எங்கள் வீட்டில் இரண்டு தென்னை மரங்கள். இரண்டுமே நான் நட்டவை! ஒன்று எதிர்வீட்டு பாண்டியுடனும், மற்றொன்று பக்கத்துவீட்டு திலக்குடனும் கூட்டணி வைத்து நட்டது என்று நினைக்கிறேன். கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளைத் தொடும் எங்கள் வீட்டில் தென்னைக்கு எப்படியும் 18 வயதுக்குக் குறையாமல் இருக்கும். குறைந்த உயரத்திலேயே சுவையான இளநீரையும், தேவைப்படும்போது தேங்காய்களையும் தந்து கொண்டிருந்தன இரண்டு மரங்களும்! தொடக்கத்தில் அரிவாள் மூலம் தேங்காய் உரித்துக் கொண்டிருந்த எங்கள் அய்யா, பின்னர் தேங்காய் உரிப்பதற்கென்றே உள்ள கருவியை வாங்கி வந்தார். தொடக்கத்தில் ஆர்வத்துடன் அதில் தேங்காய்கள் உரிப்பதற்குத் தாவுவேன். எப்போதும் அய்யா தான் உரிப்பார். ஆனால், நாளடைவில் அதில் எனக்கு ஒருவித பயம் தோன்றத் தொடங்கியது. கையை வைத்து குத்தி, அழுத்தி, கம்பியை நிமிர்த்தினால், மட்டை பிய்ந்து வரும்.
கம்பியில் குத்தி அழுத்துவதில் கொஞ்சம் பிசகினாலும், ஸ்லிப்பாகி கருவியின் கூர்முனைப்பகுதி வயிற்றில் குத்திவிடும் ஆபத்து உண்டு. எனவே நீங்கள் தேங்காயே உரிக்கவில்லையென்றாலும் பரவாயில்லை. அந்த கருவியில் கைவைக்காதீர்கள் என்று எங்கள் அய்யாவிடம் சொல்லிக்கொண்டேயிருப்பேன். ஆனால், வழக்கம் போல் தன்மேல் உள்ள நம்பிக்கையில் அவர் கேட்க மாட்டார் என்று வைத்துக் கொள்ளுங்கள். எப்போதோ செய்வோருக்கே இப்படி பயம் என்றால், இதே தொழிலாய் இருப்போரை நினைத்தால்....
இதற்கு வேறு வழி இருக்க வேண்டுமே என்று தேடியிருக்கிறேன் முன்பு! இன்று கண்ட இந்த காணொளி மிகுந்த மகிழ்ச்சியையும் நிறைவையும் தந்தது. எங்கள் வீட்டிற்கு இது தேவைப்படாது என்றாலும், எத்தனையோ பேருக்கு பாதுகாப்பாக இருக்கும் அல்லவா! இத்தகைய கண்டுபிடிப்புகள் அல்லவா நாட்டிற்கு அவசியம்! உருவாக்கியவர்களை அழைத்துப் பாராட்ட வேண்டும் என்று நினைத்தேன். இரவாகிவிட்டதனால், காலையில் பாராட்டிக் கொள்ளலாம். இப்போதைக்குப் பரப்புவோம்.. என்று உங்களுக்கு எழுதிக் கொண்டிருக்கிறேன்.
கம்பியில் குத்தி அழுத்துவதில் கொஞ்சம் பிசகினாலும், ஸ்லிப்பாகி கருவியின் கூர்முனைப்பகுதி வயிற்றில் குத்திவிடும் ஆபத்து உண்டு. எனவே நீங்கள் தேங்காயே உரிக்கவில்லையென்றாலும் பரவாயில்லை. அந்த கருவியில் கைவைக்காதீர்கள் என்று எங்கள் அய்யாவிடம் சொல்லிக்கொண்டேயிருப்பேன். ஆனால், வழக்கம் போல் தன்மேல் உள்ள நம்பிக்கையில் அவர் கேட்க மாட்டார் என்று வைத்துக் கொள்ளுங்கள். எப்போதோ செய்வோருக்கே இப்படி பயம் என்றால், இதே தொழிலாய் இருப்போரை நினைத்தால்....
கருத்துகள்
மிக உண்மை. பகிர்தலுக்கு நன்றி.
இதைப் போலவே கோவையில் செய்யப்படும், ”தானிய சுத்திகரிப்பு எந்திரத்தையும்” பாருங்கள்.
https://www.youtube.com/watch?v=Fikc3BiyAnQ
என்ன..ஒன்னு.... குடுமி இல்லாமப் பிய்த்துப் போட்டுருது:(
அந்தப்பெண்கள், உடைத்த தேங்காய்மூடியில் இருந்து எத்தனை லாகவகமாக தேங்காயைப் பிரித்தெடுக்கிறார்கள், கவனித்தீரா!!!!
முடியுடன் தேங்காய் சில சமயச் சடங்குகளுக்குத் தேவை, அதற்கு கத்தியாலே உரித்துவிடலாம்.
ஆனால் இவ்வளவு தொகையான தேங்காய்களுக்கு சிரட்டை நீக்க , முடியின்றி உரிப்பதே நன்று.
கனடாவில் இடியப்பம் பிழியக் கருவியுள்ளதாகக் கூறினார்கள்.
கேரளாவில் தென்னை,பனை ஏறவும் இயந்திரம் உள்ளதாக அறிந்தேன்.
மேலைநாடுகளளவுக்கு நாமும் நம் தேவைக்கான கண்டுபிடிப்புகளில் முன்னேறுவது மகிழ்வே!
www.drbjambulingam.blogspot.in
www.ponnibuddha.blogspot.in