முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குற்றச்சாட்டு தவறு என்று நிரூபிப்பேன் - மத்திய அமைச்சர் ஆ.இராசா

சென்னை, நவ. 14- தொலைத் தொடர்புத் துறையில் மாறுதலை விரும்பாதவர்கள் ஒன்று சேர்ந்து என்மீது களங்கம் கற்பிக்க முனைந் துள்ளனர் என்று மத்திய அமைச்சர் ஆ. இராசா இந்து நாளித ழுக்கு அளித்த பேட் டியில் கூறியுள்ளார். அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:
கேள்வி: 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு, புதிய நிறுவனங்களுக்கு உரிமங்கள் வழங்கியது, உரிம நிபந்தனைகளில் மாற்றம் செய்தது ஆகியவை காரணமாக அரசுக்கு 1.77 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது என்று இந்திய உயர் தணிக்கை அதிகாரியின், தணிக்கை அறிக்கையில் தெரிவிக் கப்பட்டுள்ளது என்ற செய்தி கசிந்திருக்கிறது. இதனைப் பற்றி நீங்கள் விளக்கமுடியுமா?
ஆ.இராசா: எழுப் பப்பட்டுள்ள பிரச் சினைகளை இரு வகை களாகப் பிரிக்கலாம். முதலாவது, அரசாங் கத்துக்கு இழப்பு ஏற் பட்டதாகக் கூறப்படு வது. அடுத்தது நடை முறையில் தவறுகள் ஏற்பட்டது என்று கூறப்படுவது.
1999 தேசிய தொலைத் தொடர்புக் கொள்கை மத்திய அமைச்சரவை யால் ஏற்றுக் கொள் ளப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டு நாடா ளுமன்றம் பின்னேற்பு வழங்கப்பட்டு உள் ளது. ஏலம் வழியான நடை முறையிலிருந்து(NTP 94) வருவாய் பங் கீடு நடைமுறைக்கு (NTP 99) மாறுவதற்கு இந்த கொள்கை அதி காரம் அளித்துள்ளது. கசிந்துள்ள தணிக்கை அறிக்கையில், ஏல நடை முறையைத்தான் நாம் கடைப்பிடித்திருக்க வேண்டும் என்றும், 3-ஜி ஏல வருவாயை கணக் கில் எடுத்துக் கொண்டு கற்பனையிலான வரு வாய் இழப்பு ஏற்பட்டுள்ளது எனவும் கூறப்பட் டுள்ளது எனத் தெரி கிறது. எனவே, கற்பனை செய்து கொள்ளப்பட்டுள்ள இழப்பு என்பதை நிர்ணயிக்க எடுத்துக் கொண்ட அளவுகோலே சரியானது அல்ல.
நம் முன் உள்ள பிரச்சினை என்னவென் றால், ஒரு அரசமைப்புச் சட்டப்படி தன்னாட்சி பெற்ற அமைப்பான உயர் தணிக்கை அமைப் புக்கும், அரசமைப்புச் சட்டத்தின்படி தன் னாட்சி பெற்ற இதர அமைப்புகளான அரசாங்கம் மற்றும் நாடா ளுமன்றத்திற்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடுதான்.
அமைச்சரவை, நாடாளுமன்றம் மற்றும் அரசமைப்புச் சட்டப் படி தன்னாட்சி பெற்ற இந்திய தொலைத் தொடர் புக் கட்டுப்பாடு அமைப்புபின் (TRAI) கருத்துடன் உயர் தணிக்கை அதிகாரி கருத்து வேறு பாடு கொண்டிருக்கிறார் என்று தோன்றுகிறது. இவ்வாறு அமைப்புகள் தவறான வழிகளைப் பின்பற்றுவதை நீதித் துறையோ அல்லது நாடாளுமன்றமோ தலையிட்டு சரி செய்ய வேண்டும் என்பதே எனது கருத்து.
கேள்வி: இந்தக் கொள்கையால் அரசுக்கு 1.77 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று எதிர்க் கட்சிகள் கூறுவதற்கு என்ன பதில ளிக்கிறீர்கள்?
