முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தேங்காய் உரிக்கும் இயந்திரம்

எங்கள் வீட்டில் இரண்டு தென்னை மரங்கள். இரண்டுமே நான் நட்டவை! ஒன்று எதிர்வீட்டு பாண்டியுடனும், மற்றொன்று பக்கத்துவீட்டு திலக்குடனும் கூட்டணி வைத்து நட்டது என்று நினைக்கிறேன். கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளைத் தொடும் எங்கள் வீட்டில் தென்னைக்கு எப்படியும் 18 வயதுக்குக் குறையாமல் இருக்கும். குறைந்த உயரத்திலேயே சுவையான இளநீரையும், தேவைப்படும்போது தேங்காய்களையும் தந்து கொண்டிருந்தன இரண்டு மரங்களும்! தொடக்கத்தில் அரிவாள் மூலம் தேங்காய் உரித்துக் கொண்டிருந்த எங்கள் அய்யா, பின்னர் தேங்காய் உரிப்பதற்கென்றே உள்ள கருவியை வாங்கி வந்தார். தொடக்கத்தில் ஆர்வத்துடன் அதில் தேங்காய்கள் உரிப்பதற்குத் தாவுவேன். எப்போதும் அய்யா தான் உரிப்பார். ஆனால், நாளடைவில் அதில் எனக்கு ஒருவித பயம் தோன்றத் தொடங்கியது. கையை வைத்து குத்தி, அழுத்தி, கம்பியை நிமிர்த்தினால், மட்டை பிய்ந்து வரும்.

கம்பியில் குத்தி அழுத்துவதில் கொஞ்சம் பிசகினாலும், ஸ்லிப்பாகி கருவியின் கூர்முனைப்பகுதி வயிற்றில் குத்திவிடும் ஆபத்து உண்டு. எனவே நீங்கள் தேங்காயே உரிக்கவில்லையென்றாலும் பரவாயில்லை. அந்த கருவியில் கைவைக்காதீர்கள் என்று எங்கள் அய்யாவிடம் சொல்லிக்கொண்டேயிருப்பேன். ஆனால், வழக்கம் போல் தன்மேல் உள்ள நம்பிக்கையில் அவர் கேட்க மாட்டார் என்று வைத்துக் கொள்ளுங்கள். எப்போதோ செய்வோருக்கே இப்படி பயம் என்றால், இதே தொழிலாய் இருப்போரை நினைத்தால்....

இதற்கு வேறு வழி இருக்க வேண்டுமே என்று தேடியிருக்கிறேன் முன்பு! இன்று கண்ட இந்த காணொளி மிகுந்த மகிழ்ச்சியையும் நிறைவையும் தந்தது. எங்கள் வீட்டிற்கு இது தேவைப்படாது என்றாலும், எத்தனையோ பேருக்கு பாதுகாப்பாக இருக்கும் அல்லவா! இத்தகைய கண்டுபிடிப்புகள் அல்லவா நாட்டிற்கு அவசியம்! உருவாக்கியவர்களை அழைத்துப் பாராட்ட வேண்டும் என்று நினைத்தேன். இரவாகிவிட்டதனால், காலையில் பாராட்டிக் கொள்ளலாம். இப்போதைக்குப் பரப்புவோம்.. என்று உங்களுக்கு எழுதிக் கொண்டிருக்கிறேன். 

கருத்துகள்

குலவுசனப்பிரியன் இவ்வாறு கூறியுள்ளார்…
//இத்தகைய கண்டுபிடிப்புகள் அல்லவா நாட்டிற்கு அவசியம்! //
மிக உண்மை. பகிர்தலுக்கு நன்றி.

இதைப் போலவே கோவையில் செய்யப்படும், ”தானிய சுத்திகரிப்பு எந்திரத்தையும்” பாருங்கள்.

https://www.youtube.com/watch?v=Fikc3BiyAnQ
துளசி கோபால் இவ்வாறு கூறியுள்ளார்…
ஆஹா.... அருமை! இதனால் பெரிய தோப்புகளுக்கு நிறைய பலன் உண்டு.

என்ன..ஒன்னு.... குடுமி இல்லாமப் பிய்த்துப் போட்டுருது:(

அந்தப்பெண்கள், உடைத்த தேங்காய்மூடியில் இருந்து எத்தனை லாகவகமாக தேங்காயைப் பிரித்தெடுக்கிறார்கள், கவனித்தீரா!!!!
திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
அறிந்தேன்...
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
பார்த்தேன். நன்றி குலவுசனப்பிரியன்!
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
குடுமியோட பிய்க்கிறதுக்கும் ஒன்னு கண்டுபிடிச்சிட்டா போகுது!
யோகன் பாரிஸ்(Johan-Paris) இவ்வாறு கூறியுள்ளார்…
தேவையே கண்டுபிடிப்பின் தாய் என்பர். அருமை, இந்த தேங்காயுரிப்பது நமக்கு தேவையானதே! கண்டுபிடித்தவரைப் பாராட்டவே வேண்டும்.
முடியுடன் தேங்காய் சில சமயச் சடங்குகளுக்குத் தேவை, அதற்கு கத்தியாலே உரித்துவிடலாம்.
ஆனால் இவ்வளவு தொகையான தேங்காய்களுக்கு சிரட்டை நீக்க , முடியின்றி உரிப்பதே நன்று.
கனடாவில் இடியப்பம் பிழியக் கருவியுள்ளதாகக் கூறினார்கள்.
கேரளாவில் தென்னை,பனை ஏறவும் இயந்திரம் உள்ளதாக அறிந்தேன்.
மேலைநாடுகளளவுக்கு நாமும் நம் தேவைக்கான கண்டுபிடிப்புகளில் முன்னேறுவது மகிழ்வே!
Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University இவ்வாறு கூறியுள்ளார்…
தேவையுள்ள பகிர்வு. இவ்வாறாக ஒரு கருவி இருப்பதை தற்போதுதான் அறிகிறேன். பகிர்ந்தமைக்கு நன்றி.
www.drbjambulingam.blogspot.in
www.ponnibuddha.blogspot.in

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்....

நான் வாய்விட்டு உரக்கப்பாடி மகிழ்ந்தது போல் நீங்களும் கேட்டு, பாடி மகிழ வேண்டாமா? இதோ புரட்சிக் கவிஞர் ஓங்கி ஒலித்த "சங்கே முழங்கு" பாடல் கலங்கரை விளக்கம் திரைப்படத்திலிருந்து.... KalangaraiVilakkam... சங்க நாதம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றூதூது சங்கே! பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்! வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்! எங்கள் வாழ்வும்...... -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owner - Dinam