“எந்தக் காரணமாக இருந்தாலும் சிறைக்குச் செல்வதுஅவமானம். அதனால் தான் எங்கள் மன்னிப்புக் கடித மாவீரர்கள் பாரதியார் தொடங்கி சவர்க்கர், வாஜ்பேயி வரை எல்லோரும் அந்த அவமானத்திற்குப் பயந்து சிறைக்கே போகவில்லை.
திருட்டு சிடி வழக்கில் உள்ளே போவதும் கூட அவமானம் தான் என்றாலும், அதற்கெல்லாம் மன்னிப்புக் கடிதத்தை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்கிறார்கள் இப்போது.
இந்த அவமானம் கூடாது என்பதால் தான் முந்தைய காலத்தில் மனுதர்மத்தை வைத்துக் கொண்டு வர்ணத்திற்கேற்ப Classified criminal code வைத்து தண்டனையைப் பிரித்துத் தந்தோம். இந்த வெள்ளக் காரக் கடன்காரன் மெக்காலே தான் எல்லாரையும் ஒரே தட்டில் வச்சு தண்டனை தரணுமிண்டான். கடன்காரன்... கடன்காரன்...”
தினமலர் சப் எடிட்டர் அம்பி எழுதி, பின்னர் தினமலர் எடிட்டோரியலில் கொட்டைபோட்ட மாமா, பூணூலைச் சொறிந்தபடி, “இப்படி பட்டாங்கமாவாடா எழுதுவே... அசடு... அசடு” என்று அவனைத் திட்டிண்டே கசக்கித் தூக்கிப் போட்ட பகுதி.
(சிறைக்குச் சென்ற வ.உ.சியையும், ஓடிப் போன பாரதியையும் பற்றி அண்ணன் இசை இன்பன் எழுதிய பேஸ்புக் பதிவிலிருந்து எடுத்து படம்)
கருத்துகள்