ஆ.இராசா : இந்து நாளிதழுக்கு நான் அளித்த எனது முந்தைய பேட்டியில் நான் விளக்கி யுள்ளபடி, இதில் உள்ள அடிப்படைக் கேள்வி என்னவென்றால், ஏன் 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் விடப்படவில்லை என்பது தான். மத்திய அமைச்சர வையால் ஒப்புதல் அளிக்கப்பட்டு, நாடா ளுமன்றத்தால் பின் னேற்பு அளிக்கப்பட்ட 1999 தேசிய தொலைத் தொடர்புக் கொள்கை யின்படி ஏலம் விட முடியாது. பத்தாம் அய்ந்தாண்டு திட்டம், பதினோராம் அய்ந் தாண்டு திட்டம் மற் றும் தொலைத் தொடர் புக் கட்டுப்பாட்டு அமைப் பின் (TRAI) பரிந்துரைகள் (NTP 99) கொள் கையை ஒட் டியே அமைந்துள்ளன. இந்த (NTP 99) கொள் கையில் ஏதேனும் மாற் றம் செய்யப்பட வேண் டும் என்றால் அது நாடாளுமன்றத்தி னால் மட்டுமே செய்யப்பட வேண்டும்.
தற்போது நடை முறையில் உள்ள புதிய ஒருங்கிணைந்த சேவை அணுகுமுறை உரிமங் கள் மற்றும் 2-ஜி ஸ்பெக்ட்ரம் வழங் கும் கொள்கை 2003 நவம் பர் மாதத்திலிருந்து தொடர்ந்து பின்பற்றப் பட்டு வரும் வெளிப் படையான கொள்கை யாகும். 2003 அக்டோ பர் 31 அன்று அமைச் சரவை ஒப்புதல் அளித்த கொள்கையில் இருந்து எந்த பிறழலும் இல்லை. உரிமம் வழங்கல், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு, அதற்கான கட்டண நிர்ணயம் ஆகியவை பற்றி நிர்ண யிக்கப்பட்ட கொள் கையையே 2003 நவம் பர் முதல் இன்று வரை தொடர்ந்து வந்த அர சுகள் கடைப்பிடித்து வந்துள்ளன.
தொலைத் தொடர் புத் துறையின் வரி விதிப்பு மற்றும் கட்டுப் பாடு பற்றிய அரசின் தாராளமான கொள்கை, வருவாய் ஈட்டல் என் பதற்கு இரண்டாம் இடத்தையே அளித்து, முன்னேற்றம் என்பதற்கே முதலிடம் அளித்தே தொடர்ந்து இருந்து வந்துள்ளது, இருந்து வருகிறது. தொலைத் தொடர்பு இணைப்புகள் அடர்த்தியில் மிகப் பெரிய உயர்வை ஏற்படுத்தி, முன்பு எப் போதும் காணாத அளவிலான வளர்ச்சிக்கு வழி கோலியதால் இக்கொள்கைகள் மாற்றப் பட வில்லை. 2010 செப்டம்பர் நிலையில் கிராமப்புறங் களில் தொலைத் தொடர்பு இணைப்புகள் 28.46 விழுக்காடு அதிகமாகி உள்ளன. தொலைபேசி இணைப்பு அடர்த்தி நகர்ப்புறம் மற்றும் கிராமப் புறம் இரண்டுக்கும் சேர்த்து சராசரியாக 60.99 விழுக்காடு வளர்ச்சி பெற்றுள்ளது. 11 ஆவது அய்ந்தாண்டு திட்டத்தின் இலக்கு 60 கோடி தொலை பேசிகள் என்று இருந்த போதும் இப்போது 72.3 கோடி இணைப்புகள் உள்ளன. மேலும், ஆண்டு உரிமக் கட்டணம் மற்றும் ஸ்பெக்ட்ரம் கட்டண வருவாய் அரசின் வரி இல்லாத மிகப் பெரிய வருவாய்த் தொகுப்பாகும். வருவாய் பங்கீடு முறையில், 2010 மார்ச் வரை அரசு 77,938 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. 6.2 MHz யைக் கடந்து ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டதால் இந்த வகையில் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு என்று ஊகிக்கப் படும் தொகை 36, 729 கோடி. கூடுதலாக ஒரு விழுக்காடு வருவாய் பங்கீடு என்ற அடிப்படையில், (ஒப்பந்த உரிமைகளுக்கு அதிக மான ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுக்கு எந்த வித முன்கட்டணமும் இன்றி), குறிப்பிட்ட அளவு தொலைத் தொடர்பு இணைப்புகள் எட்டப்படும் வரை, சேவை அளிக்கும் நிறுவனங்களின் கோரிக் கையின்படி, 6.2 MHz க்கு மேலாக MHz10 வரை ஒதுக்கீடு செய்யப்பட இடம் இருக்கும் வரை ஒதுக்கீடு செய்வது என்று 2002 ஜனவரி 31 அன்று அப்போதைய அமைச்சர் பிரமோத் மகாஜன் முடிவு எடுத்தார் என்பதற்கான விவரங்கள் எனது அமைச்சகத்தில் உள்ளன.
