முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

“மர்ம சாமியார் சாயிபாபா”

பி.பி.சி.யில் பரபரப்பாகப் பார்க்கப்படும்
“மர்ம சாமியார் சாயிபாபா”


யோகிகள், குருக்கள் என்று கருதப்படும் சாமியார்கள் புனிதமானவர் களாகக் கருதப்படுவது இந்தியாவின் பாரம்பரியமாகும். ஏறுக்குறைய 3 கோடி பக்தர்களைக் கொண்ட சத்ய சாயி பாபாதான் இத்தியாவிலேயே மிகப்பெரிய ஆன்மீகத் தலைவராகக் கருதப்படுகிறார். தென்னிந்தியாவில் பெங்களூர் நகரின் அருகே உள்ள புட்டபர்த்தியை அவர் தன் இருப்பிடமாகக் கொண்டுள் ளார். அவரது ஆரஞ்சு வண்ண உடையும், அடர்ந்த தலை முடியும் அவரைத் தனித்து அடையாளம் காட்டுபவை.

மனிதப் பிறவியான இவர் தன்னையே கடவுளாக, கடவுளின் அவதாரமாக அறிவித்துக் கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகிறார். இந்தியாவில்; இருந்து மட்டுமல்ல உலகின் 165 நாடுகளில் தனக்கு பக்தர்கள் உள்ளனர் என்று அவர் பெருமையுடன் கூறிக் கொள்கிறார்.

ஆனால் பி.பி.சியின் உலகக் குழு ஒன்று இந்தியாவில் இருந்து கலிபோர்னி யாவுக்குப் பயணம் செய்தபோது, தங்களின் வாழ்வையே பாபா கெடுத்து விட்டதாக அவரின் முன்னாள் பக்தர்கள் பலர் தெரிவித்தனர்.

பாபா தன்னைப் பாலியல் ரீதியில் பயன்படுத்திக் கொண்டதாகக் கூறும் முன்னாள் பக்தர் அலயா கூறினார்: “நான் கூறுவதைப் போல நீ செய்யாவிட் டால், உனது வாழ்வே துன்பம் நிறைந்ததாக ஆகிவிடும் என்று அவர் கூறியது எனக்கு நினைவிருக்கிறது.” தாங்கள் எவ்வாறு ஏமாற்றப்பட்டோம் என்பதை அலயாவின் குடும்பத்தினரே வெளிப்படையாகக் கூறுகின்றனர்.

இந்தியாவில் அரசியல்வாதிகள் இந்தப் பிரச்சினையைத் தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருவதாகவே தோன்றுவதால், அவர்களைப் பற்றி பல கேள்விகள் எழுகின்றன. சாயிபாபாவின் காலடியில் விழுந்து கிடப்பதையே இவர்கள் விரும்புவதாக சிலர் கூறுகின்றனர். உயர் இடங்களில் பாபாவுக்கு நண்பர்கள் உள்ளதால், அவரது புகழும் பெருமையும் மங்காது இருக்கிறது.” என்று பி.பி.சி தெரிவிக்கிறது. மர்ம சாமியார் (The Secret Swami) என்னும் பி.பி.சி.யின் படம் 2004 ஜூன் மாதத்திலிருந்து தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்....

நான் வாய்விட்டு உரக்கப்பாடி மகிழ்ந்தது போல் நீங்களும் கேட்டு, பாடி மகிழ வேண்டாமா? இதோ புரட்சிக் கவிஞர் ஓங்கி ஒலித்த "சங்கே முழங்கு" பாடல் கலங்கரை விளக்கம் திரைப்படத்திலிருந்து.... KalangaraiVilakkam... சங்க நாதம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றூதூது சங்கே! பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்! வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்! எங்கள் வாழ்வும்...... -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owner - Dinam