தமுக்கு வீரமணி என்று பட்டம் தருகிறார்களாம்! அதற்கு ஆதரவு தந்து கை தூக்குகின்றனராம் அலர்ஜிக்காரர்கள்! http://www.facebook.com/photo.php?fbid=166589886723898&set=a.132067643509456.20892.100001186622923&comments
தமுக்கு எங்கள் ஒடுக்கப்பட்டோரின் இசைக்கருவி தான்! அதைச் சுமப்பதிலும் அடிப்பதிலும், அதன் மூலம் அடைமொழிபெயர் பெறுவதிலும் கூட எங்களுக்கு ஒன்றும் மனஒதுக்கீடு இல்லை! இன்னும் சொல்லப்போனால் அந்தப் பெயருக்கு ஒரு பொருத்தமும், கூடவே வரலாறும் உண்டு!
”1995 செப்டம்பரில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா உத்தரப்பிர தேச அரசு சார்பில் மூன்று நாள்கள் கோலா கலமாகக் கொண்டாடப்பட்டது. இந்தியா முழுவதுமிருந்தும் மக்கள் லட்சக்கணக்கில் வந்து குவிந்தனர். இதனைப் பொறுக்க மாட்டாத ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் சந்திராசாமி பின்னணியில் பிள்ளையார் பால் குடித்ததாக இந்தியா முழுமையும் பரப்பினர். இது புரட்டு என்பது நிரூபிக்கப்பட்டது பிள்ளையார் கொழுக்கட்டை தின்றால் ரூபாய் ஒரு லட்சம் பரிசு என்று அன்றைய திராவிடர் கழக பொதுச்செயலாளர் கி. வீரமணி அவர்கள் சென்னை அண்ணா சாலையில் தமுக்கு (டாம்டாம்) அடித்துப் பிரச்சாரம் செய்தார்" என்பது வரலாறு.
அதனால் பகுத்தறிவைப் பரப்பவும், இனத்தின் நலனுக்காகவும் தமுக்கடிப்பதில் எங்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை! ஜால்ரா அடிக்கிறார்; பூசாரி வேலை செய்கிறார்; ராஜகுருவாக இருக்கிறார்; மேலவைக்குப் போகிறார்; பொம்மை முதலமைச்சராகிறார்... இன்னும் என்னென்ன அரிப்போ அவ்வளவையும் தினமலம் உள்ளிட்ட பார்ப்பனப் பத்திரிகைகள் எழுதி சொறிந்து கொண்டிருந்தன. இப்போது அந்தப் பணியில் தினமலத்தின் புதல்வர்கள் நாங்கள் என்று புறப்பட்டிருப்போர் செய்து கொண்டிருக்கிறார்கள். அது கிடக்கட்டும்.
தி.மு.க. கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் என்ன செய்வது என்ற கவலை யாருக்கு இருக்கிறதோ இல்லையோ, அரைவேக்காடுகளுக்கு நிறையவே இருக்கிறது. காரணம் இவர்களின் நோக்கம் காங்கிரசை வெறுப்பதும் இல்லை; வேரறுப்பதும் இல்லை. திராவிட இயக்கத்தைக் கொச்சைப்படுத்துவதும், அதற்கெதிராக செயல்படுவதும்தானே!
அதை விட முக்கியமாக ”எங்கே காங்கிரஸ் விலகி, அதிமுக கூட்டணிக்கு வந்துவிட்டால் நம்ம பொழப்பு என்னாவது” என்கிற ரீதியில், மூணு சீட்டு பாண்டியன் கட்சிக்கும், Y, U நாம ’மார்க்’சீட்டுகளுக்கும் கலக்கம் உண்டாகியிருப்பது தெரிகிறது. வை.கோவுக்கு அந்தச் சிக்கல் இல்லை. எங்கிருந்தாலும் ஜெயிக்கப்போவதில்லை; மொத்தமே ரெண்டு பேர் தான் என்பதால், கூட இருப்பவர்களுக்கு சீட்டு வாங்கிக் கொடுக்க வேண்டுமே என்ற கவலையும் இல்லை.
ஆசிரியர் விடுத்த அறிக்கை காரணமாக, நிறைய பேருக்கு அரிக்க ஆரம்பித்திருக்கிறது.
அலர்ஜிக்காரர்கள் அரித்துக் கொண்டிருக்கட்டும்! நாங்கள் தமுக்கு அடித்துக் கொண்டிருக்கிறோம்.
பிள்ளையார் பால் குடிப்பதாகக் கிளப்பிவிடப்பட்ட புரளியை எதிர்த்து
தமுக்கடித்துப் பிரச்சாரம் செய்த தமிழர் தலைவர் கி.வீரமணி (செப்டம்பர் 25, 1995)
தமுக்கடித்துப் பிரச்சாரம் செய்த தமிழர் தலைவர் கி.வீரமணி (செப்டம்பர் 25, 1995)
கருத்துகள்