அடுத்த அமைச்சர் அருண் ஷோரி 6.2 விழுக் காட்டுக்கும் அதிகமாக 21 MHz-யையும், தயாநிதி மாறன MHz38.8-யையும் ஒதுக்கீடு செய்துள்ளனர். நான் 12.6 ஆழண-யை ஒதுக்கீடு செய்துள்ளேன். இவ்வாறு நான் ஒதுக்கீடு செய்யும்போது, 6.2 ஆழணக்கும் அதிகமாக ஒதுக்கப்படும் ஸ்பெக்ட்ரத் திற்கு அரசு அவ்வப்போது முடிவு செய்து விதிக்கும் கட்டணம் செலுத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனையையும் நான் விதித்திருந்தேன். ஒப்பந்தத்திற்கு அதிகமான ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப்படுவதால் இவ்வாறு கூடுதல் தொகை விதிக்கப்படும் என்று கூறப்பட்டது.
இவ்வாறு நான் கூறுவதால், எனது பொறுப்பை எனக்கு முன்பிருந்த அமைச்சர்கள் மீது சுமத்து கிறேன் என்பது பொருளல்ல. 1999 ஆம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப் பட்டு வரும் நடைமுறையே இதுதான்.
இழப்பு என்று கற்பனை செய்து கூறுவதற்கு நியாயமான அடிப்படை ஏதுமில்லை; இது அறிவுக்குப் பொருத்தமான முறையில் கணக்கிடப் பட்டதும் இல்லை. ஊகத்தின் அடிப்படையில் இழப்பைக் கணக்கிடவே முடியாது. கொள்கை மற்றும் நடைமுறையில் (If) அப்படி இருந்தால், (But) ஆனால் என்ற சொற்களுக்கே இடமில்லை என்பதுதான் இதன் காரணம்.
இது பற்றிய விவாதம் நடத்தப்படுமானால், எதிர்க் கட்சிகளின் குற்றச்சாட்டுகள் ஆதாரம் அற்றவை என்பது வெளிப்பட்டு விடும் என்பதால், அவை நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் தடை செய்கின்றன.
கேள்வி: ஆனால், அரசுக்கு நீங்கள் மிகப் பெரிய இழப்பை ஏற்படுத்தி விட்டதாகக் கூறப்படுகிறதே. .
