்கியத்துவம்' என்னும் செய்தியே மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியது. சர்வ சாதாரணமாக நுழையமுடியாத, அதிலும் தமிழர்களோ, ஒடுக்கப்பட்டோரோ நுழையமுடியாதபடி சென்னையின் முக்கியப்பகுதியில் இருந்தாலும் தனித்தீவாக இயங்கிவரும் அய்.அய்.டிக்குள் மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், காவடியாட்டம், புலியாட்டம், பொய்க்கால்குதிரை, சிலம்பாட்டம், காலில் கட்டைகட்டி ஆடுதல் என இத்தனை பேர் நுழைந்து ஊர்வலமாக தங்கள் திறனை வெளிக்காட்டியபடி செல்வதைப் பார்த்த உடனே, எது நடக்கிறதோ இல்லையோ, நிகழ்வின் நோக்கம் வெற்றி என்பதைப் புரிந்துகொள்ளமுடிந்தது.



செய்திகள் படித்திருப்பீர்கள்...
எண்ணம்: கனிமொழி
இயக்கம்: வசந்த்
ஒருங்கிணைப்பு: ஜெகத் கஸ்பார்
இதன் வெற்றிக்குப் பின்னால்:
இசையமைப்பாளர்: பால் ஜேக்கப்
முக்கிய ஒருங்கிணைப்பாளர்: குமரவேல்
இன்னும் எண்ணற்றோரின் உழைப்பு இருக்கிறது.
சரி, விழாவிற்கு வருவோம்.
'சமத்துவப்பொங்கல்' என்ற அறிவிப்பின், வேண்டுகோளின் மூலம் இந்த ஆண்டுப் பொங்கலை கலைஞர் தித்திப்பாக்கியதைப்போல, 'சென்னை சங்கமம்', சென்னை முழுக்க பல்வேறு இடங்களிலும், 'எண்ணற்ற கலை நிகழ்ச்சிகள்', அதிலும் 'ஒடுக்கப்பட்ட மக்களின், தமிழர்களின் பாரம்பரிய கலைகளுக்கு முக்கியத்துவம்' என்னும் செய்தியே மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியது. சர்வ சாதாரணமாக நுழையமுடியாத, அதிலும் தமிழர்களோ, ஒடுக்கப்பட்டோரோ நுழையமுடியாதபடி சென்னையின் முக்கியப்பகுதியில் இருந்தாலும் தனித்தீவாக இயங்கிவரும் அய்.அய்.டிக்குள் மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், காவடியாட்டம், புலியாட்டம், பொய்க்கால்குதிரை, சிலம்பாட்டம், காலில் கட்டைகட்டி ஆடுதல் என இத்தனை பேர் நுழைந்து ஊர்வலமாக தங்கள் திறனை வெளிக்காட்டியபடி செல்வதைப் பார்த்த உடனே, எது நடக்கிறதோ இல்லையோ, நிகழ்வின் நோக்கம் வெற்றி என்பதைப் புரிந்துகொள்ளமுடிந்தது.



செய்திகள் படித்திருப்பீர்கள்...
எண்ணம்: கனிமொழி
இயக்கம்: வசந்த்
ஒருங்கிணைப்பு: ஜெகத் கஸ்பார்
இதன் வெற்றிக்குப் பின்னால்:
இசையமைப்பாளர்: பால் ஜேக்கப்
முக்கிய ஒருங்கிணைப்பாளர்: குமரவேல்
இன்னும் எண்ணற்றோரின் உழைப்பு இருக்கிறது.
சரி, விழாவிற்கு வருவோம்.
நிகழ்ச்சியில் பங்கேற்று ஆடிய 'திருநங்கை' நர்த்தகி நட்ராஜ், "இந்தக் கலைவிழா மிகவும் ஒடுக்கப்பட்டவர்கள், அடித்தட்டு மக்கள் ஆகியோருக்கும் சென்று சேர்ந்திருக்கிறது என்பதற்கு நானே ஒரு அடையாளம். சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட எம் போன்ற திருநங்கையருக்கும் வழங்கப்பட்டிருக்கும் நல்ல வாய்ப்பு இது" என்றார் நம்மிடம்.

நரேந்திராவின் அவின்யா கலைக்குழுவினரின் நடனம்
கே.ஏ. குணசேகரனின் குரலில் அதிர்ந்தது அரங்கம்.
மேடையில் வீடியோ பதிவாளர் உட்பட உடை வடிவமைப்பில் அப்படி ஒரு கவனம். பாருங்கள் படத்தை!
இன்னும் படங்களும் செய்தியும் அடுத்த பதிவில்....
கருத்துகள்
படங்களும் பதிவும் அருமை!
நன்றி!
செந்தழல் ரவி
மயிலாடுதுறை சிவா
எனினும், //அது ஐ.ஐ.டி. அய்அய்டி அல்ல.// அனானிக்கு!!
எழுத்துச் சீர்திருத்ததின் அடுத்த கட்டமாக 'ஐ' என்பது அதே உச்சரிப்பையும் பொருளையும் தரும் 'அய்'யாக மாறி ரொம்ப காலமாகிவிட்டது- தோழரே! முடிந்தால் எழுத்துசீர்திருத்தம் குறித்த பதிவு ஒன்று போடுகிறேன். படித்துத் தெளியுங்கள்.
புகைப்படங்கள் அருமையாக வந்திருக்கின்றன். அந்த பறையொளிக்கும் குழு பச்சையப்பாஸ் மாணவர்களா? அக்கல்லூரி மாணவர்களின் குழுவினர் பறையதிரக் கேட்டிருக்கிறேன்.
முன்னோட்டத்திற்கு நன்றி. விரிவான பதிவை எதிர்பார்க்கிறேன்.
இப்போதே 'கடற்கரய்' (கடற்கரை)என்றொரு எழுத்தாளர் இருக்கிறார்.
அவர் முன்னேறி விட்டார், நாம் இன்னும் நகர்ந்து செல்ல வேண்டியதிருக்கிறது.
இப்போதே 'கடற்கரய்' (கடற்கரை)என்றொரு எழுத்தாளர் இருக்கிறார்.
அவர் முன்னேறி விட்டார், நாம் இன்னும் நகர்ந்து செல்ல வேண்டியதிருக்கிறது. //
அன்பு நண்பரே,
இது என்ன சீர்திருத்தம் என்று புரியவில்லை. ஐ தமிழ் எழுத்தாக இருப்பதில் என்ன தவறு என்று எனக்குப் புரியவில்லை. முடிந்தால் ஒரு மின்னஞ்சல் போடவும். srini2206@gmail.com என்னுடைய முகவரி.
நன்றி!
சீனிவாசன்