பெங்களூரில் இருக்கிறேன். இதை பெங்களூரு என்று சொன்னால் பெங்களூர் வாசிகள் ஏற்க மாட்டார்கள். அதன் புறநகர்ப் பகுதி - ஒயிட்ஃபீல்ட் அருகில்! வரிசையாக பெரும் பெரும் அடுக்குமாடிக் குடியிருப்புகளாக இருக்கும் பகுதியில் வசிக்கும் தங்கை வீட்டிலிருந்து பார்த்தால், பக்கத்தில் இருக்கும் நீளமான ஓரிடம் மட்டும் பச்சைப் பசேல் என்று இருக்கும். முழுக்கவே விவசாயம் இருந்த பகுதியில் பிளாட் போடப்பட்டது போக அந்த வால் போன்ற நிலத்தில் தான் விவசாயம் நடைபெற்றுவந்ததாம். அதுவும் காரட் செடிகள். 4-ஆவது மாடியிலிருந்து பார்க்க குட்டி குட்டியாக மிக அழகாக இருக்கும். அந்த இடத்தை பலரும் விலைக்குக் கேட்டுவருவதாகவும், அதன் உரிமையாளர் மறுத்துவருவதாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன்.
நாளை காரட் செடிகளைப் போல இவர்களும் அங்கு இல்லாமல் போவார்கள். புதிய கட்டிடத்தின் அடியில் அந்த விளைநிலம் புதைக்கப்படலாம். ஆனால், அதையெல்லாம் கடந்து இன்னும் சிந்தித்தால், இத்தனை வீடுகள் தேவைக்குக் காரணம் - மேலும் மேலும் பெருகி வரும் மக்கள் தொகை என்பது மட்டும் தெளிவாகிறது. இடையில் தீவிரமாக இருந்த மக்கள் தொகைக் கட்டுப்பாடு பிரச்சாரத்தை இப்போது எங்கேயும் காணமுடியவில்லை. படித்தவர்கள் ஒரு குழந்தையோடு நிறுத்திய நிலை மாறி, கடந்த 5, 10 ஆண்டுகளில் மீண்டும் இரண்டு, மூன்று என்று பெற்றுக் கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். பணம் இருக்கு... பெற்றுக் கொள்வோம் என்பது தான் அவர்களின் எண்ணமாகவும் இருக்கிறது போலும்..
ம்ம்ம்... ஒரு வழியாக, கான்கிரீட் காட்டின் மத்தியில் தான் இந்த ஆண்டு எங்கள் பொங்கல் விழா!
கருத்துகள்