ஆ. இராசா : தொலைத் தொடர்புத் துறையில் இருந்த ஏகபோக ஆதிக்கத்தை நான் உடைத்து விட்டேன் என்பதால் என் மீது இத்தகைய வீண் பழிகள் சுமத்தப்படுகின்றன என்று நான் உறுதியாக நம்புவதற்கான காரணங்கள் உள்ளன. இதே கொள்கையின்படி ஏகபோக உரிமைகள் 1999 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு நான் அமைச்சராகப் பதவி ஏற்பதற்கு சில நாட்கள் முன்பு வரை நடைமுறையில் இருந்தன. ஆனால் வேறு எந்த அமைச்சர் மீதும் குறை கூறப்படவில்லை. 1998-99 ஆம் ஆண்டு தணிக்கை அறிக்கையைப் பாருங்கள். தற்போதுள்ள உரிமங் கள் வழங்கும் நடைமுறையில் இருந்து வருவாய்ப் பங்கீடு நடை முறைக்கு மாறுவது பற்றிய அரசின் கொள்கையை அது கடுமையாக விமர்சித்துள்ளது. சில கடுமையான குற்றச் சாட்டுகளும் அதில் இருந்தன. ஆனால் 2000 ஆம் ஆண்டுக்குப் பிறகு உயர்தணிக்கை அதிகார அமைப்பு இது பற்றி மவுனம் சாதித்துள்ளது; தனது பிந்தைய ஆண்டு களின் அறிக்கைகளில் தொலைத் தொடர்பு அமைச் சகத்தை அது எந்தக் கேள்வியுமே கேட்கவில்லை. உரங்கள், பெட்ரோல், பொது விநியோகத் துறை மூலம் வழங்கப்படும் உணவுப் பொருள்கள் ஆகியவற்றுக்காக அரசு அளிக்கும் மானியத்தை உதாரணமாக எடுத்துக் கொண்டு, இந்த இழப்பு எப்படி கற்பனையானது என்பதை நான் விளக்குகிறேன். இப்பொருள்களுக்கான சந்தை விலையை நீங்கள் கணக்கில் எடுத்துக் கொண்டு, அரசு மிகக் குறைந்த விலையில் இவற்றை விற்றதால், அரசுக்கு இத்தனை ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டது என்று கூறினால், அதை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியுமா?
சரியான, நியாயமான காரணத்துடன் உருவாக்கப் பட்ட கொள்கை ஒன்று உள்ளது. அவ்வப்போது முக்கியமான பிரச்சினைகளில் முடிவு எடுக்கும் அரசமைப்புச் சட்ட அதிகாரம் பெற்ற அமைப்பும் உள்ளது. NTP கட்டளைப்படி வருவாய்ப் பங்கீடு முறை ஒன்றே நம் முன் இருந்தது.
கேள்வி: ஸ்பெக்ட்ரம் பிரச்சினையில் சட்டம், மற்றும் நிதி அமைச்சகங்களின் அறிவுரைகளை நீங்கள் ஏன் அலட்சியப்படுத்தினீர்கள்? பிரதமரின் ஆலோசனையையும் நீங்கள் அலட்சியப்படுத் தினீர்கள் என்ற குற்றச்சாட்டும் உங்கள் மீது உள்ளது.
ஆ. இராசா: சட்ட அமைச்சகத்தின் ஆலோசனை அவர்களால் தானாக மேற்கொள்ளப்பட்டது அல்ல. குறிப்பிட்ட அளவு ஸ்பெக்ட்ரம் மட்டும் ஒதுக்கீடு செய்ய எஞ்சி இருக்கும் நிலையில், மிக அதிக அளவில் பெறப்பட்ட விண்ணப்பங்களை எப்படிக் கையாள்வது என்பது பற்றி ஆலோசனை கேட்டு எங்கள் அமைச்சகத்திலிருந்து சட்ட அமைச்சகத்திற்கு ஒரு கடிதம் எழுதப்பட்டது. எங்கள் குறிப்பிலேயே சில வழிமுறைகளை நாங்கள் ஆலோசனையாகத் தெரிவித்திருந்தோம்.
