முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காரட் போய்... கான்கிரீட் வந்தது

பெங்களூரில் இருக்கிறேன். இதை பெங்களூரு என்று சொன்னால் பெங்களூர் வாசிகள் ஏற்க மாட்டார்கள். அதன் புறநகர்ப் பகுதி - ஒயிட்ஃபீல்ட் அருகில்! வரிசையாக பெரும் பெரும் அடுக்குமாடிக் குடியிருப்புகளாக இருக்கும் பகுதியில் வசிக்கும் தங்கை வீட்டிலிருந்து பார்த்தால், பக்கத்தில் இருக்கும் நீளமான ஓரிடம் மட்டும் பச்சைப் பசேல் என்று இருக்கும். முழுக்கவே விவசாயம் இருந்த பகுதியில் பிளாட் போடப்பட்டது போக அந்த வால் போன்ற நிலத்தில் தான் விவசாயம் நடைபெற்றுவந்ததாம். அதுவும் காரட் செடிகள். 4-ஆவது மாடியிலிருந்து பார்க்க குட்டி குட்டியாக மிக அழகாக இருக்கும். அந்த இடத்தை பலரும் விலைக்குக் கேட்டுவருவதாகவும், அதன் உரிமையாளர் மறுத்துவருவதாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன்.

பொங்கலுக்காக இந்த முறை வந்து பார்க்கும்போது அதிர்ச்சி! அண்மையில் அதற்கு எதிர்ப் பகுதியில் கட்டப்பட்டுவரும் மற்றொரு அ.மா.கு-க்காக, அதன் பணியாளர்கள் தங்கும் பகுதியாக மாற்றப்பட்டிருக்கிறது அந்த நிலம். தகரத் தகடுகள் வேயப்பட்ட குடிசைத் தொகுப்பாக இருக்கிறது அந்தப் பகுதி! வடநாட்டுப் பணியாளர்களும், பள்ளி என்றால் என்னவென்றே அறியாத அவர்களது குழந்தைகளுமாக நிரம்பிவிட்டது அந்நிலம். காய்கறி விளைந்த நிலம் மாறி, எங்கிருந்தோ வந்த மனிதர்களின் வாழ்க்கை அங்கே புதிதாக பதியன் போடப்பட்டிருக்கிறது.

நாளை காரட் செடிகளைப் போல இவர்களும் அங்கு இல்லாமல் போவார்கள். புதிய கட்டிடத்தின் அடியில் அந்த விளைநிலம் புதைக்கப்படலாம். ஆனால், அதையெல்லாம் கடந்து இன்னும் சிந்தித்தால், இத்தனை வீடுகள் தேவைக்குக் காரணம் - மேலும் மேலும் பெருகி வரும் மக்கள் தொகை என்பது மட்டும் தெளிவாகிறது. இடையில் தீவிரமாக இருந்த மக்கள் தொகைக் கட்டுப்பாடு பிரச்சாரத்தை இப்போது எங்கேயும் காணமுடியவில்லை. படித்தவர்கள் ஒரு குழந்தையோடு நிறுத்திய நிலை மாறி, கடந்த 5, 10 ஆண்டுகளில் மீண்டும் இரண்டு, மூன்று என்று பெற்றுக் கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். பணம் இருக்கு... பெற்றுக் கொள்வோம் என்பது தான் அவர்களின் எண்ணமாகவும் இருக்கிறது போலும்..

ம்ம்ம்... ஒரு வழியாக, கான்கிரீட் காட்டின் மத்தியில் தான் இந்த ஆண்டு எங்கள் பொங்கல் விழா!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்....

நான் வாய்விட்டு உரக்கப்பாடி மகிழ்ந்தது போல் நீங்களும் கேட்டு, பாடி மகிழ வேண்டாமா? இதோ புரட்சிக் கவிஞர் ஓங்கி ஒலித்த "சங்கே முழங்கு" பாடல் கலங்கரை விளக்கம் திரைப்படத்திலிருந்து.... KalangaraiVilakkam... சங்க நாதம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றூதூது சங்கே! பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்! வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்! எங்கள் வாழ்வும்...... -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owner - Dinam