சொல்வதற்கு ஏராளம் பதில்கள் இருக்கின்றன; கேட்பதற்கு ஏராளம் கேள்விகள் இருக்கின்றன. தீர்க்கப்படவேண்டிய சந்தேகங்கள் இருக்கின்றன... இரு தரப்பிலும்!
அவையெல்லாம் சாவகாசமாக சந்தோசமாக இருக்கும்போது பேசிக் கொள்ள வேண்டியவை. அப்போது அவை விட்டுக் கொடுத்தல்களாகவும், புரிதல்களாகவும் மாறிப் போகும்.
ஒரு பிரச்சினையின் மீதான வெவ்வேறு நிலைப்பாட்டை வைத்துக்கொண்டு, மீண்டும் மீண்டும் அதையே கிளறிக் கொண்டிருந்தால், வார்த்தை வளர்ப்பு காரணமாக புரிதல்கள் கூட மாறிப் போகும் அபாயம் இருக்கிறது.
தமிழகத்தில் ஏராளமான அவசரமான பிரச்சினைகள் சூழ்ந்திருக்கின்றன. அதைவிட்டுவிட்டு, ஒன்றுமில்லாத பிரச்சினையை சொறிந்துகொண்டு நமக்குள் நாமே முரண்பட்டுக் கொண்டிருத்தல் நலமன்று.
திமுக தோழர்களுக்கு புரிதலுக்காக மீண்டும் ஒன்றைச் சொல்லுகிறேன். அதிமுக அணிகளுக்குள் எந்த அணி இருக்க வேண்டும் என்ற எங்கள் பார்வை வேறு. திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆதரிப்பதென்பது வேறு.
இதில் நமக்குள் இருக்கும் கருத்து வேறுபாடு தவிர, பிற பிரச்சினைகளில் ஒரே திசையில் தான் நாம் பயணிக்கிறோம். அது தொடர வேண்டும் என்றும் விரும்புகிறோம்.
வாரிசு அரசியல், 2ஜி, ஊழல் என்று திமுக மீது வைக்கப்பட்ட ’அவதூறு’களுக்கு மறுப்பு சொன்ன திராவிடர் கழகத்தவர் எவரும் அந்த குற்றச்சாட்டுகளை திமுக மீது எப்போதும் வைக்க மாட்டார்கள்.
நம் கருத்துமாறுபாடுகளை மூளையின் ஒரு மூலையில் போட்டு வையுங்கள். ஒரு நாள் தோள் மீது கையைப் போட்டுக் கொண்டு அவற்றைப் பேசிச் சிரிப்போம்.
உள்ளாட்சித் தேர்தல்கள் மே 15-க்குள் நடத்தி முடிக்கப்படும் என்ற செய்தி வந்திருக்கிறது. சட்டசபையில் மாபெரும் எதிர்க்கட்சியான திமுக உள்ளாட்சித் தேர்தல்களில் பெரும்பான்மை வெற்றி பெற்றால், கிட்டத்தட்ட ஆட்சி திமுக கையில் என்பதை மறக்க வேண்டாம். அதற்கான உழைப்பை முன்னெடுப்பதே இப்போது முக்கியம்.
உறவுக்குக் கை கொடுப்போம்! உரிமைக்குக் குரல் கொடுப்போம்!! உள்ளாட்சியை வென்றெடுப்போம்!
எப்படி வசதி?
அவையெல்லாம் சாவகாசமாக சந்தோசமாக இருக்கும்போது பேசிக் கொள்ள வேண்டியவை. அப்போது அவை விட்டுக் கொடுத்தல்களாகவும், புரிதல்களாகவும் மாறிப் போகும்.
ஒரு பிரச்சினையின் மீதான வெவ்வேறு நிலைப்பாட்டை வைத்துக்கொண்டு, மீண்டும் மீண்டும் அதையே கிளறிக் கொண்டிருந்தால், வார்த்தை வளர்ப்பு காரணமாக புரிதல்கள் கூட மாறிப் போகும் அபாயம் இருக்கிறது.
தமிழகத்தில் ஏராளமான அவசரமான பிரச்சினைகள் சூழ்ந்திருக்கின்றன. அதைவிட்டுவிட்டு, ஒன்றுமில்லாத பிரச்சினையை சொறிந்துகொண்டு நமக்குள் நாமே முரண்பட்டுக் கொண்டிருத்தல் நலமன்று.
திமுக தோழர்களுக்கு புரிதலுக்காக மீண்டும் ஒன்றைச் சொல்லுகிறேன். அதிமுக அணிகளுக்குள் எந்த அணி இருக்க வேண்டும் என்ற எங்கள் பார்வை வேறு. திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆதரிப்பதென்பது வேறு.
இதில் நமக்குள் இருக்கும் கருத்து வேறுபாடு தவிர, பிற பிரச்சினைகளில் ஒரே திசையில் தான் நாம் பயணிக்கிறோம். அது தொடர வேண்டும் என்றும் விரும்புகிறோம்.
வாரிசு அரசியல், 2ஜி, ஊழல் என்று திமுக மீது வைக்கப்பட்ட ’அவதூறு’களுக்கு மறுப்பு சொன்ன திராவிடர் கழகத்தவர் எவரும் அந்த குற்றச்சாட்டுகளை திமுக மீது எப்போதும் வைக்க மாட்டார்கள்.
நம் கருத்துமாறுபாடுகளை மூளையின் ஒரு மூலையில் போட்டு வையுங்கள். ஒரு நாள் தோள் மீது கையைப் போட்டுக் கொண்டு அவற்றைப் பேசிச் சிரிப்போம்.
உள்ளாட்சித் தேர்தல்கள் மே 15-க்குள் நடத்தி முடிக்கப்படும் என்ற செய்தி வந்திருக்கிறது. சட்டசபையில் மாபெரும் எதிர்க்கட்சியான திமுக உள்ளாட்சித் தேர்தல்களில் பெரும்பான்மை வெற்றி பெற்றால், கிட்டத்தட்ட ஆட்சி திமுக கையில் என்பதை மறக்க வேண்டாம். அதற்கான உழைப்பை முன்னெடுப்பதே இப்போது முக்கியம்.
உறவுக்குக் கை கொடுப்போம்! உரிமைக்குக் குரல் கொடுப்போம்!! உள்ளாட்சியை வென்றெடுப்போம்!
எப்படி வசதி?
கருத்துகள்