இதைப் பற்றிய கருத்தைத் தெரிவிப்பதற்கு மாறாக, இது அமைச்சர்கள் குழுவிற்கு அனுப்பப் பட வேண்டும் என்று சட்ட அமைச்சகம் தெரிவித்தது. சட்ட அமைச்சகத்தின் ஆலோசனை ஸ்பெக்ட்ரம் விலை நிர்யணம் செய்வது பற்றியதோ, அல்லது வருவாய் பங்கீடு அளவு பற்றியதோ அல்ல. ஒதுக்கீட்டுக்கு இருக்கும் ஸ்பெக்ட்ரத்தை முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்று தற்போது நடைமுறையில் உள்ள கொள்கையையே பின்பற்ற தொலைத் தொடர்புத் துறை அமைச்சகம் விரும்பு கிறது என்ற விளக்கமும் பிரதமர் அவர்களுக்குத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
2001 இல் நிர்ணயிக்கப்பட்ட நுழைவுக் கட்ட ணம் மாற்றப்படவேண்டும் என்று நிதி அமைச்சகம் தொலைத் தொடர்புத் துறைச் செயலாளருக்கு ஒரு கடிதம் எழுதியது. நுழைவுக் கட்டணம் நிர்ண யிப்பது ட்ராய் அமைப்பின் அதிகார வரம்பின் கீழிருந்தது என்பது உண்மைதான். வருவாய்த் துறை அமைச்சகத்தின் பிரதிநிதி உறுப்பினராக உள்ள தொலைத் தொடர்பு ஆணையம் ஏற்கெனவே ஒப்புதல் அளித்துவிட்டபடியால், நுழைவுக் கட்டணம் மாற்றப்படத் தேவையில்லை என்ற உறுதியான, திட்டவட்டமான பரிந்துரையை 2007 இல் ட்ராய் அளித்த போது, தொலைத் தொடர்புத் துறைச் செயலாளர் ட்ராய்யின் பரிந்துரைகள் பற்றி குறிப்பிட்டு நிதி அமைச்சகத்திற்கு பதில் ஒன்று எழுதினார். அத்துடன் இப்பிரச்சினை பற்றிய கடிதப் போக்குவரத்து முடிவுக்கு வந்தது.
இதே போன்று, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மற்றும் தொலைபேசி சந்தாதாரர் அடிப்படைத் தத்துவம் பற்றி பெறப்பட்ட சில கடிதங்கள் பிரதமர் அலுவலகத்திலிருந்து அனுப்பப்பட்டிருந்தன. இது பற்றிய அனைத்துப் பிரச்சினைகள் பற்றியும், அவை மீது மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ள நடவடிக் கைகள் பற்றியும் பிரதமருக்குத் தெரிவிக்கப்பட்டது. அவற்றை பிரதமரும் ஏற்றுக் கொண்டார். ஒரு கேபினட் அமைச்சர் மற்ற கேபினட் அமைச்சகங்களுடன் கடிதத் தொடர்பு வைத்துக் கொள்வதும், பிரத மருடன் கேபினட் அமைச்சர்கள் தொடர்பு வைத்துக் கொள்வதும் சாதாரணமான வழக்கம் தான். பிரதமருக்கும் எனக்கும் நடைபெற்ற கடிதப் போக்குவரத்தின் அடிப்படையில் மட்டுமே பிரத மரின் ஆலோசனையை நான் புறக்கணித்தேன் என்று ஊகித்து எவராலும் கூறமுடியாது.
கேள்வி: உரிமங்கள் ஒதுக்கீடு செய்வதற்கான இறுதி நாளை வேண்டுமென்றே நீங்கள் ஏன் மாற்றினீர்கள்?
ஆ.இராசா: முதலில் விண்ணப்பித்தவர் விண்ணப் பம் முதலில் பரிசீலிக்கப்பட வேண்டும் என்பதால், முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற கொள்கை பின்பற்றப்படும் நிலையில், இறுதி நாள் என்பது பொருளற்றதாக ஆகிவிடுகிறது. உத்தேச மாக ஒதுக்கீடு செய்யப்பட இருக்கும் ஸ்பெக்ட்ரம் அளவு மற்றும் 2007 செப்டம்பர் 25 அன்று செய்திக்குறிப்பு வெளி யிடப்படும் வரை பெறப்பட்ட அனைத்து விண்ணப் பங்களும் பரிசீலிக்கப்பட்டன. இதில் முக்கியமான கேள்வி என்னவென்றால், எவரது விண்ணப்ப மாவது கவனிக்கப்படாமல் இருந்ததா, முன்னுரிமை கடைபிடிக்கப்படவில்லையா என்பதுதான்.
எஞ்சியுள்ள விண்ணப்பங்கள் ஒதுக்கீடு செய்யப் பட உள்ள ஸ்பெக்ட்ரம் அளவுக்கு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. எஞ்சிய விண்ணப் பங்கள் நிராகரிக்கப் பட்டன என்பது ஊடகத் துறையில் உள்ள சிலரின் தவறான கருத்தாகும்.
கேள்வி: குறி வைத்து நீங்கள் தாக்கப்படுவது ஏன் என்று கருதுகிறீர்கள்?
ஆ.இராசா: தொலைத் தொடர்புத் துறையில் மாற்றங்களை விரும்பாத பெரும் எண்ணிக்கையிலா னவர்கள் ஒன்று சேர்ந்து எனக்கு எதிராக செயல்படுகிறார்கள் என்ற நம்பிக்கைக்கு நான் தள்ளப்பட்டுள்ளேன். எடுத்துக் காட்டாக, நகர்வு எண் (Number Portability) முறையை எதிர்ப்பவர்கள் சிலர் இருக்கிறார்கள். இது என்னை ஒழித்து விடும் என்று அறிவித்துள்ள என்னை எதிர்ப்பவர்கள் குழு ஒன்று உள்ளது. ஊடகத்தின் மீது அதிக பெரும் செல்வாக்கையும், அதிகாரத்தையும், செல்வத்தையும் அது பெற்றுள்ளது. இந்த நிகழ்வுகளை சில அரசியல் கட்சிகள் தி.மு.க.வுக்குக் களங்கம் கற்பிக்கப் பயன்படுத்திக் கொள்கின்றன. ஆனால் உண்மை என்ன வென்றால் மக்கள் பயன் பெற்றுள்ளனர் என்பதுதான். அரசாலும், என்னாலும் பின்பற்றப்பட்ட கொள்கை களும், மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுமே இதற்கான காரணங்கள். 
கேள்வி: அளிக்கப்பட்ட 125 உரிமங்களில், 85 நிறுவனங்கள் தகுதிக்கான நிபந்தனைகளை நிறைவு செய்யாதது ஏன்?
ஆ.இராசா: மறுபடியும் இக்கருத்து அர்த்தமற்ற தாகும். அரசமைப்புச் சட்டம் 149 ஆவது பிரிவைத் தாண்டி உயர் தணிக்கை அதிகாரி எந்த அதி காரத்தையும் செலுத்தவோ, உயர்நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றத் திற்கு மட்டுமே அரசமைப்புச் சட்டத்தின் 32 அல்ல 226 பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைச் செலுத் தவோ, முயற்சிக்க முடியாது. கம்பெனிகளின் பெயர் கள் மற்றும் அவற்றின் நிகர நிதி நிலைத் தகுதி பற்றிய விண்ணப்ப தேதியன்றைய விவரங்கள் கம்பெனி களின் பதிவாளரிடம் இருக்க வில்லை என்பதால், நோக்க மாறுதல் பற்றி தணிக்கை அறிக்கையில் தகுதி அற்றவை என்று தெரிவிக்கப் பட்டிருப்பது விளக்கப்பட வேண்டும். நிறுவனங்கள் தாங் களாகவே அளிக்கும் உறுதி மொழியை நாங்கள் நம்பியிருக்கிறோம். கம்பெனி களின் பதிவாளர் ஆவணங்களில் பதிவு செய்வது என்பது ஒரு நடைமுறை மட்டும்தான். முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, கம்பெனி செயலாள ரால் சான்றளிக்கப்பட்டிருந்தால், பிந்தைய நாளில் ஒரு கம்பெனி பதிவு செய்யப்பட்டிருப்பதால், சட்டப் படி எந்தத் தவறும் இல்லை என்ற கருத்தை சட்ட அமைச்சகம் தற்போது தெரிவித்துள்ளது.
கேள்வி: NTP 99 என்பது தவறான கொள்கை என்பதை நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா?
ஆ. இராசா: இல்லை. NTP 99 இன் கீழான கட்டளை உணர்வு மற்றும் எழுத்து பூர்வமாக இன்று நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. ஆட்சி அதிகாரம் செலுத்தும் அரசியல் கட்சி மாற்றம் அடைவ தால் மட்டும், அரசின் கொள்கைகளும் மாற்றம் செய்யப் பட வேண்டும் என்பதல்ல. NTP 99 தேசிய ஜனநாயகக் கூட்டணி (NTP) அரசால் உருவாக்கப் பட்டது. பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி அதனை உருவாக் கியது என்பதற்காக மட்டுமே அதை மாற்ற வேண்டும் என்று நான் விரும்பவில்லை. அப் போதைய அரசின் தொலை நோக்குப் பார்வை சரியானதுதான் என்ற எனது கருத்தை நான் நாடாளுமன்றத்திலும் பகிர்ந்து கொண்டுள்ளேன்.
கேள்வி: உயர் தணிக்கை அதிகாரியின் தணிக்கை அறிக்கையின் உங்கள் மீது குற்றம் சாட்டப் பட்டுள்ளதை அடுத்து என்ன நடக்கும்? நீங்கள் பதவி விலகுவீர்களா?
ஆ.இராசா: உயர் தணிக்கை அமைப்பை நான் மதிக் கிறேன். தணிக்கைக்கான அரசமைப்புச் சட்டப்படி அதிகாரம் பெற்ற அமைப்பு அது. ஒரு தனிப்பட்ட வரைத் தண்டிக்கும் அல்லது அரசின் கொள்கைகளின் மீது முடிவுகளை மேற்கொள்ளும் நீதித்துறை தீர்ப்பாக தணிக்கை அதிகாரியின் அறிக்கையை எடுத்துக் கொள்ள முடியாது.
மேலும், 2000 இல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 1998-99 ஆம் ஆண்டு தணிக்கை அறிக்கையிலும் அரசுக்கு எதிராக இது போன்ற குறிப்புகள் இடம் பெற்றிருந்தன. பொதுக் கணக்குக் குழுவோ அல்லது நாடாளுமன்றமோ அந்தக் கொள்கையை மாற்றுவது பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை. பொதுக் கணக்குக் குழுவின் நட வடிக்கைகள், ஆலோசனைகள் ஏதும் இல்லாத நிலையில், 2010 வரை உயர்தணிக்கை அமைப்பு எந்த விதக் குறைகளையும் காணவில்லை. இது பற்றி உயர் தணிக்கை அதிகாரிதான் விளக்கம் தரவேண்டும்.
பொதுவாழ்வில் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாற்றிக் கொள்வதும், விளக்கங்கள் அளிப்பதும் சகஜமானவைதான். நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணய்யர் கூறியபடி, எவ்வளவு பெரியவர்களானாலும், சட்டத்தினும் மேலானவர்கள் எவருமில்லை; அடக்கமானவர்கள் எவரும் சட்டத்திற்குக் கீழான வர்களும் இல்லை. சட்டம் தன் கடமையைச் செய்யட்டும். ஒரு களங்கத்துடன் நான் செல்ல விரும்பவில்லை.
- நன்றி: தி ஹிந்து 14-11-2010
தமிழில் த.க.பாலகிருட்டிணன்.
நன்றி: விடுதலை 

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
சரியான நேரத்தில் சரியான பதிவு. வாழ்த்துக்கள்.
PERIYARDASAN இவ்வாறு கூறியுள்ளார்…
DIHAR JAIL KKU ANUPPIYUM NEENGA INNUM THIRUNTHALAYAE............

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்....

நான் வாய்விட்டு உரக்கப்பாடி மகிழ்ந்தது போல் நீங்களும் கேட்டு, பாடி மகிழ வேண்டாமா? இதோ புரட்சிக் கவிஞர் ஓங்கி ஒலித்த "சங்கே முழங்கு" பாடல் கலங்கரை விளக்கம் திரைப்படத்திலிருந்து.... KalangaraiVilakkam... சங்க நாதம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றூதூது சங்கே! பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்! வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்! எங்கள் வாழ்வும்...... -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owner - Dinam